அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Thursday, August 27, 2009

TNTJ மாணவரணி சனி கிழைமை (29/08/2009) அன்று நடத்தும் இப்தார் நிகழ்ச்சிகள், இன்ஷா அல்லாஹ்

1.பரங்கிப்பேட்டை யில் (கடலூர் மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், கோட்டர் தங்கறை தெரு, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்சிறப்புரை : Dr.S. ஜாபர் அலி.P.hdதொடர்பிற்கு : 9790325478அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர் மாவட்ட மாணவர் அணி.

2. ஆடுதுரை அவனியாபுரத்தில் (தஞ்சை மாவட்டம் )
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், பாத்திமா நகர், ஆடுதுரை அவனியாபுரம், தஞ்சை மாவட்டம்சிறப்புரை : A.அப்துல் ரஹ்மான்.(M.Sc) .-மாவட்ட மாணவர் அணி செயலாளர்தொடர்பிற்கு : சாதிக் பாஷா- 9443564240அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ தஞ்சை (வடக்கு),மாவட்ட மாணவர் அணி.

3. இராஜகம்பீரத்தில் (சிவகங்கை மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குசிறப்புரை : A.ஷாகுல் (மாவட்ட மாணவரணி செயலாளர்)இடம் : TNTJ மர்கஸ், இராஜகம்பீரம், சிவகங்கை மாவட்டம்தொடர்பிற்கு : 9003811959அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ சிவகங்கைமாவட்ட மாணவர் அணி.

4. மந்தாரபுதூரில் (கன்னியாகுமரி மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், மந்தாரபுதூர், கன்னியாகுமரி மாவட்டம் சிறப்புரை : அப்துல் வதூத்.(B.E) - .-மாவட்ட மாணவர் அணி செயலாளர்தொடர்பிற்கு : 9944179481அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கன்னியாகுமரி மாவட்ட மாணவர் அணி.

5 ஆலங்குடியில் (புது கோட்டை மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ அலுவலகம், பெரிய பள்ளிவாசல் அருகில், ஆலங்குடி, புது கோட்டைதொடர்பிற்கு : 9043486280அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புது கோட்டை மாவட்ட மாணவர் அணி.

6. புதுமடத்தில் (இராமநாதபுரம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், வடக்கு தெரு பஸ் நிலையம் அருகில், புது மடம், இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பிற்கு : யாஸின் - 9894652633அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.

7. இருமேனியில் (இராமநாதபுரம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், பாபுல் மாலிக் வளாகம், இருமேனி, இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பிற்கு : யாஸின் - 9894652633அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.
.

Tuesday, August 25, 2009

அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை இழந்து தவிக்கிறேன்|||தலைவர் பேராசிரியர் இரங்கல்

மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் மறைவு குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி-

தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்த தமிழ் அறிஞர் - இலக்கியச் செல்வர் - முஸ்லிம் லீகின் மாபெரும் வழிகாட்டி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் இரண்டாவது புதல்வர் அப்துல் ஹக்கீம் அவர்கள் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்து இன்று (25-08-2009) செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது. சகோதரர் அப்துல் ஹக்கீம் இளமைக்காலம் முதல் முஸ்லிம் லீக் இயக்கத்தோடு தன்னை பின்னிப் பிணைத்து கொண்டு வாழ்ந்தவர். அடையாறு பிரைமரி முஸ்லிம் லீக் அமைப்பதில் முன்னணியில் இருந்தவர்.

காலப்போக்கில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாள ராக உயர்ந்தார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கிடைத்தது.

தலைமை நிலையச் செயலாளராக அவர் செயல் பட்ட காலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும் - எனக்கும் சட்டரீதியான பல்வேறு இடைய+றுகளும், ஏராளமான வழக்குகளும் நடைபெற்றன. அவைகளில் நாம் வெற்றியடைவதற்கு அரிய ஆலோசனைகளையும், உரிய தகவல்களையும் தந்து பெரும் ஒத்துழைப்பு அளித்தார்.

