அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, November 24, 2009

அறிவகம் குர்பானி இலண்டனில் கொடுக்க உடனே தொடர்பு கொள்க;


YOURS
DR. M.A. KABEER, MD HHAAAFIYA HEALTH RESORTLONDON, U.K.00-44-75-8855-8835 (MOBILE)00-44-78-9011-7384 (MOBILE)00-44-20-847-22-999 (LAND LINE)Skype & Action voip ID: dr.m.a.kabeer

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு பி .முட்லூரில் நடைபெற்றது


கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு பி .முட்லூரில் நடைபெற்றது கூட்டதிற்கு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் கலந்து கொண்டு மாவட்ட பிரைமரி மற்றும் கிளைகளுக்கு யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் படிவங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.


முன்னதாக கடலூர் எம்.ஜபார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தாய்ச்சபையில் தன்னை இணைத்து கொண்டார் இக்கூட்டதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் கப்பார் தலைமை தாங்கினார் செயலாளர் ஏ.சுக்கூர் வரவேற்று பேசினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலான தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் மக்காவிலிருந்து அலைபேசி முலம் தொடர்புகொண்டு இயக்க வளர்ச்சிக்கு துஆ செய்வதாக தெரிவித்தார் மாநில பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ரஷித் ஜான் ,தலைமை நிலைய பேச்சாளர் யு.சல்மான் பாரிஸ் உள்ளிட்ட மாவட்ட பிரைமரி நிர்வாகிகள் கருதுரையற்றினர்கள் மாவட்ட மஹல்ல ஜமாத் ஒருங்கிணைப்பு செயலாளர் பி. முட்லூர் .கப்பார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.


கணக்கரப்பட்டு முன்னதாக சிதம்பரம் தாலுகா கணக்கரப்பட்டு சென்ற அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் .


கணக்கரப்பட்டு பிரைமரி தலைவர் ஷாகுல் ஹமித், செயலாளர் புஹாரி மற்றும் அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகளோடு ஆக்கிரமிப்பில் உள்ள வக்ப் சொத்துக்களை பார்வையிட்டதோடு மீட்பதற்கு உரிய நடவைக்கை எட்டுக்கப்படுமென உருதியளித்தர் கணக்கரப்பட்டு குமார். சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் முன்னிலையில் தாய்ச்சபையில் தன்னை இணைத்து கொண்டார்.

தகவல். இப்னு தளபதி

Tuesday, November 17, 2009

அரஃபா தினம் நவ,26,

Saudi Arabia announced on Tuesday, November 17, that `Eid Al-Adha, one of the two main religious festivals on the Islamic calendar, will fall on Friday, November 27. "The new moon of Dhul-Hijjah was sighted by trusted witnesses on Tuesday in a number of provinces," the Supreme Judicial Council said in a statement published by the state-run Saudi Press Agency. "Thus, Wednesday, November 18, will mark the beginning of the lunar month of Dhul-Hijjah.It is confirmed by Saudi Authorities that ‘Arafah date for Hajj is on Thursday, November 26

Thursday, November 12, 2009

ஐஐடியில் முஸ்லீம்கள் – மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் :

மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.


இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.10,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.


இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,


இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது. IIT-JEE 2010 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் கீழே இடம் பெற்றுள்ளது).


இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.


ஐஐடி-யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம் : ஐஐடி-யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி-யில் சேருவது மிக மிக கடினம்,


சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும். அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி-யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது, சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர்.


இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை . மாணவ மாணவியர்களே! இதை மாற்ற நாமும் ஐஐடி-யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது மாணவரணி, உங்களுக்கு வழிகாட்ட ஐஐடி-யில் படித்த சகோதரர்களும் நமது மாணவரணியில் உள்ளனர். உயர் கல்வி கற்க முஸ்லீம்களை ஊக்குவிக்க தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றோம். ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது TNTJ மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம்.


நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள். தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.


1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.

2. K. ஹஸன் B.E - 9940611315

IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :(ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்)டிசம்பர் – 19 (19/12/09) இன்ஷா அல்லாஹ்
தேர்வு நடைபெறும் தேதி ஏப்ரல் – 11 (11/04/10)இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி மே – 26 (26/05/10) இன்ஷா அல்லாஹ்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairmen, JEE, IIT Madras,
Chennai - 600036
Phone : 044-22578220
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள்விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி - மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)044-2250 4500 (காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)விண்ணப்பத்தின் விலை :Rs.1,000,(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)வயது வரம்புஅக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :a) +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள்,b) +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.c) 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்குறைந்தபட்ச மதிப்பெண்+2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template