அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Friday, February 27, 2009

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனே நிறைவேற்றி தாருங்கள் முதல்வர் கலைஞருக்கு பேராசிரியர்வேண்டுகோள்


சிறுபான்மை கல்வி நிறு வனங்களில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனடி யாக செய்து தரும்படியும், பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு அரசு ஊதியத்தை வழங்கி உதவும்படியும் முதல் வர் கலைஞரிடம் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்வோம். என்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தெரிவித்தார் .

சென்னை புதுக் கல்லூரியில் வரலாற்று ஆய்வு மன்றம் துவக்க விழா இன்று (வெள்ளி) நடை பெற்றது.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவரு மான பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் எம்.பி., சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு வர லாற்று ஆய்வு மன்றத்தை துவக்கிவைத்து உரையாற்றி னார்.

அப்போது அவர் குறிப் பிட்டதாவது:
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு அளித்த கல்லூரி யின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், துறை மாணவர்கள் அனை வருக்கும் முதற் கண் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ள மாணவர்களையும் வாழ்த்த கடமைப் பட்டுள்ளேன்.

இங்கு வரவேற்புரை யாற்றுகையில் கல்லூரியின் தேவைகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக கல்லூரி ஆசிரி யர் நியமன பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்கள்.

இன்று மாலை முதல்வர் கலைஞர் அவர்களை முஸ் லிம் லீக் சார்பில் சந்திக்க உள்ளோம். அப்போது இந்த பிரச்சினை குறித்து அவரிடம் எடுத்துக் கூறி விரைவில் நல்ல முடிவு கான வலியுறுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர்களாக நிய மிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ற சரியான ஊதியங்களை பெறுவதற்கு சான்றிதழ்கள் அவசியமாக இருக்கின்றன.

பல்கலைக் கழகங்கள் குறிப்பாக சென்னைப் பல் கலைக் கழகம் இந்த விஷயத்தில் இடையூறு அளிக்கும் வகையில் செயல் பட்டு வருவது நமது கவ னத்திற்கு வந்துள்ளன.

அவை விரைவில் சரி செய்யப்பட முதல்வரிட மும் அரசிடமும் வலியுறுத் துவோம்.

ஏற்கெனவே, இது போன்ற பிரச்சினை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூ ரிக்கு ஏற்பட்டது. அதனை கல்லூரி சார்பில் நாம் எதிர் கொண்டு வெற்றி பெற் றோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நேற்று முன்தினம் பாரா ளுமன்றத்திலே சிறுபான் மையினர் கல்வி திருத்த மசோதா ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. நான் காண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட இருந்த இந்த மசோதாவில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றையெல் லாம் நாம் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் தொ டர்ந்து வலியுறுத்தி வந் தோம். இப்போழுது மத்திய அரசு அந்த தவறுகளை குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மசோ தாவை தாக்கல் செய்துள் ளது.

சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய நிலை இத் துனை காலமும் இருந்து வந்தது.

மாநில அரசுகள் அவ் வளவு எளிதாக என்.ஓ.சி., கொடுப்பது கிடையாது. இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு இப் போழுது தாக்கல் செய்யப் பட்டுள்ள புதிய மசோதா வில் சிறுபான்மையினர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே கல்வி நிலையங்களை துவங்கி நடத்திட வலிவகை செய் யப் பட்டுள்ளது என்பதை யும் இந்த நேரத்தில் குறிப் பிட விரும்புகின்றனர்.

இப்பொழுதுள்ள நமது தமிழக அரசானாலும், மத் திய அரசானாலும் இரண்டு அரசுகளுமே சிறு பான்மையினர் நலனை அக் கரை கொண்டு அவர்க ளின் உணர்வுகளை மதித்து நடக்கின்றன.

இத்தகைய நல்லாட் சியில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் ஆசி ரியர் நியமனங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசும் பொழுது குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் புதுக் கல்லூரி முதல்வர் டாக்டர் அல்தாப் தலைமை தாங் கினார், பேராசிரியர் ஜப ருல்லா கான் வரவேற்புரை யாற்றினார். துணை முதல் வர் நயீமுர் ரஹ்மான், பேராசிரியர் முஹம்மது மன்சூர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் நிஜா முத்தீன், டாக்டர் சே.மு.மு. முஹம்ம தலி, பேராசிரியர் நத்தர் ஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் அபூபக்கர், மாநில செய லாளர் கமுதி பஷீர், தென் சென்னை மாவட்ட தலை வர் இஸ்மத் பாட்சா, செயலாளர் பாவை முஸ் தபா, ஒருங்கினைப்பாளர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், ஆலம் கான், கவிஞர் ஷேக் மதார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sunday, February 22, 2009

கோட்டகுப்பம் அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

கோட்டகுப்பம், பிப்.22-

கோட்டகுப்பம் ரப்பானியா அரபிக் கல்லூரியில் தலைவரும், நாடறிந்த மார்க்க அறிஞருமான மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் 21-2-2009 சனிக் கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார்.

மவ்லானா அப்துஸ் ஸமத் நத்வி சென்னை பல்லாவரம் மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அன்றிலிருந்து இன்று வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

சென்னை அஞ்சுமனே ஹிமாயத்துல் இஸ்லாம் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றியவர். மலேசியா ஈப்போவில் மதரஸாவை நிறுவி திறம்பட சேவையாற்றியவர்.