சிறந்த நிர்வாகியாகவும், தொழில் வல்லுநராகவும் வெளிநாடுகளோடு தொடர்புடைய பல தொழில் அதிபர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் பெற்ற வராகவும் விளங்கியவர். அவருடைய அறிவுரையாலும், வழிகாட்டுதலாலும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் இன்றைக்கும் நன்றி கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளிலும், தன்னை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பின்னர் தீவிரமாக இயக்கப்பணிகளில் அரசியல் கூட்டணி முடிவுகள், தேர்தல் சின்னம் தேர்வு செய்தல் போன்ற பிரச்சினை வரும்போதெல் லாம்ஆலோசனை சொல்லி வந்தார். என்னைப் பொறுத்த வரையில் பல நேரங்களில் அவருடைய ஆலோசனை பெற்று அதன்படி முடிவெடுத்தேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிட அவர் ஆலோசனை காரணமாக இருந்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

எம்.ஏ. பொது நிர்வாக பட்டம் பெற்று தேறியவர். அச்சுக்கலையில் தனிப்பட்டமும் பெற்றவர். படித்துக் கொண்டேயிருப்பதில் அவர் தந்தையை பின்பற்றி வாழ்ந்த சிறப்பு அவருக்கு உண்டு.

முஸ்லிம் சமுதாயத்திற்கும் - முஸ்லிம் லீகிற்கும் நாளேடு இல்லை என்ற குறையை நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காக ஹமெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குவ தற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர். தமது தந்தை சிராஜுல் மில்லத் அவர்களோடு இணைந்து நிறுவனத்தை பதிவு செய்து ஹமணிச்சுடர் நாளிதழை வெளியிடுவோராக இருந்து பணியாற்றியவர்.

1987-லிருந்து ஹமணிச்சுடர் நாளேட்டை சிறந்த ஒரு பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சி மேற்கொண் டார். 1996-ல் சிராஜுல் மில்லத் அவர்கள் ஹமணிச்சுடர் நாளிதழுக்கு என்னைப் பொறுப்பாளராக்கிய சமயத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டில் பிரபலமான நாளேடாக மணிச்சுடரை ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகமூட்டியவர். இறுதி வரை மணிச்சுடர் வெளியீட் டாளராக தொடர்ந்து இருந்து மிகப் பெரிய சேவையை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.

அந்த அன்புச் சகோதரரை - நல்ல ஆலோசகரை - அப்பழுக்கற்ற முஸ்லிம் லீகரை - அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை நாம் இழந்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய துணைவியார், ஒரே புதல்வி ஆகியோருக்கு அல்லாஹ் சபுரன் ஜமீல் எனும் உயர்ந்த உன்னதமான தாங்கும் சக்தியை அருள்வானாக. அவர் பிரிவால் வாடும் அவர்களின் சகோதரர்கள் அப்துல் ஹமீத் பாகவி, அப்துல் வஹாப், சகோதரிகள் அலவியா, ஃபாத்திமா முஸப்பர் மற்றும் உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் வானாக. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுவுலக மேலான பதவியை வழங்கி அருள்வானாக!

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முஸ்லிம் லீக் இயக்கத்தில் நிரப்பி தருவதற்கு தக்கவர்களை அவருடைய மறைவிற்கு இதயம் நிறைந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்!
இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது இரங்கல் செய்தியில் குறிபிப்பிட்டுள்ளார் .

தளபதி ஷபிகுர்ரஹ்மான்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரும் மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத்தின் புதல்வருமாகிய அல்ஹாஜ் அப்துல் ஹக்கீம் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்ததாக தளபதி ஷபிகுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார் .

மக்காவில் இருந்து அனுப்பியிருக்கும் இரங்கல் செய்தியில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளராக சிறப்பாக பணியாற்றி தொடர்ந்து மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளராகவும் இன்றைய அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்த அப்துல் ஹக்கீம் அவர்களின் இழப்பு தாய்ச்சபை முஸ்லிம் லீக்கினருக்கு பேரிழப்பு அன்னாரை பிரிந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஷப்ரன் ஜமிலை வழங்க பிரார்த்திப்பதாக அவர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி இரங்கல்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராகவும், அதன் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு எதிராகவும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு மிகப் பெரும் தொல்லைகள் தரப்பட்ட சமயத்தில் இந்த வழக்கு களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு அரிய ஆலோசனைகளையும் - உரிய தகவல்களையும் தந்து உறுதியாக ஒத்துழைத்தவர் அப்துல் ஹக்கீம். இந்த வழக்குகள் அனைத்திலிருந்து இறையருளால் நாம் வெற்றியடைந்தோம்.

முஸ்லிம் லீகில் கொள்கை உறுதிமிக்க அவரது இழப்பு தாய்ச்சபைக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
வெ. ஜீவகிரிதன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள் .

ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனை குழு இரங்கல்

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப் பினர்களான எம். அப்துல் ரஹ்மான் (வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர்), எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் (அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்), எச். அப்துல் பாசித் (வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர்), பேராசிரியர் குளச்சல் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

வெளியீட்டாளர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவுக்கு மணிச்சுடர் பணியாளர்கள் இரங்கல்

மணிச்சுடர் தமிழ் மாலை நாளிதழ் வெளியீட் டாளரும் மறைந்த சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலமான செய்தி அறிந்து எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் நல் அமல்களை ஏற்றுக் கொண்டு தன் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
-மணிச்சுடர் பணியாளர்கள்



மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளர்- சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் காலமானார்

சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வரும், மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலை 9.30 மணிக்கு கால மானார். ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக் கம் செய்யப்படுகிறது.

தாய்ச்சபையின் தனிப் பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் - நர்கீஸ் பானு தம்பதி யரின் இரண்டாவது புதல் வராக 05-12-1961-ல் பிறந்த வர் ஏ. அப்துல் ஹக்கீம். இவரது உடன் பிறந்த சகோதரர்கள் அப்துல் ஹமீது பாகவி, அப்துல் வஹாப் மற்றும் உடன் பிறந்த சகோதரி அலவியா, ஃபாத்திமா முஸப்பர் ஆகி யோர் ஆகும். இவருடைய துணைவியார் சமீமா, ஒரே மகள் இஸ்ரா.
எம்.ஏ. பொது நிர்வாகம் பட்டம் பெற்ற அப்துல் ஹக்கீம், அச்சுக்கலை நிபுணர் படிப்பையும் படித்துள்ளார். 1986-ம் ஆண்டு சிறுபான்மையினர் குரல் ஒலிக்க ஒரு நாளிதழ் தொடங்க வேண்டும் என சிராஜுல் மில்லத் முடிவெ டுத்த போது அதற்கான முழு பொறுப்பையும் ஏற்று மூத்த பத்திரிகை யாளர்களுடன் கலந்தா லோசித்து 1987-ல் ஏப்ரலில் மாதிரிப் பிரதியையும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி மணிச்சுடர் நாளிதழையும் கொண்டு வந்தார்.

1999-ம் ஆண்டு சிராஜுல் மில்லத் அவர் களின் மறைவுக்குப் பின் முஸ்லிம் லீகில் அவர் முழு நேர ஊழியம் செய்ய வேண்டும் என விரும்பி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இவரை மாநில தலைமை நிலையச் செயலாளராக நியமனம் செய்தார். பல அரசியல் மாநாடுகள், தேர்தல் பணிகள், பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்தி கட்சியின் வளர்ச் சிக்கு பெரும் துணை புரிந் தார்.

தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (மியாஸி) மற்றும் புதுக் கல்லூரியில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்துள்ளார்.
சென்னை அயன்புரத் தில் அமைந்துள்ள டிரஸ்ட் மருத்துவமனை யில் சிறுநீரக நோயாளிக ளுக்கான கவுரவ டிரஸ்டி யாக 2001-ம் ஆண்டு முதல் சேவையாற்றி வந்துள்ளார்.

2002-ம் ஆண்டு குடும்பத்துடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி யுள்ள இவர் இலங்கை, சிங்கப்ப+ர், மலேஷியா, ஸவ+தி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார்.
அமைதியான சுபாவ மும், அபாரமான ஆற்ற லும், அறிவு ஞானமும் மிக்க இவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளராக வும், அதன்பின் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக வும் பணி செய்து வந்துள் ளார்.

அவரது மறைவுக்கு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர் .

Monday, August 17, 2009

TNTJ நடத்திய தமிழக முதல்வர் வீடு முற்றுகை,

இன்று (17-8-2009) காலை சரியாக 11 மணி அளவில் முதல்வர் வீடு அருகே உள்ள தவ்சன்ட் லைட் என்ற பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட துவங்கினர்.

காவல்துறை எதிர் பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் முற்றுகையிடும் சகோதர சகோதரிகளை கைது செய்ய துவங்கிய தமிழக காவல்துறை வாகன பற்றாக்குறையினால் தினறியது.

அல்ஹம்துலில்லாஹ்!.

