அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, June 30, 2009

இவ்வாண்டு புதிய முஸ்லிம் மருத்துவ மாணவர்கள்

இவ்வாண்டு MBBS/BDS தர மதிப்பீட்டில் முதல் முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் முதல் 50 இடங்களை பெற்ற நம் சமுதாய மாணவ,மணிகள் ...
முஸ்லிம்கள் மொத்தம் 755 பேர் MBBS/BDS படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிறப்பாக பயின்று சேவையாற்ற நாமும் வாழ்த்திப் பிரார்த்திப்போம்.
நன்றி:
முஹம்மது இஸ்ஹாக்

Friday, June 26, 2009

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு

வடலூர் ஜுன் 25,

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு 21.06.2009 அன்று வடலூர் நகரில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.

பொதுகுழுவில் மாநில செயலாளர் அப்துல் ரஜாக், மாநில பேச்சாளர் அப்துன் நாசிர் ஆகிய மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
பொதுக்குழுவில் மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் கண்தான பதிவு மையம் அமைப்பது.

மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் திருமண தகவல் மையம் அமைப்பது.
.
ஆகஸ்ட் மாதத்தில் தவ்ஹித் ஏழுச்சி மாவட்ட மாநாடு நடத்துவது.

வட்டி இல்லா கடன் திட்டத்தை அணைத்து கிளைகளிலும் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Thanks:
Raisudeen

Friday, June 19, 2009

தெளிவு பிறந்தது! வழி திறக்க வேண்டும்! பேராசிரியர் காதர்மொகிதீன்...

டெல்லிக்குச் சென்றிருந்தேன். மூன்று நாட்கள் தங்கி, எம்.பி.க்குத் தந்திருந்த வீடு மற்றும் அனைத்துப் பொருட்களையும் திரும்பவும் அரசிடம் ஒப்படைத்து விட்டு வரவே சென்றிருந்தேன்.

ஐந்தாண்டு காலமாக டெல்லி வீட்டில் எனக்குத் தரப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் சாதனங்கள்யாவும் தொகுதி மற்றும் சமுதாய பணிகளுக்கு பயன்பட்டன. சகோதரர் முஹம்மது குட்டி, சந்திரிகா நாளிதழின் டெல்லி நிருபர் சிறந்த இயக்கப் பணி புரிந்து வரும் அவர் எனக்கு உதவியாக செயல்பட்டார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளர்களில் ஒருவரான இளைஞர், துடிப்பும் - கொள்கைப் பிடிப்பும் மிகுந்த குர்ரம் அனீஸ் உமர் எனது டெல்லி இல்லத்தில் என்னுடன் இணைந்து முஸ்லிம் லீக் அலுவலகப் பணிகளை செயல்படுத்தி கவனித்து வந்தார். டெல்லி பிரதேச துணைச் செயலாளர் நூர் ஷம்ஸ், டெல்லி இல்லத்தை நிர்வகித்து வந்தார். எனது பாராளுமன்ற பணிச் செயலாளராக அருமையாகச் சேவை செய்தார்.
டெல்லியில் இருந்த ஐந்தாண்டும் ஒரு மாதமும் இவர்களின் துணையும், பணியும் எனக்குப் பெரும் உந்து சக்திகளாக இருந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த முத்துபாட்சா, ஆறுமுகம், ஒரத்த நாடு சிவா ஆகியோரின் சேவையும் - பணியும் எனக்குப் பெருந் துணைபுரிந்துள்ளன.
ஐந்தாண்டு பாராளுமன்றப் பணிக்காலத்தில் டெல்லியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இயக்க வளர்ச்சிக்கு என்னால் ஆனதைச் செய்ய முடிந்தது. அதற்காகவே இறைவனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

கேரளாவில் முஸ்லிம் லீக் எழுச்சியோடு வெற்றிப் பாதையில் செல்கிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் வெற்றிப் பயணத்தைத் துவங்கி நம்பிக்கையோடும், எழுச்சியோடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த எழுச்சி வரலாற்றை இந்தியா முழுவதிலும் உருவாக்க வேண்டும் என்னும் அவா வடபுலத்து முஸ்லிம்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இந்த ஆர்வத்துக்குச் செயல் வடிவம் கொடுத்து ஆக்கப் பணியாக மாற்றும் வகையில் நமது ஐந்தாண்டு காலப் பொழுது கழிந்திருக்கிறது.

டெல்லியில் தங்கியிருந்த இந்த மூன்று நாட்களில் டெல்லி பிரதேச முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அதன் தலைவர் மர்கூப் ஹ{சேன் தலைமையில் வந்து சந்தித்தனர்.