வானொலி மற்றும் இஸ்லாமிய பத்திரிகைகள் மூலம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் ஹகாயிதெ மில்லத் விருது| வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.

மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஜரத் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஜரத் அவர்கள் தமிழக உலமாக்களின் தனித்து ஒளிசிந்திய நட்சத்திரம் போல் விளங்கியவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்களான கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிந்தனை செல்வர் சிராஜுல் மில்லத், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா உள்ளிட்ட தலைவர்களுடனும் என்னுடனும் மிகுந்த நேசம் பாராட்டி ஆழமான அன்பும், பாசமும் கொண்டு விளங்கியவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், ஜமாஅத் துல் உலமா சபையும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திய பெருமை ஹஜரத் அவர்களுக்கு உண்டு.

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியை நிறுவியதில் மிகப் பெரும் பங்காற்றியவர். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மிகப் பெரும் பணியாற்றியவர்.

அவருடைய எழுத்தும், சொற்பொழிவுகளும் இஸ்லாமிய மார்க்கத்தின் பெருமையை நிலை நிறுத்தியதோடு அனைத்து சமுதாய மக்களையும் சன் மார்க்கத்தின்பால் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

தமிழக அரபிக் கல்லூரி , மதரஸா கல்வி, மார்க்க கல்வி மக்கள் மத்தியில் சென்றடைய நத்வி ஹஜரத் போன்ற உலமாக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

ஆலிமின் மரணம் அகிலத்தின் மரணம் என்பர். அவரின் மறைவால் அறிவுலகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அல்லாஹ் தன் கருணையால் நிரப்பிட அனைவரும் பிரார்த்திப்போமாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்வதோடு அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் பிரார்த் திக்க கேட்டுக்கொள்கின்றேன். ஜனாஸா இன்று (22-2-2009) இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டகுப்பம் ஜாமிஆ மதரஸா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படு கின்றது.

கவிஞர் தஞ்சை நபிநேசன் காலமானார்

தஞ்சாவூர், பிப்.22-

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தஞ்சை மாவட்ட பொருளாளரும், தலைமை நிலைய பேச்சாளருமான சமுதாய கவிஞர் தஞ்சை நபிநேசன் (ஜியாவுதீன்) இன்று (22-2-09) அதிகாலை தஞ்சையில் காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும், சமுதாயப் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.

தஞ்சை நபிநேசன் என்று பரவலாக அறியப்பட்ட எச். ஜியாவுதீன் 1992-ம் ஆண்டு முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகிறார்.

தஞ்சை மாவட்ட காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் போன்ற பதவிகளை வகித்த அவர் தஞ்சை மாவட்ட பொருளாளராக பதவியேற்று முஸ்லிம் லீகின் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

பூண்டி புஷ்பா கல்லூரியில் பி.எஸ்ஸி., பட்டம் பெற்ற அவர் அண்ணாமலை பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி மூலம் எம்.ஏ. பட்டம் பெற்றார். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் ஏராளமான நுல்களை எழுதியுள்ளார்.

விசா பறவைகள்|, புனித நபியே - புகழ் நிலவே|, பிரார்த்தனைப் பூக்கள்|, பச்சை வானில் பொன்விழா பிறைகள்|, தாஜ்மஹால் மனசு|, அண்ணல் நபியின் அற்புத அறிவுரைகள்|, என் நண்பனும் - தேநீர் கோப்பையும்|, புரியாத நட்சத்திரங்கள்| போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இலங்கை வானொலியில் இவரது உரைகள் இடம் பெற்றிருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 5 மணியளவில் தஞ்சையில் அவரது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு தாயும், மனைவியும் உள்ளனர்.

இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி யில் அவரது ஜனாஸா நல்லடக்கம் நடை பெறுகின்றது.

கவிஞர் தஞ்சை நபிநேசன் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

கவிஞர் நபிநேசன் சிறந்த கவிஞர். கட்டுரையாலும், கவிதையாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை கோட்பாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். முஸ்லிம் லீகின் வரலாற்றையும், முன்னணி தலைவர்களை படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக திகழ்ந்து வந்தவர்.

சமுதாய எழுச்சிக்கும், மார்க்கத் துறையின் வளர்ச்சிக்கும், முஸ்லிம் லீகின் வலிமைக்கும் காலமெல்லாம் பணியாற்றிய நனிசிறந்த நல்லவர்.

முஸ்லிம் சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் லீகில் உள்ள ஒவ்வொரு வரையும் சரியாக எடைபோடுவதிலும் அவர்களின் பற்றி எழிலார்ந்த குணங்களை விளக்குவதிலும் வல்லவராக விளங்கியவர்.

அண்மையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்று விருதையும் பெற்றார்.

கவியரங்கம், பட்டிமன்றம், சர்வகட்சி கூட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய கொள்கைகளை தெளிவாகவும், உறுதியாகவும் விளக்க கூடியவராக விளங்கி வந்தார்.

அவரின் மறைவு முஸ்லிம் லீகிற்கு பேரிழப்பாகும். தாய்ச்சபையின் சார்பில் மறைவுற்ற கவிஞர் நபிநேசனின் குடும்பத்தா ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரின் மஃபிரத்துக்கு அனைவரும் துஆ செய்திட கேட்டுக்கொள்கின்றேன்.

