அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, October 27, 2009

லால்கான் பள்ளிவாசல் சொத்துக்களை பாதுகாக்க கோரி

சிதம்பரம்,அக்.27-
லால்கான் பள்ளிவாசல் சொத்துக்களை பாது காக்க வலியுறுத்தி சிதம் பரத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் லால்கான் பள்ளி வாசலில் ஊழல் நடந்த தாகவும்,அந்த பள்ளிவாசல் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் சிதம்பரம் ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்பு லால்கான் பள்ளிவாசல் மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க.மாநில துணை செயலாளர் ஜின்னா தலைமை தாங்கினார்.சிதம்பரம் வர்த்தக சங்கம் கட்டுமான பொருள் வணிகர் கூட்டமைப்பு தலைவர் அன்சாரி, நகரசபை உறுப்பினர் முகமது ஜியாவுதீன், இஸ் மாயில், முகமதுஅலி, அல்தாப் உசேன்,தாஜீதீன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷேக் தாவுத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சுக்கூர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மெகராஜ்தீன், முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் முகமது ஜெக் கரியா, மூப்பனார் பேரவை தலைவர் முகமது மக்கீன், ரகமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர பொருளாளர் தாஜிதீன் நன்றி கூறினார்.

Wednesday, October 21, 2009

சிறுபான்மையினரான நமக்கு பல அரசியல் கட்சிகள் எதற்கு?

லால்பேட்டை , அக் 21-
சிறுபான்மையினரான நமக்கு பல அரசியல் கட்சி கள் எதற்கு? முஸ்லிம்கள் அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒன்றுபட வாரீர் என தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ. எம். அபூபக்கர் அழைப்பு விடுத்தார்.

கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது-

வரலாற்று சிறப்பிற் குரிய லால்பேட்டை நகரில் சமுதாயத்தின் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற் றிட ஏற்பாடு செய்த தாய்ச் சபையின் செயல்வீரர்க ளுக்கு தலைமையின் சார் பில் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். லால்பேட்டையில் உள்ள மன்பவுல் அன்வர் அரபிக் கல்லூரி துவங்கப்பட்டு பல ஆயிரம் உலமாக்களை இச்சமுதாயத்திற்கு வழங்கி யிருக்கின்றது.

இப்பெரு நகரில் தாய்ச் சபையின் அழைப்புப் பணிக்காக நாங்கள் வந்தி ருக்கின்றோம். முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு எதிர்வரும் அக்டோபர் 24ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கின்றது. முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கின்றோம். இக்கூட் டம் தாய்ச்சபை வரலாற் றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் பத்து லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென தலைவர் பேராசிரியர் அவர்கள் நம்மை பணித் திருக்கின்றார்கள். உறுப் பினர் சேர்ப்புப் பணியை துரிதப்படுத்திடவும், அனைவரையும் உற்சாகப் படுத்திடும் நோக்கிலும் மூன்று வழிமுறைகளை கையாள வேண்டும். முத லில் முஸ்லிம் லீகில் இருக் கக் கூடிய உறுப்பினர்கள் அனைவர்களையும் நேரில் சந்தித்து ஈடுபாடு கொள்ள செய்ய வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்து ஈகோ பார்க் காமல் செயலாற்ற வேண் டும்.

அடுத்ததாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புக் களில் இருக்கக் கூடியவர்க ளையும் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீகில் பணிக ளாற்ற அழைக்க வேண் டும். பல்வேறு அமைப்புக் களிலிருந்து கொண்டு சமூக நலப் பணிகளாற்று வதில் எந்த தவறும் இல்லை. நாம் கூறுவதெல் லாம் அர சியல் ரீதியாக தாய்ச்சபையில் ஒன்று படுங்கள், ஆதரவு தாருங் கள் சிறுபான்மை யினராக இருக்கக் கூடிய நமக்கு இரண்டு - மூன்று அரசியல் கட்சிகள் தேவை இல்லை. இதனால் எந்த நன்மையும் இல்லை. தேசிய லீக், த.மு.மு.க, ம.ம.க, தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்களிலிருப்பவர்களும் சமுதாய பணியில் இருக்கக் கூடியவர்கள். நாம் எல் லாம் ஒரு கொடியில் பூத்த மலர்கள் தான்.

அனைவர் களையும் அரசியல் ரீதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒன்றுபடுத்தும் முயற்சியை நாம் தொடர்ந்து செய்ய வேண் டும்.

