அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, February 18, 2009

தமிழக அரசுக்கு நன்றி

சென்னை, பிப். 17:
உலமாக்கள் நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியம், இந்திய தவ்ஹுத் ஜமாஅத், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் செ. ஹைதர் அலி: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸôக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், முஸ்லிம் அநாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்காக "உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர் நலவாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

இந்திய தவ்ஹுத் ஜமாஅத்தின் பொதுச் செயலர் ஏ. முகம்மது சித்திக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் பொதுச் செயலர் ஹக்கீம் சையது சத்தார் ஆகியோரும் உலமாக்கள் நலவாரியம் அமைத்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template