Thursday, February 19, 2009

ஐ.ஏ.எஸ். தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி

பொருளாதார வசதியற்ற, படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற சென்னையில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.
இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள்
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவர்களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்சி., (10-ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும், ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும் சுய விவரக் குறிப்பினை க்ஷiடி-னுயவய உடனடியாக அனுப்பி விண்ணப் பிக்கலாம்.

முகவரி -
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118ஃ13, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 3.
அலைபேசி, பொதுச் செயலாளர் - 9444165153

Wednesday, February 18, 2009

தமிழக அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் நன்றி

தமிழ்நாடு அரசு பிப்ரவரி 17-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பள்ளி வாசல்கள் - தர்காக்கள் - மதரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் மார்க்க அறிஞர்கள், சமுதாய அமைப்புக்கள் வரவேற்பு தெரிவித்து நன்றி கூறியுள்ளன.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையான உலமா நல வாரியம் அறிவித்ததற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், உலமாக்கள் - பணியாளர் நலவாரிய அறிவிப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்ததோடு தமிழக முதல்வர் கலைஞர், நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்திருந்தார்.

வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது சமுதாய கோரிக் கையை ஏற்று உலமாக்கள் - பணியாளர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்புகளை வெளியிடுமாறு இமாம்களையும் - முத்தவல்லிகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக நிதிநிலை அறிக்கையில் உலமாக்களுக்கு நல வாரியம் அறிவித்து இருப்பது இஸ்லா மியர்களுக்கு மறக்கமுடியாத மாபெரும் வரலாற்று சாதனையாகும்.உலமாக்கள் என்பவர்கள் இஸ்லாம் தோற்றுவித்த நபிகள் நாயகம் (ஸல்) வாரிசு ஆவார்கள். இஸ்லாமியர் அனைவரும் இவர்ளை மிகவும் மதிக்கக்கூடியவர்கள், மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தலைமையில்தான் தினமும் ஐந்து வேளை இறைவனை தொழுகிறோம்.இஸ்லாமியர்களுக்கு அவரிடும் கட்டளைகள்தான் சிரமேற்கொண்டு திருக்குர்ஆன் மற்றும் நபி வழியில் நடக்க வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில் மதிக்கக் கூடிய இவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. சில உலமாக்களுக்கு ஊதியம் போத வில்லை. இவர்களுக்கு நல்ல மருத்துவம்கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. மார்க்கத்தில் உயர்ந்தவர்கள் என்றாலும் சாதாரண பள்ளிகளில்கூட இவர்களின் பிள்ளை களை சேர்க்க முடிவதில்லை.எனவே, இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உலமாக்கள் நலவாரியம் ஏற்படுத்த வேண்டுமென்ற ரமளான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும், பின்னர் உலமாக்கள், உமராக்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அச்சாக இருக்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது முதல் அசை;சரிடம் இந்த கோரிக்கையை எடுத்துச்சென்று ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார். கேட்ட மாத்திரத்திலேயே உலமாக்கள், நலவாரியம் அமைத்துக் கொடுத்த சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய பெருமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக் கிறார்.


தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா


தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியாற்றி வருகின்ற உலமாக்களுக்கும் - பள்ளிவாசல்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை வரவேற்கிறது.சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று நல வாரியம் அமைத்துள்ள மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையி லான தமிழக அரசுக்கும், இதற்காக முயற்சித்த அனைவருக்கும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உளப்ப+ர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என்று அதன் மாநிலத் தலைவர் மவ்லானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மவ்லானா எம்.ஓ. அப்துல் காதிர் தாவுதிஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்க ளும் பயன்பெறுகின்ற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று உலமாக்கள் நல வாரியம் அமைத்த தற்கும், இதற்கு பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் மவ்லானா எம்.ஓ. அப்துல் காதிர் தாவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவுதிதமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் ஈரோடு மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாய நலனுக்காகவே உழைத்து வரக்கூடிய சங்கைக்குரிய உலமாக்களின் நலிவினை போக்கும் வகையில் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு உலமா பெருமக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.


சென்னையில் அண்மையில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சரியான நேரத்தில் நடத்தி சமுதாயத்திற்கு தேவையான பல தீர்மானங்களை நிறைவேற்றியது.


அதில் ஒரு முக்கியமான தீர்மானம் இன்று நிறைவேறியிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் வேளையில் மற்ற தீர்மானங்களையும் தமிழக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரவேண்டும் என்பது இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. இதற்கு நிச்சயம் வரும் தேர்தலில் சமுதாயம் நன்றியை செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹ{த்தீன் ரியாஜிஉலமாக்கள் நலவாரியம் அமைப்பதற்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை யின் சார்பில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹ{த்தீன் ரியாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


சென்னை மாவட்ட ஜமாஅத்


ஜமாஅத்துல் உலமா சபையும் இதர இஸ்லாமிய இயக்கங்களும் முறையிட்டு வந்த உலமாக்கள் நல வாரியத்தை அமைத்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் உலமாக்கள் நல வாரியம் அமைந்திட வலியுறுத்தி சரியான நேரத்தில் சரியான முறையில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டில் கோரிக்கை வைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தாய்ச்சபையின் நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை கொஞ்சும் தமிழில் இதயம் மகிழ்ந்து தெரிவித்துக்கொள்கிறது.அன்பான இறைவன் அனைவருக்கும் இன்னருள் என்றும் புரிந்திடுவானாக என்றும் பிரார்த்தனை செய்கிறது.இவ்வாறு சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஓ.எஸ்.எம். இல்யாஸ் காஸிமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹம்மதலி, சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் மேலை நாசர், தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடலுழைப்பு பிலால்கள் நல சங்கத்தின் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் எம்.ஏ. முஹம்மது ஹனீப் சாகீர் உள்ளிட்டோரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