தேசிய லீக் துவங்கிய இடம் லால்பேட்டை, எனவே நாங்கள் இவ்வி யக்கத்தை கலைக்க மாட் டோம் என்று சிலர் இங்கு கூறி வருவதாக நான் அறிகி றேன். நான் அவர்களுக்கு பணிவோடு தெரிவிப்பது , இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீகை கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் நிறுவிய போது, தாய்ச் சபையை இந்நாட்டில் நிலைக்க உதவியவர்கள், உழைத்த வர்கள் லால்பேட் டையை சேர்ந்தவர்களும், இங்கு பயின்ற உலமா பெருமக் களும்தான்.

இதை பாதுகாக்க நீங்கள் கடமை பெற்றிருக் கின்றீர்கள் அல்லவா! சில காரணங்களால் தேசிய லீக் எனும் இயக்கம் தோன்றி இருக்கலாம். சிராஜுல் மில்லத் அவர்களாகட்டும் பன் மொழிபுலவர் அப்துல் லத்தீப் சாஹிப் ஆகட்டும் இவரும் சமுதாய ஒற்று மையை விரும்பியே வாழ்ந் தனர்.

சிராஜுல் மில்லத் தின் மறைவிற்கு ஒரு மாதத் திற்கு முன் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொன் விழா மாநாட்டின் போது அப்துல் லத்தீப் அவர் களுக்கு சிராஜுல் மில்லத் கைப்பட கடிதம் எழுதி தாய்ச்சபைக்கு அழைத் தார். அதே போல் சிரா ஜுல் மில்லத் மறைவிற்கு பின் வேலூரில் நடை பெற்ற இந்திய தேசிய லீக் மாநில மாநாடு நுழைவு வாயிலுக்கு சிராஜுல் மில்லத் பெயர் சூட்டப்பட் டது.

என்றும் இல்லாத அளவிற்கு இன்று முஸ்லிம் லீகின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பல்வேறு அமைப்பி னரும் தாய்ச்சபையில் இணைந்து வருகின்றனர். காஷ்மீரில் உள்ள கல்வி யாளர்களும், சமூக சேவ கர்களும், ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்களும் முழுமையாக தங்களை முஸ்லிம் லிகில் இணைத் துக் கொள்ள வற்புறுத்தி வருகின்றனர்.

இன்று தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களின் உண்மையான தோழன் முஸ்லிம் லீக் தான் என்று உணர்ந்து முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்.

அனைத்து தரப்பு சிறு பான்மையினரையும், தாழ்த்தப்பட்ட மக்களை யும் தாய்ச்சபையில் இணைத்து சமூக நல்லி ணக்க - சகோதரத்துவத் திற்கு கைகொடுக்கும் இயக்கம் முஸ்லிம் லீக் என்பதை நிலைநிறுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட தாய்ச் சபையின் உறுப்பினர் சேர்ப்புப் பணியில் முழு கவனம் செலுத்திட வேண் டும். மாநில தலைமை அறி விக்கக்கூடிய திட்டங்களை ஏதோ நாங்கள் சில பேர் கூறி வருகின்றோம் என்று இல்லாமல் தாய்ச்சபை அனைத்து மாவட்ட - நகர நிர்வாகிகளும் முழு கவனம் செலுத்தி, ஈடுபாட்டுடன் உறுப்பினர் சேர்ப்புப்பணி களை தீவிரப்படுத்த வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.

Thursday, October 15, 2009

Monday, October 12, 2009

உலகில் முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரிப்பு...

வாஷிங்டன்:உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த சமூகத்தவரின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180 கோடி வரை முஸ்லிம் சமூகத்தவரின் எண்ணிக்கை உள்ளது. லெபனான் முஸ்லிம் நாடு. இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். இதே போல சிரியா முஸ்லிம் நாடு. ஆனால் இந்தநாட்டை விட சீனாவில் முஸ் லிம்கள் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மற்றும் லிபியாவை விட, ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானிலும், எதியோப்பியாவிலும் சரிவிகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். உலகம் முழுவதும் 220 கோடி கிறிஸ்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.

அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமூதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக் கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவு வேறுபாடு ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. ஈரான், ஈராக்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

புதிய வரலாறை தொடர புறப்பட்டு வாருங்கள்! திருப்புமுனைக்கு திருச்சியில் வடிவம் கொடுப்போம்! -கே.எம்.கே


திருச்சியில் வரும் 23, 24 தேதிகளில் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடுகின்றனர். வருங்காலத்துக்கு உரிய செயல் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்த நாடுகின்றனர்.

