அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Monday, August 11, 2008

மேலும் 200 உலமாக்களுக்கு ஓய்வூதியம்

தமிழக முதலமைச்சர் கருணாநிதி மேலும் 200 உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்க அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக் குழு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதன் மூலம் ஒய்வூதியம் பெறுபவர் எண்ணிக்கை 2200லிருந்து 2400 ஆக உயர்கிறது. இதுகுறித்த அரசு அறிவிப்பு வருமாறு:-

உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக் குழு கூட்டம் சுற்றுச்சூழல் துறை மற்றும் வக்ஃபு அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் இன்று காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதற்கண் கூட்டத்தில் உலமா ஓய்வூதியர்களின் எண்ணிக்கையை 2200இலிருந்து 2400 ஆக உயர்த்தியதையடுத்து, அதிகப்படியாக 200 உலமாக்கள் ஓய்வ+தியம் பெற வழிவகுத்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலமா ஓய்வூதியம் கோரி நிலுவையில் இருந்த 200 விண்ணப்பதாரர்களுக்கு உலமா ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 2400 உலமாக்களுக்கு மாதம் ரூ.750 வீதம் அவர்கள் வாழ்நாள் வரையில் உலமா ஓய்வூதியம் வழங்கப்படும்.

கூட்டத்தில் எம்.எச்.சம்சுதீன், எம்.ஈ.ஜமாலுதீன் ஆகிய உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரும், உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழுவின் உறுப்பினர் - செயலருமான ஏ.முஹம்மது ஜமாலுத்தீன் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தாற்

Monday, August 4, 2008

ஹச் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்


ஹச் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் இருந்து இவ்வாண்டு ஹச் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக 11 ஆயிரம் பேர் மனு அளித்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 100 பேருக்கு மட்டுமே குலுக்கல் முறையில் அனுமதி கிடைத்துள்ளது.


குலுக்கல் முறையை அடியோடு கைவிட்டு விட்டு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி கிடைத்திடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுகுறித்;து தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template