அண்ணா அறிவாலயத்தில் நேரில் நன்றி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், அப்துல் பாசித், மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கமுதி பஷீர், கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் மவ்லானா என். ஹாமித் பக்ரீ, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆப்பனூர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், தென்சென்னை மாவட்ட தலைவர் கே.பி. இஸ்மத் பாட்ஷா, முஸ்லிம் லீக் பதிப்பக உறுப்பினர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோரை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

உலமாக்கள் நன்றி

சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி, வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி, கலிலுர் ரஹ்மான் மன்பஈ, மாநில செய்தி தொடர்பாளர் கா. முஹம்மது இல்யாஸ் ரியாஜி, மற்றும் முஹம்மது ஹனீப் பாகவி, மன்சூர் காசிபி, அப்துர் ரஹீம் பாகவி, அப்துர் ரஹ்மான் மன்பஈ, ஷாகுல் ஹமீத் ரஹ்மானி, உள்ளிட்ட உலமாக்களும் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் சென்று பேராசிரியர் க. அன்பழகனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது தமிழக வக்ஃப் வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் உடனிருந்தார்.

.

தமிழக அரசுக்கு நன்றி

சென்னை, பிப். 17:
உலமாக்கள் நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியம், இந்திய தவ்ஹுத் ஜமாஅத், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் செ. ஹைதர் அலி: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸôக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், முஸ்லிம் அநாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்காக "உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர் நலவாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

இந்திய தவ்ஹுத் ஜமாஅத்தின் பொதுச் செயலர் ஏ. முகம்மது சித்திக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் பொதுச் செயலர் ஹக்கீம் சையது சத்தார் ஆகியோரும் உலமாக்கள் நலவாரியம் அமைத்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tuesday, February 17, 2009

stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிசிசிஸ்

<பீவீஸ் ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ5.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ5.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />ணீ>தமக ன் த யம்??பீவீஸ்><பீவீஸ் ணீறீவீரீஸீ="றீமீயீt">தமிழகம் எங்குபீவீஸ்><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />ணீ>மனிதஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ3.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ3.யிறிநி" ஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ1.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ1.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />ணீ>ஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ2.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ2.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />ணீ> முஸ்லிம்கள் ஜீ><ஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" /><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" /><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" / ஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ ஆரம்பிக்கப்ட <ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />மனத லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீமீறீணீவீஸீணீsணீக்ஷீ.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/அட்டைக்

Wednesday, February 11, 2009

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தப்லீக் பிரமுகர் புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு உதவி

கொலை செய்யப்பட்ட புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த 2 லட்ச ரூபாய் நிதியை அவரது மனைவி சவுதால் பீவியிடம் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வழங்குகிறார். அருகில் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி செயலாளர் புளியங்குடி எம். காதர் மொகிதீன்.

திருநெல்வேலி, பிப்.11-
புளியங்குடியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 09-02-2000 அன்று தப்லீக் ஜமாஅத் பணி செய்வதற்காக பாளையங்கோட்டை கிரசன்ட் நகர் பள்ளி வாசலில் இருந்தபோது வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் கொல்லப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது இவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 2 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக இன்றைய டி.ஐ.ஜி.யும், அப்போதைய எஸ்.பி.யும் ஆன கண்ணப்பன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டு அப்துல் ரஷீத் சொந்த காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டதாகவும், கொலையாளி அவர் மகன்தான் என்றும் அறிவித்து அவரது மகன் மைதீன் பிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைத் தொடர்ந்து அரசு அறிவித்த நிவாரணத் தொகை திரும்பப் பெற்றது. இச் சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அன்றைய மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் அன்றைய மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதவ்வர் கலைஞரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக சி.பி. சிஐ.டி. விசாரணை கோரி னர்.. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு முஸ்லிம் லீக் பிரமுகர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். கோதர் மொகிதீன், வி.எஸ். டி. சம்சுல் ஆலம் மற்றும் காயல் மகபூப், எல்.கே.எஸ். மீரான் முகைதீன் உள்ளிட்டோர் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த மொய்தீன் பிச்சையிடம் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

உண்மைகளை தெரிந்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப் பிரச்சினையில் நீதி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாநாடுகளிலும், செயற்குழு - பொதுக் குழு கூட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு அப்துல் ரஷீத் கொலைக்கும், அவரது மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முடிவு செய்யப்பட்டு சிறையிலிருந்த அவர் மகன் மொய்தீன் பிச்சை விடுவிக்கப்பட்டார். அவர் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட நிவாரணத் தொகை 2 லட்ச ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

சமீபத்தில் புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இது தொடர்பான கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அரசு அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதி வழங்கியது. 09-02-2009 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிரகாஷ் இந்த நிதியினை அப்துர் ரஷீத்தின் மனைவி சவுதால் பீவியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி அமைப்பாளர் புளியங்குடி எம். காதர் மொகிதீன் ஆகியோர் உடன் இருந்தனர். அரசு வேலை வழங்கவேண்டுகோள்கொலை வழக்கில் அநி யாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மொய்தீன் பிச்சைக்கு நீதி கிடைக்கும் வகையிலும் காலதாமத மாக இந்த உதவி வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டும் மொய்தீன் பிச்சைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.
.