தமிழகமெங்கும் உள்ள அறுநூறுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வருவர், புதிய சிந்தனைகள் தருவர்.

திருச்சிராப்பள்ளி, தமிழகத்தின் நடுப்பகுதியாக - மைய இடமாக இருப்பதால், அனைவரும் வரவும், அரிய பெரும் ஆலோசனைகளைத் தரவும் முடியும் என்பதற்காகவே இந்த மாநகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் திருச்சியைப் பற்றிக் கூறும் போதெல்லாம் ஹதமிழகத்தின் நெஞ்சத் தாமரை என்று வருணிப்பார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் ஆக்க விரும்பினார் என்பது வரலாற்றுச் செய்தி.
தி.மு.க. இன்றைக்கு மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் கட்சியாக வளர்ந்திருக்கிறது.
இந்த இயக்கம் தேர்தலில் முஸ்லிம் லீக் வரலாற்றில் திருச்சிக்குத் தனிச் சிறப்புகள் பலப்பல உண்டு. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் லக்னோவில் கூடி முஸ்லிம் லீக் கலைக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய போது, அதே கால கட்டத்தில் திருச்சி தேவர் மன்றத்தில் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கூடி, சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக் தொடரும் - நீடிக்கும் - நிலைக்கும் என்று தீர்மானம் போட்டு இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த பூமி இந்த திருச்சிதான்.

சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீகிற்கு எதிராக வீசிய சூறாவளியால் பாதிக்கப்படாத திருச்சி முஸ்லிம் லீக் கோட்டையாகவே இருந்தது. திருச்சி முஸ்லிம் லீக் ஊழியர் திலகங்களாக விளங்கியவர்கள் காயிதெ மில்லத் அவர்களின் அத்யந்த நண்பர்கள் ஆனார்கள். அவர் களின் அரசியல் ஆலோசகர்களாகத் திகழ்ந்தார்கள். காயிதெ மில்லத் காலத்தில் திருச்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இரண்டாவது தலைமையகமாகவே செயல்பட்டது.

வித்வான் ஏ.கே. ஜமாலி, பாஷாபாய், நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப், அப+பக்கர் ஆகியோர் ஒன்றுபட்டு ஹமறுமலர்ச்சி வார இதழ் துவக்கினர். ஆசிரியர் ஏ.எம். ய+சுப் அவர்களின் எழுத்தும், பாஷா சாஹிபின் கொள்கை விளக்கமும் தாங்கிய மறுமலர்ச்சி தமிழகத்தில் முஸ்லிம் லீகை எழுச்சி கொள்ளச் செய்தது - கேரளாவில் கிளர்ந்து எழ வழிகாட்டியது.

1958 ஜனவரி 11, 12 தேதிகளில் திருச்சியில் நடத்தப் பட்ட முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடுதான் - நூலாசிரியர் ரஜாகான் எழுதியுள்ளபடி அந்த மாநாட்டில் திரண்ட இருபது ஆயிரம் முஸ்லிம் லீகர்கள் எழுப்பிய தக்பீர் முழக்கம் தான் காயிதெ மில்லத் அவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டியது. முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தந்தது.

இதே திருச்சி காட்டூரில் 1962-ல் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில்தான் முஸ்லிம் லீகின் வளர்ச்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் வகை காணப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் அவர்களால் மஜ்லிசே முஸாவரத் அமைப்பு உருவாக்கப் பட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் முஸ்லிம் லீகுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை திருச்சி காட்டூர் முஸ்லிம் லீக் கூட்டம் வலியுறுத்தியே வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாமெல்லாம் பெருமிதம் கொள்ளும் வகையில் முஸ்லிம் லீக் வரலாறு என்று ஒரு முழுமையான நூலை இந்தியாவில் யாரும் எழுதவில்லை. கேரளாவில்கூட ஒரு வரலாற்று நூலை யாரும் யாத்துத் தரவில்லை. மறுமலர்ச்சி ஏட்டின் துணை ஆசிரியர் பொறுப்பு வகித்த எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் தாம் இந்த சரித்திர சாதனையைச் செய்து முடித்திருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்பு திருச்சிக்கு உரியதுதான்.