இறை இல்லத்தை மீட்க கொட்டும் மழையையும் பொருட்படுத்தால் பெண்கள் கைகுழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.சென்னை அண்ணா சாலையே இன்று ஸ்தம்பித்து போனது வாகனங்கள் வேரு வழியாக திருப்பி விடப்பட்டது!. அல்ஹம்துலில்லாஹ்…கலத்தொகுப்பு விரைவில்… புகைப்படங்களில் சில இதோ…















Wednesday, August 12, 2009

காயிதெ மில்லத் குறித்து ஆவணப்படம்

இந்திய அரசியல் வானில் கண்ணியத்தின் சின்னமாய் மின்னிய முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் பற்றி ஹகண்ணியத் தமிழர் என்ற ஆவணப்படம் தயாரிக்கப் பட இருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் நேர்த்தி யுடனும், உயர் தொழில் நுட்ப தரத்துட னும் தாயரிக்கப்பட உள்ள இந்த படத்தில் காயிதெ மில்லத் பற்றிய வர லாற்றுச் சுவடு களும், அவரைப் பற்றிய மூத்த அரசியல் தலைவர் களின் கருத்துக்களும் இடம் பெற உள்ளன.

இந்த ஆவணப்பட தயாரிப்பு பற்றிய அறி விப்பை வெளியிடும் நிகழ்ச்சி கடந்த 8-8-2009 வியாழன் அன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை யில் உள்ள சவேரா ஓட்ட லில் நடைபெற்றது.

ஆவணப்படத்தின் இயக்குநர் ஆளுர் ஷா நவாஸ், ஆவணப் படத்தை தாயரித்து வெளியிடும் எஸ்.டி. கூரியர் நிறுவனத் தலைவர் கே.அன்சாரி, பேராசிரியர் அ. மார்க்ஸ், தமிழ் மைய இயக்குநர் ஜெகத் கஸ்பர் உள்ளிட் டோர் நிகழ்வில் பங்கேற்ற னர்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆவணப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் கூறியதா வது-
ஒரு மணி நேரம் ஓடும் வகையில் ஆவணப்படம் தயாரிக்கப்படுவதோடு, முதலில் தமிழ் மொழியி லும் பின்னர் மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். காயிதெ மில்லத் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு செய்தனர்.

இந்த ஆவணப்படம் டிசம்பர் இறுதியில் வெளி யிடப்படும் என்று தெரி வித்த ஆளுநர் ஷாநவாஸ், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, காயிதெ மில்லத் வாழ்க் கையை திரைப்படமாக இயக்குவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்றார். பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாக எடுக்கப்பட் டுள்ள நிலையில் காயிதெ மில்லத் பற்றி எந்தப் பதிவும் இல்லையென்றால் அது வரலாற்றுப் பிழையாகி விடும் என்பதாலேயே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைவர் பேராசிரியர் வாழ்த்து கண்ணியத் தமிழர் ஆவணப்பட இயக்குநர் ஆளுர் ஷானவாஸ் 10-8-09 மாலை முஸ்லிம் லீக் தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸி லுக்கு வருகை தந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். அப+பக்கர் ஆகி யோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆவண படம் குறித்த விவரங்களை ஆளுர் ஷானவாஸ் 65139, போலீஸ் கமிஷனர் ஆபீஸ் சாலை, கணேன் டிரா வல்ஸ், எழும்ப+ர், சென்னை செல்-9444976476 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி :
முஸ்லிம் லீக்.காம்

Tuesday, August 4, 2009

அரசியல் மேதைகளாலும் ஆன்மீகத் தலைவர்களாலும் போற்றப்பட்ட ஷங்கை மிகு செய்யத் ஷிஹாப் தங்ஙள் தங்கமான தங்ஙள்

-தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் களில் ஒருவரும் கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தனிப் பெரும் தலைவருமான ஷங்கைமிகு செய்யிதுனா ஷிஹாப் தங்ஙள் அவர்கள் மறைந்த செய்தியை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் எனக்கு அலைப்பேசியில் தெரிவித்தார்கள். இச்செய்தி எனக்கு கவலையை தந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தில்மறைந்த ஷிஹாப் தங்ஙள் அவர்கள் செய்த சேவை மிக மகத்தானதாகும். அரசியல் மேதையாகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்து, தக்வாவின் தென்றல் தங்கமான தங்ஙள் அவர்களின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்துக்கும் தாய்ச் சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும்
நம் நாட்டு அரசியல் தலைவர்களாலும், மார்க்க மேதை களாலும் போற்றப்பட்ட தங்ஙள் அவர்களின் தியாகமிகு சேவையால்சமுதாயம் சிறப்பான நன்மைகளைப் பெற்றது.

சமுதாயத்தை நோக்கி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் புனித ஸ்தாபனத்தை நோக்கி தேவையற்ற சர்ச்சை களையும், சோதனைகளையும் சிலர் உருவாக்கிய காலக் கட்டத்தில் அவைகளையெல்லாம் தனது அன்பான அழகு மிகு பஷாரத் எனும் இன்முகத்துடனும் துஆவுடன் எதிர் நோக்கி வெற்றியைத் தேடித்தந்த மார்க்க மேதை தங்கள் அவர்களாகும்.