முஸ்லிம் லீகின் அவாவும் - துஆவும் இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்-

கடலூர், பிப்.11-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஆசையும் - பிரார்த்தனையும் இலங்கை யில் அமைதி திரும்ப வேண்டும். கலைஞர் பூரண நலம் பெறவேண்டும் என்பதுதான் என தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க துறை செயலாளர் மவ்லானா தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் உரையாற்றினார்.

கடலூரில் இலங்கை தமிழர்களுக்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது-இலங்கையில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதையும், போரின் மரபையும், வரம்பையும் மீறி சின்னஞ் சிறு குழந்தைகள் கொல்லப்படுவதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவரும், மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது சாஹிப் அவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச் செயலாள ரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி,யும் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அரசியல்ரீதியாகத்தான் தீர்க்க முடியும். தீர்வுகாண முடியும் என்று தெளிவாக சொல்லி தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவை வழங்கி வரும் என்று சொல்லியுள்ளனர்.

நம் நாட்டிலுள்ள சில தலைவர்கள் தேர்தலுக்காக இலங்கைப் பிரச்சினையை அரசியலாக்கி வருகிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும், மேம்பாடுகளுக்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். உடல் நலம் குன்றிய நிலையிலும், மருத்துவமனையிலும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பெருந்தலைவர் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அஹமது சாஹிப், அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., ஆகியோர் முதல்வர் கலைஞரை மருத்துவ மனையில் சந்தித்து அவர் பூரண நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தி வந்தார்கள்.உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையிலும் முதல்வர் ஆற்றி வரும் சேவையை எங்கள் தலைவர்கள் நெஞ்சுருக பாராட்டினார்கள். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படு வதை நிறுத்த வேண்டும். உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற்று நலமுடன் வாழ்ந்து நமக்கும், நாட்டுக்கும் பணி செய்திட பிரார்த்திக்கின்றோம்.

இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் உரை யாற்றினார்.கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பொதுக் கூட்டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் ஹாஜியார், மாவட்ட துணைத் தலை வர்களான லால்பேட்டை கே.ஏ. முஹம்மது, மங்களம்பேட்டை அப்துர் ரஹ்மான், கடலூர் கமாலுத்தீன், மாவட்டச்செயலாளர் ஏ. சுக்கூர், துணைச் செயலாளர்கள் லால்பேட்டை கே.ஏ. அமானுல்லா, விருத்தாசலம் லியாகத் அலி, அப்துல் மஜீத், நெல்லிக்குப்பம் ராஜா ரஹிமுல்லா, மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீத்கான், மாவட்ட இளைஞர் அணை அமைப்பாளர் முஸ்தபா, கடலூர் நகரத் தலைவர் அக்பர் அலி, செய லாளர் இஸ்மாயில், பொருளாளர் ஷரீப், மாவட்ட பொருளாளர் மங்களம்பேட்டை ஹபீபுர் ரஹ்மான், லால்பேட்டை நகரச் செயலாளர் முஹம் மது ஆசிப், இளைஞர் அணிச் செயலாளர் சல்மான் மற்றும் மாவட்டம் முழுவதிலுமிருந்தும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

உடலில் முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடும் விமர்சனங்களை தாங்கி தமிழர்களுக்காக உழைக்கின்றவர் கலைஞர்

திருவள்ளுர், பிப்.10-
உடலிலே முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடும் விமர்சனங்களை தாங்கி தமிழர்களுக்காக உழைக் கின்றவர் கலைஞர் என்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது உரை யாற்றினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் திருவள்ளுரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரை யாற்றுகையில் அவர் பேசியதாவது-சமீபத்தில் இலங்கை தமிழர் படுகொலை பிரச்சினை உக்கிரமானபோது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து அந்த இனப்படு கொலை யைத் தடுத்து நிறுத்த இங்கிருந்து ஒரு மித்த குரல் கொடுக்க ஓரணியில் திரளக் கூடாதோ என்று பத்திரிகை வாயிலாக கவிதை ஒன்று எழுதி அழைத்தார்.

அதற்கு ஆதரவு தெரிவித்து நான் எழுதிய ஒரு கவிதையை இந்த மேடையில் எங்கள் இயக்கத்தின் சார்பாக அரங்கேற்றுகிறேன்.

ஓரணியில் திரண்டிடுவார் உலகத்து தமிழர்க ளெல்லாம் பேரணியாய் கலைஞர் தம் தலைமை ஏற்று தாரணியை மீட்டு வரும் தமிழர் கூட்டம் ஊர் அணியை அமைத்தவரே தமிழகத்தில் யார் அணியும் ஜெயிக்காது நீரே வெல்வீர்.உடலிலே முதுகுவலியோடும் - உள்ளத்திலே இலங்கை வலியோடும் உடல் தாங்குகிறதோ இல்லையோ எதிர்க்கட்சிகளின் மோசமான விமர்சனங்களை உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும். இலங்கைத் தமிழர் களின் வாழ்வு பள்ளமாகி விட என உடல் உள்ள வேதனையோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழினத் தலைவர் கலைஞருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக தெரியப் படுத்துகிறேன்.

இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான அண்ணன் - தம்பிகள், தாய்மார்கள், சகோதரிகள், அப்பா - பிள்ளைகள் நமது தமிழினம் அழிந்து கொண் டிருக்கிறது. இந்த அவலமான சூழ்நிலையில் தமிழகத்தில் கட்சி மாச்சாரியங்களையெல்லாம் மறந்து நாமெல்லாம் தமிழர்கள் என்ற ஒருமித்த உணர்வோடு செயல்பட வாருங்கள் என அழைக்கும் கலைஞர் அவர்களது பரந்து விரிந்த அழைப்பு என்பது இலங்கை தமிழர் களை மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதியிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு தருவதாகும்.

நாம் பிரிந்து நின்றால் இந்த பாதுகாக்கும் செயலை வலிமையாக செய்ய இயலாது. அவ்வாறு செய்வது நம்மை நாமே பல வீனப்படுத்தி தமிழர்களை பாதுகாக்கும் செயலையும் நம்மை செய்யவிடாது செய்துவிடும் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தி ஒருங்கிணைந்து போராடவே இந்த இலங்கை தமிழர் நல உரிமை பேரவை நோக்கமாக கொண்டு பாடுபடுகிறது.

உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர், மூதறிஞர் கலைஞர் அவர்களது தலைமையில் முடிவெடுக்கப்பட்டு முயற்சிகளை மேற்கொள்கின்ற இது சம்பந்தமான அனைத்து செயல்களிலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அருந்தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரிய பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களது வழிகாட்டுத லில் இயங்கும் இயக்கத்தை சேர்ந்த நாங்கள் அனைவரும் மனிதச்சங்கிலி போராட்டம், பேரணி, பொதுக்கூட்டம் அனைத் துக் கட்சிகளின் கூட்டம் என்று எல்லா நடவடிக்கைகளிலும் நாடு தழுவிய அள வில் கலந்து கொண்டு வலிமை சேர்த்து வருகின்றோம்.

தலைவர் கலைஞர் அவர்களது வழித் தடத்தை கிஞ்சித்தும் பிசகாது இந்த பிரச்சினை நடைபோட்டு வருகிறோம். இதுபோல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் ஒன்று திரள வேண்டும் என மிக்க பணிவன்போடு எங்கள் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று பாடினார்கள். அது என்ன குணம், தமிழன் உயிர் பிச்சைக் கேட்டு யாரிடமும் தாழ மாட்டான்.

கடைசிவரை எதிர்த்து போராடுவான். அதுபோல் தன்னை நம்பி வந்தவரை தாழ்த்தவும் மாட்டான் - வாழ்த்துவான், வாழவைப்பான். அதனால்தான் ஹவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று தமிழர்களை உள்ளடக்கிய தாய் தமிழகம் நம்மு டையது. அப்படிப்பட்ட தமிழனை இலங்கை அரசு அழிப்பது நியாயமா என்பதைத்தான் நமது தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு கோஷமாக்கித் தந்துள்ளார்கள். இதைத்தான் நாமக்கல் கவிஞர் ஹதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேநம்மை அழிக்கும் ராட்சசேதமிழன் மேலே கையை வச்சேநிறுத்த மாட்டோம் எங்கள் பேச்சே என தமிழக மக்கள் எச்சரித்து - உச்சரித்து இந்த கூட்டத்தின் மூலம் தெரிவிக்கின்றோம்.இலங்கைத் தமிழர் இன படுகொலையை நிறுத்த தொடர்ந்து தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது தலைமையிலும், தமிழின தளபதி அவர்களோடு அணி வகுத்து முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் அவர்களை பின்தொடர்ந்து நாமெல்லாம் அயராது பாடுபடுவோம் என்பதை உறுதிப்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை ஓயமாட்டாம். நிலையான அமைதிக்கு வழி காண்போம்! தடுப்போம்! தடுப்போம்!

இனப் படுகொலையை தடுப்போம்! என்ற தலைவர் கலைஞர் அவர்களது வாய் - மெய் மொழியை வழிமொழிந்து பாவேந்தர் பாரதிதாசன் பாடிய எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - என்ற சங்கநாதம் நம் காதுகளில் ஒலிக்கட்டும் என கூறி முடிக்கின்றேன். இவ்வாறு வடக்கு கோட்டையார் வ.மு. செய் யது அஹமது உரையாற்றினார்.

Monday, February 9, 2009

வளைகுடாவாழ் சகோதரர்களின் அவலநிலைகள்

தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம்

َلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكةُ
போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் முஸ்லீம்கள் அன்று தனித்து விளங்கினர்.

இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அண்ணியர்களை விரட்டியடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினர்.

அவ்வாறு அன்னியர்களை விரட்டியடிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர்களால் பாரதம் முழுவதிலும் பரந்து கிடந்த தங்களின் பெரும்பான்மை சந்ததியினரின் எதிர்காலத்தைப் பற்றி அறவே சிந்திக்கத் தவறி விட்டனர்.

ஆனால் ஓர் இனம் மட்டும் தங்களுடைய சந்ததியனருடைய எதிர்காலம் பற்றி ஆழ்ந்து சிந்தித்தது
நாமே வந்தேறிகளாக இருப்பதால் இந்த பூமியை ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ?

ஆட்சி அரியணையின் ஓரத்தில் நமக்கோர் இடம் வேண்டும் !
நமக்குப் பின் நமது சந்ததியினருக்கு முழு ஆட்சி பீடமும் வேண்டும் என்று சிந்தித்தது.