கடந்த அறுபது ஆண்டுகளாகப் பலப்பல வரலாற்று நிகழ்வுகளுக்கு உரிய தலமான திருச்சியில்தான் அக்டோபர் 23 வெள்ளிக்கிமை மாலை மாநில நிர்வாகிகள் கூட்டமும் அக்டோபர் 24 சனிக்கிழமை காலை மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெறுகிறது.

திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், முன்னணித் தொண்டர்களும் கூட்ட ஏற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொண்டு அனைவரையும் வரவேற்க ஆர்வமிகுதியுடன் காத்திருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்றைக்கு தேச மக்களால் வரவேற்கப்படும் இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை மேலும் வலிமை யுள்ளதாகவும், புதிய பொலிவுமிக்கதாகவும், சமுதாயத் தின் கனவுகளை நனவாக்கித் தரும் அரசியல் நிறுவன மாகவும் வளப்படுத்த இந்தப் பொதுக்குழு பயன்பட வேண்டும்.

புதிய வரலாற்றைத் தொடர புறப்பட்டு வாருங்கள் திருச்சிக்கு!தீர்க்கமான முடிவு எடுப்போம்! திருப்புமுனைக்கு வடிவம் கொடுப்போம்!

Friday, October 9, 2009

முதியோர்கள் தினம் - இஸ்லாமிய பார்வையில்

முதியோர்கள் தினம் - இஸ்லாமிய பார்வையில்

மொளலவி ஷம்சுத்தீன் காசிமி உரை

Wednesday, October 7, 2009

இந்தியன் நேசனல் லீக் சென்னையில் ஆர்ப்பாட்டம்...!

இந்தியன் நேசனல் லீக் வருகின்ற அக்டோபர் மாதம் 14 ம் தேதி சென்னை, மெமோரியல் ஹால் முன்பாக ஒரு மாபெரும் அர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் கடந்த செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை என்று 10 கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுவித்தது வெறும் கண்துடைப்பு நாடகமே. அவர்கள் 10 பேரும் தண்டனை காலம் முடிந்து சிறது நாட்களில் தானாக விடுதலை ஆக இருந்தவர்கள்தான்.

உண்மையில் சிறையில் வாடி வதங்கும் 56 கோவை குண்டு வெடிப்பு சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் இந்த 10 பேரை மட்டும் கண்துடைப்பாக விடுதலை செய்தது நமது முதல் அமைச்சர் நமது சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம் ஆகும்.

இதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Sunday, October 4, 2009

அணையா விளக்கு,அப்துல் ஸமது....!

அனைத்துலக இஸ்லா மியத் தமிழ் இலக்கிய மூன்றாம் மாநாடு - உலகளாவிய அளவில் அறிஞர் பெருமக்கள் குழுமி யிருந்த அரங்கு. சீரிய சிந்தனையாளர் களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

மாபெரும் மாநாட்டை நடத்தியதில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள் மேடையில் சோகம் ஆம்.

பொற்கிழி வாங்கிய சிந்தனையாளர்கள், தொகை குறைவு ஆகவே திருப்பித் தருகிறோம் என சொன்னதால்தான் அந்த சோகமும் - அதிர்ச்சியும்! எவர் சொல்லியும் சமாதானம் செய்ய முடிய வில்லை
அந்த நெருக்கடியான நேரத்தில்...

என்ன காரியம் செய் கிறீர்கள்.... காயல்வாசிகள் கொடுத்துப் பழக்கப்பட்ட வர்கள்.

அவர்களுக்கு வாங்கத் தெரியாது வர லாற்றை மாற்றி விடாதீர் கள். இந்த பிரம்மாண்டமான பந்தலைத் தாங்கி நிற்கும் தூண்களைப் பாருங்கள் அவைகள் கம்பங்களல்ல - இந்த மண்ணில் தோன்றி இஸ்லாமியத் தமிழுக்கு உரமேற்றிய மாணிக்கங் களான 130 புலவர்கள் - இந்த புலவர்களை தந்த மண்ணுக்கு களங்கம் ஏற்படுத்திவிடாதீர்கள் என ஒலிவாங்கியில் குரல் ஒலிக்கிறது

இந்த குரல் ஒலித்த நேரத்தில், ~தலைவரே! எங்கள் முடிவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்@ பொற்கிழியை தக்கவைத் துக்கொள்கிறோம் என கண்ணியமாக பதிலளித் தனர் பொற்கிழி வாங்கி யோர். பல்லாயிரக் கணக் கானோரால் நிரம்பி வழிந்த அரங்கமே தக்பீர் முழக் கத்தால் அதிர்ந்தது.