நம் நாட்டு தலைவர்களாலும், உலகத் தலைவர்களா லும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பொன்விழா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி தங்ஙள் அவர்கள் ஆன்மீக ஒளியும், அரசியல் தெளிவும் மிக்க அவர்களின் உரையைக் கேட்டு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரும் நெஞ் சம் நெகிழ பாராட்டி மகிழ்ந்த நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

1993ம் ஆண்டில் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களுடன் நானும் புனித ரமளானில் உம்ராவுக்கு சென்றிருந்த போது புனித மக்காவில் கஃபத்துல்லா ஷரீபில் ஷங்கை மிகு ஷிஹாப் தங்கள் அவர்களை சந்தித்த போது. இரு தலைவர்களும் சமுதாயத் தைப் பற்றியும், நாட்டு மக்களின் நன்மையைப் பற்றியும், சமுதாய ஒற்றுமையைப் பற்றியும் ஒருவருக்கொருவர் அன்புடனும் அக மகிழ்வுடனும் பேசிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை.

காயிதே மில்லத் அவர்களின் நூற்றாண்டு விழாவை யொட்டி 1995ம் ஆண்டில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயற்குப முஜாஹிதே மில்லத் பனாத் வாலா சாஹிப் தலைமையில் நடைபெற்றபோது அக் கூட்டத்தில் பங்கேற்று தங்ஙள் அவர்கள் நிகழ்த்திய உரை இன்னும் நமது நெஞ்சை நெகிழவைக்கிறது.

2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் துறைமுகப் பகுதியில் காயிதே மில்லத் மன்ஜில் என்ற பெயரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு மகத்தான மாபெரும் கட்டிடத்தை அமைத்து கொடுத்த தமிழகத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை பெரிதும் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், தமிழக நிர்வாகிகளை முன்னோடிகளை பாராட்டி துஆச் செய்த காட்சியும் அதேக் கூட்டத்தில் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக போட்டியிட்ட தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி வாகைச் சூடுவார் என்று கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தலைவர்களுடனும் முன் னோடிகளுடனும் சென்னைக்கு வந்து மனமாற வாழ்த்தி துஆச் செய்ததை சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன். நம்முடைய பெருந் தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத் வாலா சாஹிப் மறைந்த நேரத்தில் கேரளத்தின் பாலக்காட்டில் ஷிஹாப் தங்கள் இல்லத்தில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுடன் சென்றிருந்தேன்.

அக்கூட்டத்தில் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹ்மது, கேரளப் பொதுச் செயலாளர் குஞ்சாலி குட்டி, இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி.பஷீர், முனீர் கோயா மற்றும் கேரள தலைவர்களும், தேசிய தலை வர்களும் பங்கேற்ற கூட்டத்தில் நம்முடைய தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களின் சேவையைப் பற்றி ஷிஹாப் தங்ஙள் அவர்கள் மகிழ்வுடன் சொல்லிக் காட் டிய நிகழ்ச்சி மகிழ்ச்சியான நிகழ்ச்சி.

நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் கய்ய+ம் அவர்களையும் அவர்கள் அரசையும் அங்குள்ள கடல் கொள்ளையர்கள் சூழ்ச்சிக் காரர்களைப் பற்றி அந்நாட்டு அதிபரை சிறைப் பிடிக்க திட்ட மிட்டு புரட்சி செய்த காலத்தில் மாலத்தீவு அதிபரின் நண்பரான ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு இச்செய்தியை அதிபர் கைய்ய+ம் தெரியப்படுத்தினார்.

அன்றைய நம் நாட்டு பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஷிஹாப் தங்ஙள் அவர்கள் தொடர்பு கொண்டு நட வடிக்கை எடுத்து காப்பாற்றி கொடுத்த சிறப்பு ஷிஹாப் தங்ஙள் அவர்களைச் சார்ந்ததாகும்.

உலகத் தலைவர்களாலும், அரசியல் மேதைகளாலும், ஆன்மீக தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்களின் கப்ரை கருணையுள்ள ரஹ்மான் பிரகாசமாக்கிவைப்பானாக.

அன்னாரின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் முஸ்லிம் லீக்கினர்களுக்கும் ஹஸப்ரே ஜமீலை| அல்லாஹ் வழங்குவானாக.

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template