ஒரு புறம் உச்சி வெயிலில் சுதந்திரப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போதே கொள்ளைப் புறத்தில் நள்ளிரவில் வெள்ளையர்களுக்கு காட்டிக் கொடுக்கும் கள்ள அமர்வில் அந்த கயமைக் கும்பல் அமர்ந்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது.

சுதந்திரப் போராட்ட முஸ்லீம் வீரர்களுடைய முகாம்களையும், பதுங்குக் குழிகளையும் ஆக்ரமிப்பாளர்களுக்கு காட்டிக்கொடுத்து அவர்களுடைய சிம்மாசனத்தை தாங்கிப் பிடிக்கும் தூத்துத் தூக்கிகளாக மாறி அன்றே அவர்களின் அரியனையின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டார்கள்.

அதனால் இன்று சுதந்திர இந்தியாவின் முழு அரியணையையும் காட்டிக் கொடுத்தவர்களுடைய வாரிசுகள் கைப்பற்றிக் கொண்டனர்.

உயிரைப் பணயம் வைத்துப்போராடி தாய் மண்ணிலிருந்து ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சொந்த நாட்டின் ப்ளாட்பாரங்களில் பெட்டிக்கடை வியாபாரிகளானார்கள் !

இந்த நேரத்தில் இதை ஏன் நாம் நிணைவுப் படுத்துகின்றோம் ?

இது ஆகஸ்ட் 15ம் அல்ல !
ஜனவரி 26ம் அல்ல !

ஆனால் மார்ச் 2ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் 2 க்கான முழு ஆண்டு பரீட்சை தொடங்கவிருப்பதால் தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக விழிப்புணர்வூட்டுகிறோம்.

கடந்த கால முஸ்லீம் சமுதாயத்துடைய உச்சகட்டப் படிப்பு என்பது எஸ்.எஸ்.எல்.சி வரை, அல்லது ப்ளஸ் 2 வரை தான் அதற்கு மேல் போக மாட்டார்கள்.

இனிவரும் காலங்களில் அதற்கு மேலும் படிப்பைத் தொடர வேண்டும் படிப்பின் சிகரத்தை எட்ட வேண்டும் பின் வாங்கக் கூடாது என்பதற்காக இந்நேரத்தில் இதை நாம் நிணைவுப் படுத்துகிறோம்.

நாம் பிறந்த மண்ணிலேயே மற்ற சமுதாயத்தினர் அரசுத் துறைகளில் வேலை செய்து கைநிறையப் பொருளீட்டி தனது குடும்பத்தினருடன் நிம்தியாக வாழ்வது போல் நாமும் நம்முடைய வாழ்வை அவர்களைப் போல் சுதந்திரமாக அமைத்துக் கொள்வதற்காக கல்வி கற்று அரசாங்க உத்தியோகத்தில் இடம் பிடிப்பதற்காக எத்தனையோ முறை அறவழிப் போராட்டங்கள் செய்துப் பார்த்தும் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகி விட்டது. கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் உள்ளது.

ஆள்வோருடைய செவிப்பறைகளைத் தட்டுவதைப்போல் அதை விட இன்னும் செவிலில் அறைந்தாற் போல் சச்சார் கமிட்டி தனது அறிக்கையை முஸ்லீம்கள் கல்வி அறிவிலும், அரசாங்க உத்யோகத்திலும் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்று உரக்கக் கூறியும் அது அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்களாகிய நாம் அயல்நாட்டில் பிழைப்புத் தேடித் திறியும் சமுதாயமாகி விட்டோம். நம்முடைய நிலமை இது தான் என்று தெள்ளத் தெளிவாக ஆனப்பிறகு அதிலாவது முறையாக ஏன் கால் ஊண்டக் கூடாது ?

படிப்பறிவில்லாமலும்> கைத்தொழில் கற்காமலும் அயல்நாட்டிற்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நம் சமுதயாத்தின் நிலை என்னத் தெரியுமா ?

ஆடு, மாடுகளை மேய்ப்பவர்களாகவும்>,
விவசாயிகளாகவும்,
ரோடு போடுகின்றவர்களாகவும்,
ரோடு கூட்டுகின்றவர்களாவும்,
கார் கழுவுகின்றவர்களாகவும்,
கட்டடம் கட்டுவதற்காக கற்களை சுமப்பவர்களாகவும்>,
சந்தைகளில்> மார்கெட்களில் லோடிங்> அன் லோடிங் செய்பவர்களாகவும்.

கால் நூற்றாண்டுகளைக் கடந்து அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் இளமையைத் தொழைத்து முதுமையை ஈன்று தாயகம் திரும்புகினற்னர்
இதில் இன்னும் கொடுமை என்னத் தெரியுமா ?

இத்தனை ஆண்டுகள் கடந்து தாயகம் திரும்பும் பலருக்கு சொந்த வீடு இருக்காது.

வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் இளமை தேய்ந்து கொண்டே செல்லும் கடமைகள் முடிவதில்லை.

இதெற்கெல்லாம் என்னக் காரணம் ?
படிக்காமல் அரபு நாடுகளுக்கு வேலைத் தேடி வந்து மிகவும் குறைந்த சம்பளத்தில் லேபர் வேலையில் சேருவதால் லடசக் கணக்கில் செலவு செய்து வந்தக் கடனையும் சீக்கிரத்தில் அடைக்க முடிவதில்லை, குடும்பத்திற்கான அடிப்படை கடமைகளையும் செய்து முடிக்க முடிவதில்லை. ஆனால் முருக்கேறிய வாலிபப் பருவம் சிறுது, சிறிதாக கரைந்து தொழைந்துப் போய் வீடுத் திரும்புகிறோம்.