நிமிடப் பேச்சில் கோபப் பட்டவர்களையும் சந்தோ ஷத்துடன் சம்மதிக்க வைத்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஒரு பொதுக்குழு கூட்டம். கலகலப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென, ~நான் வெளி நடப்புச் செய்கிறேன் என்ற ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கி ஏன் என்கின்றனர் கூட்டத்தினர்.

~~தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முஸ்லிம் லீக் தலைவர்கள் சென்று பார்வையிட்டுள் ளனர். ஆனால், எங்கள் கூத்தாநல்லூரை அவர்கள் புறக்கணித்து விட்டனர். ஆகவேதான், இந்த வெளி நடப்பு என பதில் சொல்கிறார் வெளிநடப்பு செய்ய இருந்தவர்.

கூட்டத்தில் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவர் நிதானமாக பதில் சொன் னார், ~பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றவர்கள் முஸ்லிம் லீகின் தலைவர்கள்தான்@ கூத்தாநல்லூரிலேயே முஸ்லிம் லீகில் மிகப் பெரிய தலைவர் சாரண பாஸ் கரனார் இருக்கும்போது நாங்கள் செல்வது அவ்வளவு சரியாக இருக்குமா? என கேட்டார்.

பொதுக்குழு கூட்டம் மட்டுமல்ல. வெளிநடப்பு செய்ய இருந்த கவிஞர் திலகம் சாரண பாஸ்கர னாரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார். அந்தக் கூட்டத்தின் தலைமைப்பீடத்தை அலங் கரித்தவர் யார் தெரியுமா?
இப்படி மக்கள் மன்றம், கட்சிக் கூட்டம் என்று மட்டும் இல்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஒரு நாள்...

~~எங்கள் முழு சக்தியை யும் திரட்டி இதை எதிர்க் கிறோம் என பேசுகிறார்... ஆளும் வரிசையில் அத்தனை பேரும் வாய்விட்டு சிரிக் கின்றனர். அவர்கள் சிரிப்பதற்கு காரணம்... அன்று சட்ட மன்றத்தில் முஸ்லிம் லீகிற்கு இரண்டே உறுப் பினர்கள்தான்! முழு சக்தி என்றதும் சிரித்தனர். சட்டமன்றத்தில் பேசிய வர் என்ன பதில் சொன் னார் தெரியுமா?

சிரிக்காதீர்கள் - சிரிக்க வைக்கப்படுவீர்கள்!

இந்த ஒரு வார்த்தை யைக் கேட்டு சட்டமன்றம் நிசப்தமானது. சிரித்தவர் களின் நாடி நரம்புகள் அடங்கின. கொஞ்ச நாட்களில் சிரித்தவர்கள் சிரிக்க வைக்கப்பட்டது நடக்கத்தான் செய்தது.

சட்ட சபையை ~நிசப்த மாக்கியது யார் தெரியுமா?...
இப்படி பட்டியல் போட் டுக்கொண்டே போகலாம்.

சட்டசபையில் முழங் கியவர், பொதுக்குழுவில் தலை மைப் பீடத்தை அலங்கரித்தவர் - உலகத் தமிழ் மாநாட்டில் பொற் கிழியை தக்க வைக்கச் செய்தவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அவர்கள்தான்.

அவர் தலைமை ஏற்றால் சபை அலங்காரம் பெறும். அவர் நாவசைந்தால் தமிழ் நளினமாடும். அருள் மறை குர்ஆனுக்கு முதன் முதலில் தமிழில் விளக்கவுரை எழுதிய அல்லாமா அப்துல் ஹமீது பாகவி - ஜெய்னப் பீவி தம்பதியருக்கு 1926 அக்டோபர் 4இல் பிறந்தவர் சிராஜுல் மில்லத்.
அப்துஸ்ஸமத் தேவைகளற்றவனின் அடிமை என்ற பொருள் பொதிந்த பெயரைத்தான் தன்பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தார் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி!
சிராஜுல் மில்லத் சமுதாயம் தன் தேவை களுக்காக இவரை தலைமை பீடத்தில் அமர வைத்த போது சமுதாயத்தின் ஒளிவிளக்கு என்ற பொருள் நிறைந்த பட்டத்தை சூட்டியது.