அவர்களுக்கு இடையில் இருந்த உள் பிரச்சி னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, முஸ்லிம் லீக் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
டெல்லி ஷாஜஹானாபாதில் உள்ள ஜாமிஆ மஸ்ஜிது எதிரில் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இருந்து முஸ்லிம் லீக் அலுவலகம் இயங்கி வருகிறது. நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி அங்கே எப்பொழுதும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும். அந்த அலுவலகத்துக்கு முஸ்லிம் லீக் இதுவரை வாடகை கொடுத்து வந்துள்ளது.


அதனை இப்பொழுது கிரயம் செய்து முஸ்லிம் லீகிற்கு வாங்கும் எண்ணமும், சூழ்நிலை யும் ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி பிரதேச முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் இந்தப் புதிய முயற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து உற்சாகப் படுத்தும் உதவிகள் வர வேண்டும் என்று விரும்புகி றோம். இந்தியத் தலைநகர் டெல்லி பட்டணத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது சொந்தக் கட்டிடத்தில் அலுவலகம் வைத்திருக்கிறது என்ற புதிய சரித்திரம் தொடர வழிவகுக்கும்.

உத்தரகாண்டம் மாநில முஸ்லிம் லீகினர் மிகுந்த ஆர்வத்தோடு டெல்லி வந்தனர். அந்த மாநிலத்தில் (70) எழுபது தொகுதிகள் அடங்கிய சட்டப் பேரவை இருக்கிறது. டெல்லியிலும் எழுபது தொகுதிகள்தாம் உள்ளன.

உத்தரகாண்டம், உத்திரப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலம். இதற்கு முதலில் உத்ராச்சலம் என்று பெயரிட்டனர். பின்னர் உத்தரகாண்டம் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

இந்த மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் 24 தொகுதிகளில் முஸ்லிம்கள் 35 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வாழ்கின்றனர். பெரும்பாலும் மலைப்பிரதேசமாக உள்ள இந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் மார்க்கப்பற்று, பிடிப்பு, ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சட்டசபையில் மூன்று முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மூவரும் பகுஜன் சமாஜ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள். உத்தரகாண்ட முஸ்லிம் லீக் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறது. முஸ்லிம் லீக் 14 சட்டமன்ற தொகுதிகளில் பலமாக இருக்கிறது. தற்போது விகாஸ் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. இதில 86 ஆயிரம் வாக்குகள், அதில் 34,500 முஸ்லிம் வாக்குகள். இங்கே 65 மஸ்ஜிதுகளும், 18 மதரஸாகளும் உள்ளன. முன்பு இதில் முஸ்லிம் லீக் 120 வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. தற்போது இடைத் தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்போடு அந்த மாநில நிர்வாகிகள் வந்தனர். அவர்களின் ஆர்வத்துக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் நல்வாழ்த்துக்ளைத் தெரிவித்தேன். வடபுலத்தில் முஸ்லிம் லீகின் சார்பில் சிறிதளவு பொருளாதார உதவிகள் புரிந்தால் போதும்@ அதிசயம் ஏற்படும் அளவுக்கு முஸ்லிம் லீகினர் அரசியல் நடத்துவர் என்ற உண்மை மட்டும் தெளிவாகப் புரிந்தது.

மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஸிதாபா, மால்டா, நதியா ஆகிய மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வந்து டெல்லியில் என்னைச் சந்தித்து அவர்களின் மாநில முஸ்லிம் லீக் வளர்ச்சி குறித்து ஆலோசனையை நடத்த வந்தவர்கள் என்னிடம் தந்த அவர்களின் முகவரிகளைப் பார்த்தேன்.

எனக்கு ஒரே வியப்பு! ஆச்சரியம்!

எல்லோரும் பட்டதாரிகள் பலர் மூன்று எம்.ஏ. படித்தவர்கள் சிலர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் சிலர் கல்லூரி விரிவுரையாளர்கள் சிலர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் அரசு மதரஸா கல்வி நிறுவனங் களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள். முஸ்லிம் லீகில் அரசு ஊழியர்களும், கல்வியாளர்களும், மார்க்க அறிஞர் களும் மேற்கு வங்கத்தில் இருக்கிறார்கள். தமிழக நிலைமையை நினைத்து ஒப்பிட்டுப் பார்த்த போது, மிகுந்த வருத்தமும், வேதனையும்தான் ஏற்பட்டது.

எல்லா கட்சிகளிலும் அரசு பணிபுரிவோர் அங்கம் வகிக்கிறார்கள். முஸ்லிம் லீக் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் முஸ்லிம் லீக் ஆர்வலர்களை எல்லாத் தரப்புகளில் இருந்தும் இயக்கத்தில் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என்ற தெளிவு பிறந்தது! இனி வழிதான் திறக்க வேண்டும.