அதில் பலர் தாயகம் திரும்பாமலேயே வந்த இடத்தில் ஆக்ஸிடென்டுகள் மூலமும்> ஹார்ட் அட்டாக் மூலமும் அகால மரணத்தைத் தழுவி விடுகின்றனர்.

தலைமாட்டில் நின்று அழுது நெற்றியில் முத்தமிட்டு எடுத்துச்சென்று புதைக்கக் கூட நாதியில்லாமல் ஊரார் கூடி புதைக்கும் பரிதாபத்திலும் பரிதாப நிலை.

யாருக்காக பிறந்த மண்ணை விட்டு அண்ணிய மண்ணுக்கு பிழைப்பு தேடிவந்து மண்ணோடு மண்ணாகிப் மடிந்துப் போனாரோ அன்னாருடைய வாரிசுகளுக்காக 5 ரியால் 10 ரியால் வசூல் செய்து அனுப்பி வைக்கும் அடுத்த அவல நிலை.

அன்புள்ளம் கொண்ட தாய் - தந்தையரே !
கடன் வாங்குவதற்கும், திருப்பிக் இறைவன் அனுமதித்திருப்பதால் கடன் பெற்று உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து பட்டதாரியாக, பொறியாளராக, ஆங்கிலப் புலமையுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
அவ்வாறு செய்தால் கைநிறைய சம்பதாதித்து வெகு சீக்கிரத்தில் கடனை அடைத்துவிட்டு தனது குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதுடன் தனது மனைவி பிள்ளகைளை வரவழைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத; தொடர முடியும்.

தவறினால்...
இந்தியாவில் முன்னேறிய சமுதாயத்தவர்கள் அரசு வேலைகளை மட்டும் நம்பாமல் இந்தியா> மற்றும் வெளிநாடுகளில் உதவும் விதமாக சாஃப்ட்வேர் இஞ்சினியராக> சிவில் இஞ்சினியராக> மெக்கானிக்கல் இஞ்சினியராக இன்னும் பிரபல தொழில் நுட்ப கல்விகயைப படித்து விட்டு வெளி நாடுகளில் வந்து நம்மை விட முன்னேறுகிறார்கள்.

ஆயிரம் முஸ்லீம் லேபர்களை வைத்து இயங்கக் கூடிய பிரபலக் கம்பெனிக்கு எம்.டி யாக ஒரு ஐயரையோ, கிருஸ்தவரையோ தேர்வு செய்து கொண்டு வருகின்றனர் அவரும் கம்பெனியை பிரமாதமாக நடத்துகிறார் அதற்குக்காரணம் அதற்கு தேவையானப் படிப்பு அவரிடம் இருப்பதுவேயாகும்.

அதே கம்பெனியில் சேல்ஸ் ரெப்ரஸென்டிவ்களாகவும்> சூப்பர்வைஸர்களாகவும், அவர்களே இருப்பார்கள் அதற்கும் காரணம் அதற்கு தகுந்தப் படிப்பு அவர்களிடம் இருப்பதுவேயாகும்.

படிக்காமல் வெளிநாடு வரும் முஸ்லிம் லேபருடைய சம்பளம் 300 ரியாலாக இருந்தால் படித்து விட்டு வெளிநாடு வரும் அவர்களுடைய சம்பளம் மூவாயிரம் ரியாலாக இருக்கும்.

படிக்காமல் வெளிநாடு வந்து 300 ரியால் சம்பளம் பெருகின்ற உங்கள் பிள்ளைகள் 3 வருடமானாலும் தாய் நாட்டுக்குத் திரும்பி தனது மனைவி பிள்ளைகளை பார்க்க வர முடியாத அளவுக்;கு பண நெருக்கடி சம்பளம் பற்றாக்குறையினால் ஏற்படும்.

படித்து விட்டு வெளிநாட்டுக்கு வருகின்றவர்களுக்கோ வந்த மூன்று மாதங்களில் கடனையும் அடைத்து விட்டு மனைவிப் பிள்ளைகளை வரவழைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.

தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம்.
மார்ச் 2ல் முழாண்டு தேர்வு தொடங்கவிருப்பதால் இப்பொழுதே உங்கள் மகனுக்கு எந்த காலேஜில் என்னப் படிப்பு ? என்ற விபரங்களை சேகரிக்கத் தொடங்குங்கள்.

காலச் சூல்நிலையில் மாற்றம் ஏற்படும் போது இந்திய ஆட்சியாளர்களுடைய உள்ளத்தை இறைவன் புரட்டி விட்டால் பிறந்த நாட்டில் உயர் பதவிகளில் அமருவதற்கும் அந்தப் படிப்பு உதவிடும்> இல்லை என்றாலும் அயல்நாட்டில் கைநிறைய பொருளீட்டுவதற்கு உதவிடும். படிப்பு வீண் போகாது.

படிக்காமல் வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய அவல நிலையும்>
படித்துவிட்டு வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய செல்வ நிலையையும் விளக்கும் வீடியோவை onlinepj.comல் வளைகுடாவாழ் சகோதரர்களின் அவலநிலைகள் எனும் இரண்டு பாகங்களைக் கொண்ட வீடியோவைக் காணத் தவறாதீர்கள்.

இங்கே க்ளிக் செய்யவும Valaikuda Val Avalangal

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template