சிந்தனைச் செம்மல் தமிழ் கொஞ்சி விளை யாடிய அந்த நாவுக்கரசரை தமிழ், கூரும் நல்லுலகம் இப்படி அழைத்த போது - கருத்துச் சுரங்கமாகவும், காலப் பெட்டகமாகவும் பவனி வந்தவர்
பொது மேடைகளில் அவர் சொற்பொழிவை துவக்குவதில்லை வார்த் தைகளை தொடங்குவார் அதில் வரலாறு வலம் வரும் கருத்துக்கள் ஊற்றெடுக் கும். அவர் சாதனைகளை சொல்லிக் காட்டும்போது ஹமன்னிக்கத்தக்க பெருமிதம் கொள்வார்.

அவர் மகிழ்வை பரிமா றும்போது ஹபுளகாங்கித மடைவார்
என்ன அற்புதமான வார்த்தைகள்!

அறிஞர் அண்ணாவுக்கு இது நூற்றாண்டு!

அவரே இவரது தமிழுக்கு ரசிகர்.
ஒரு நிகழ்ச்சியில் இவர் பேசிக் கொண்டிருந்த போது அண்ணா மேடைக்கு வந்தார் இவர் பேச்சை முடிக்கச் சொன்னார்கள் - முடித்தார்.
ஒலிவாங்கி முன் அண்ணா வந்தார் நான் இங்கே பேசவரவில்லை@ அப்துஸ் ஸமதின் பேச்சை கேட்கத்தான் வந்தேன் பேசட்டும் என்றார் - இவர் பேசி முடித்த பின்தான் அண்ணா பேசினார்.

அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்தின் திருமணம்..... தலைவர்கள் அத்தனை பேரும் பங்கேற்று சிறப்பித்தனர்
வரவேற்றுப் பேசிய அண்ணா சொன்னார் - இங்கு ஏராளமான சொல் லாளர்கள் வந்துள்ளீர்கள், எல்லோருக்கும் பேச வாய்ப்பளிக்க நேரமில்லை உங்கள் அனைவர் சார்பாகவும் என் அன்புத் தம்பி மட்டுமே வாழ்த்திப் பேசுவார் என்றார்.

வந்திருந்த அனைவரும் நாவலரா, கலைஞரா என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பட்டென அழைத்தார் - அப்துஸ் ஸமத் என்று! இவரது இதழியல் வரலாறு இருபத்தெட்டாம் வயதில் மணிவிளக்கு மாத இதழில் தொடங்கி மணிச் சுடர் வார இதழ், அறமுரசு நாளிதழ், கிரஸண்ட் ஆங்கில இதழ், மணிச்சுடர் நாளிதழ் என விரிவடைந் தது.

அவற்றில் எழுதப்பட்ட ஆக்கங்களெல்லாம் வார்த் தைகளல்ல - வைரவரிகள் - சிந்தனைக் களஞ்சியங்கள்!

இவர் அரசியலில் ராஜ தந்திரி
1959இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் துறைமுகம் வட்டத்தி லிருந்து முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டுதான் கண்ணியத்தின் காவலர் காயிதே மில்லத் அவர்களை அறிஞர் அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தினார். இதனால்தான் 1962இல் தி.மு.க. வுடன் முஸ்லிம் லீக் கூட்டணி ஏற்பட்டது.

1975இல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் அதை எதிர்த்த காரணத்தால் 1976இல் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தி.மு.கவினர் தொல்லை களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

1977இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் - ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், ஜனசங்கம், லோக்தளம் ஆகியகட்சிகளை இணைத்து ஜனதாவை துவக்கினார். அது வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

மொரார்ஜிக்கும், துணை பிரதமர் சரண்சிங்கிற்கும் ஏற்பட்ட மோதலில் நாடாளுமன்றம் கலைக் கப்பட்டு 1980 ஜனவரியில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸோடு தி.மு.க. விற்கு தோழமை ஏற்படுத்த இவர் முயற்சி மேற் கொண்டார். கலைஞரின் சம்மதத்தை பெற்று அவரது தூதுவராகவே டெல்லி சென்று இந்திரா அம்மை யாரை சம்மதிக்க வைத்தார்.

இந்திரா தமிழகம் வந் தார். ஒரே மேடையில் இந்திரா- கலைஞர் - அப்துஸ் ஸமத்!

ஹநேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக! - கலைஞர் அழைக்க, இந்திரா உரையாற்ற புன்னகை பூத்த முகத்தோடு இவர் பார்த்து மகிழ்ந்தார்.

டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை நடத்திக் கொண்டிருந் தபோது, இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள்...... 1990இல் டாக்டரை சந்தித்த இவர், சங்கம் நடத்தி சமூக பிரச்சனைக்காக சாலையில் இறங்கும் நீங்கள், கட்சி நடத்தி சட்டமன்ற நாடாளு மன்றங்களில் காரியம் சாதிக்கலாமே என ஆலோ சனை வழங்கினார்.

அதுவரை அரசியலே கூடாது என்ற நிலைப் பாட்டில் இருந்த டாக்டர் ராமதாஸ், சிந்திக்க தலைப் பட்டார்@ அதன் விளைவு தான் பாட்டாளி மக்கள் கட்சி! 1991 ஜூனில் நடை பெற்ற தேர்தலில் இக்கட் சியுடன் முஸ்லிம் லீக் தோழமை கொண்டு 18 இடங்களில் போட்டி யிட்டது. அதில் திருச்செந் தூர் தொகுதியில் நான் வேட்பாளன்.

கால் நூற்றாண்டு காலம் இவரது நிழலில் பவனி வர எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இவருக்கு என் போன்றோர் செல்லப்பிள்ளைகள்.
எங்களை பேச விட்டு ஆசை பார்ப்பார்!
அவரோடு நாங்கள் ஒன்றாக பயணிப்பதில் ஆர்வம் கொள்வார்.
1975இல் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுதான் இளைஞர் முஸ்லிம் லீகிற்கு சட்டப்படி யான அங்கீகாரம் கிடைத்து, செங்கம் ஜப்பார் மாநில பொதுச் செயலாள ராகவும், நான் மாநில பொருளாள ராகவும் தேர்வு செய்யப் பட்டோம். இளைஞர் முஸ்லிம் லீகை பலரும் எதிர்த்த நேரத்தில் அடுத்த தலை முறை தயாராகட்டும் என உற்சாகப் படுத்தியவர்.

1994இல் நான் சிறையி லிருக்கும்போது அவர் கைப்பட எழுதிய இருபக்க கடிதம் நான் இன்றைக்கும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷம். அதிலுள்ள வரிகள் பலித்துவிட்டது. அவர் கேட்ட பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதனால்தான்... அவர் வளர்த்து பாது காத்த வரலாற்றுப் பேரியக்கத்தில் கொள்கை பரப்புச் செயலாளனாக பணி செய்யும் பேற்றினை பெற்றுள்ளேன்.
அவர் ஆசை ஆசையாக எழுதிய மணிச்சுடர் நாளி தழில் நான் அமர்ந்து, எழுதும் பாக்கியத்தை பெற்றுள்ளேன்.

அவர் நல்ல தொண்டர் களை மட்டும் உருவாக்க வில்லை. அந்த தொண் டர்களை வழிநடத்த நல்ல தலைவரையும் தந்துவிட்டுச் சென்றுள்ளார். அந்தத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை முனீருல் மில்லத் தலைமையில் நாங்கள் சமுதாயப் பணி தொடரும்போது ஒவ்வோர் அடியிலும் சிராஜுல் மில்லத் வழிகாட்டுதல் இருந்து கொண்டேயிருக் கிறது.

ஆம்! அவர் அணையா விளக்கு! சமுதாயத்தின் மணிச்சுடர்!

Friday, October 2, 2009

புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகில் உள்ள பில்லூரில் ஏ.எம்.எச்.நகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

விழாவுக்கு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ.கே.ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் பில்லூர் ரஹிமா மஸ்ஜித் தலைவருமான ஏ.எம். ஹனீஃபா ஹாஜியார் வரவேற்றார் அவ்வமையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்கஅணி செயலாளர் மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார் .

மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் செயலாளர் எம்.ஏ.சர்தார் நன்றி கூறினர்.

விழாவில் மாவட்ட மார்க்க அணி துணைசெயலாளர் மௌலான நூருல் அமின் மற்றும் பக்கிர் முகமத் ,சபீர் ,முகமத் யுஸுப் ,மிரான்,ஷெரிப்,லால்பேட்டை சல்மான் பாரிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template