Sunday, June 14, 2009

இலண்டன் மாநாட்டில் தமுமுக, ஜாக் தலைவர்கள்!

இலண்டன் ஜூன் 14

இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!

எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது.
மநாட்டில் தமிழ்நாடு JAQH அமைப்பின் அமீர் மெளலவி S. கமாலுதீன் மதனி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு

உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை,

இஸ்லாமிய வட்டியில்ல கடன்,

படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே!

என்ற தலைப்புகளில் பேசினார்கள்.
பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.




Saturday, June 13, 2009

இலங்கை தமிழ் முஸ்லிம் மற்றும் மாற்றுமத சகோதர்களின் மனித உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்

லண்டன் வருகைதந்துள்ள தமுமுக தலைவர் Dr, M.H. ஜவாகிருல்லா அவர்களிடம் இலங்கை தமிழ் முஸ்லிம் மற்றும் மாற்றுமத சகோதர்களின் மனித உரிமைகள் பற்றிய கலந்துரையாடல் லண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையத்தில் நடைப்பெற்றது.

லண்டனில் நடைப்பெற்ற இஸ்லாம் கூறும் மனித உரிமை நிகழ்ச்சியின் புகப்படங்கள்

13.06.2009 இன்று லண்டனில் நடைப்பெற்ற இஸ்லாம் கூறும் மனித உரிமை நிகழ்ச்சியின் புகப்படாங்கள்.















Friday, June 12, 2009

லண்டன் இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் வழங்கும் உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!!

நாள் : 14.06.2009 ஞாயிறு 4:00- PM T PM To 9:00 PM

இடம்: PLASHET SCHOOL { OLD BUILDING }
Plashet Grove, East Ham, LONDON E6 1DG

சிறப்புப் பேச்சாளர்கள்:

மெளலவி S.கமாலுதீன் மதனி
{ அமீர் JAQH,தமிழ்நாடு }

மெளலவி ஹாபிழ் யஹ்யா
அஷ்ஷெய்க் M.மன்சூர் நளீமி
மெளலவி H.M.மின்ஹாஜ்


சிறப்பு விருந்தினர்

Dr, M.H.ஜவாஹிருல்லாஹ்
{ தலைவர் தமுமுக }

இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்
லண்டன்

Sunday, June 7, 2009

காயிதெ மில்லத் நினைவிடத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உருக்கம்


இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதெ மில்லத்துடன் என்னுடைய சின்னஞ்சிறு வயதிலிருந்தே தொண்ட னாக பணியாற்றி இருக்கி றேன். காயிதெ மில்லத்தால் ஹதளபதி என்று அன்புடன் அழைக்கப்பட்டேன்.

காயிதெ மில்லத் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, லால் பேட்டை நகர முஸ்லிம் லீக் முதுபெரும் தலைவர் தா. அப்துல் ஹலீமுடன் காயிதெ மில்லத்தை பார்க்க சென்றிருந்தேன்.

தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காயிதெ மில்லத்தை பார்ப் பதற்கு நாடெங்குமுள்ள முஸ்லிம் லீக் தலைவர்க ளும், தோழமைக் கட்சி களின் தலைவர்களும் பார்க்க வந்திருந்தனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பெருந் தலைவர்களில் ஒருவரான சங்கைமிகு அப்துர் ரஹ்மான் ஃபாபகி தங்ங ளும் காயிதெ மில்லத்தை பார்க்க வந்தார். காயிதெ மில்லத் ஃபாபக்கி தங்ஙள் சில அவ்ராத் தொகுப்பு கிதாபை கொடுத்து ஓதச் சொன்னார்.

குர்ஆன் ஷரீப் சூராக் களை ஓதி வந்தேன். மரண நிலையில், சகராத் நிலையி லிருந்த காயிதெ மில் லத்தை நோக்கி வந்தேன். அப்போது காயிதெ மில்லத்தை பார்ப்பதற்கு அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் வந்தி ருந்தார்.

காயிதெ மில்லத் கரத்தை பிடித்து கண்ணீர் வடித்து கலைஞர் அழுத காட்சியை கண்டு நாங்க ளெல்லாம் அழுதோம்.

சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அன்றைய கேரள கல்வி அமைச்சர் சி.எச். முஹம்மது கோயா மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடி தலைவர்களும் உடனிருந்தார்கள். காயிதெ மில்லத் மறைவெய்திய நேரத்தில் அவர்களுடனிருந்து அவர் களுக்கு கஃபனிடும் போது நான் தலைப்பாகை கட்டி அணிவித்தேன். அந்த காட்சியை கண்ட காயிதெ மில்லத் மகன் மியாகான் லால்பேட்டை பட்ட மளிப்பு விழாவுக்கு தலைப் பாகை கட்டும் நிகழ்ச் சிக்கு காயிதெ மில்லத்தை அழைத்துச் செல்வீர்கள். இன்று நீங்கள் தலைப் பாகை கட்டினீர்கள் என்று கூறினார். இந்த காட்சி என் நெஞ்சை நெகிழ வைத்தது.

இன்று காயிதெ மில்லத் மண்ணறையில் காயிதெ மில்லத்துக்கு யாசீன் ஓதி துஆ செய்தபோது, தமிழக துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலினும், காயிதெ மில்லத் கட்டிக் காத்த முஸ்லிம் லீகை பாதுகாத்து வளர்த்து வரும் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அமைச் சர்களும், முஸ்லிம் லீக் முன்னோடிகளும், காயிதெ மில்லத்தின் கப்ரின் அருகில் இருந்து ஜியாரத் நிகழ்ச்சி யில் கலந்துகொண்டது எங்களின் நெஞ்சை நெகிழ வைத்தது.

காயிதெ மில்லத் கப்ரை அல்லாஹ் பிரகாச மாக்கி வைப்பானாக.

துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ர‌ஹ்மானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு

துபாய் ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் முனைய‌ம் 3ல் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ பொறுப்பேற்ற‌ பின்ன‌ர் முத‌ன் முறையாக‌ துபாய் வ‌ருகைபுரிந்த‌ எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வையின் சார்பில் வெள்ளிக்கிழ‌மை ந‌ள்ளிர‌வு மிக‌ச் சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சியில் அமீர‌க‌ காயிதே மில்லத் பேர‌வை துணைத்த‌லைவ‌ர் நூஹு சாஹிப், பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ.லியாக்க‌த் அலி, இணைச்செய‌லாள‌ர்க‌ள் ஹ‌மீதுர் ர‌ஹ்மான், ஹ‌மீது யாசின், பொருளாள‌ர் எம். அப்துல் க‌த்தீம், ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ஆம்பூர் ரியாஸ் அஹ்ம‌த், ஈமான் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், முத்துப்பேட்டை அமீர‌க‌ப் பேர‌வை, திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின‌ர், தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் குழுவின‌ர்,ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத், துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம், யுஏஇ த‌மிழ்ச் ச‌ங்க‌ம், புர‌வ‌ல‌ர்க‌ள், உல‌மாப் பெரும‌க்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

த‌ன்னுடைய‌ வெற்றிக்காக‌ பிரார்த்தித்த‌ அனைத்து ந‌ல்லுங்க‌ளுக்கும் த‌ன‌து ந‌ன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான்.


Wednesday, June 3, 2009

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி. அப்துல் ரகுமான் பேட்டி


வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் நாடாளுமன்ற உறுப்பினராக தான் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.


அதன் விபரம் வருமாறு:
நிச்சயம் எம்.பி.க்களின் இமேஜை மாற்று வொம். அதற்காக இப்போதே களத்தில் இறங்கிவிட்டோம். தெரு முனையிலே மைக் பிடித்து வாக்காளர்களுக்கு நன்றி சொல்லாமல், தேர்தலின் போது எப்படி வீடு, வீடாகச் சென்று வாக்கு கேட்டேனோ அதேபோல் வீடு வீடாக அனைவரையும் சந்தித்து நன்றி சொல்லி வருகிறேன்.


இந்த தொகுதியைச் சுற்றி வந்ததில் இருந்து குடிநீர் பிரச்சினைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது என்பது தெரிகிறது. முதலில் அந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுப்பேன். என் முழுநேரப் பணியே வேலூர் தொகுதியையும், அங்குள்ள மக்களையும் சுற்றி வருவதுதான். இந்தத் தொகுதி மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் என்னை ஆதரித்த பெருந்தன்மையுடைய வர்கள். அவர்கள் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றிக் கடனாக நானும் யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவருக்கும் பணியாற்றப் போகிறேன்.


மேலும், பொது மக்களுக்கான சேவையை நான் இளம் வயதில் இருந்தே செய்து வந்திருக்கிறேன். எம்.பி. பதவி என்பது எனக்கு மெருகூட்டுவதாக இருப்பதோடு, நிறைய பொறுப்புகளை யும் வைத்திருக்கிறது. நிச்சயம் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பார்க்க முடியாதவர்கள் எம்.பி.க்கள் என்ற இமேஜை உடைத்துக் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template