அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Friday, April 23, 2010

தென்காசி, மன்னார்குடியில் - என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? TNTJ மாணவர் அணி கல்வி கருத்தரங்கம்

தென்காசியில் , TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்


என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : 25/04/10- ஞாயிறு கிழைமை - (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : காலை 9: 30 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிறப்புரை : S. சித்திக் M.Tech (TNTJ மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : காட்டுபாவா உயர் நிலை பள்ளி , மவுன்ட்ரோடு, தென்காசி, நெல்லை மாவட்டம்

தொடர்பிற்கு : 9789514761

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ. நெல்லை மாவட்ட மாணவர் அணி.





மன்னார்குடியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : 25/04/10- ஞாயிறு கிழைமை - (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : மாலை 4 மணி

சிறப்புரை : சகோ.கலீல்.M.B.A

இடம் : ASA திருமண மண்டபம், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்

தொடர்பிற்கு : 9865962542

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ. திருவாரூர் மாவட்ட மாணவர் அணி

Wednesday, April 21, 2010

சென்னையில் நடந்த ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை ஓர் ஆய்வு வீடியோ,

இதில் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை குறித்தும், இந்திய அளவில் முஸ்லிம்கள் எவ்வாறு பின் தங்கி உள்ளனர் என்பது குறித்தும், மத்திய அரசில் நமக்கு 10% இட ஒதுகீட்டின் அவசியத்தையும், இட ஒதுக்கீடு கிடைத்தால் எந்த எந்த துறைகளில் நமக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும், இதனால் நமது சமுதாயத்திற்க்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கப்பட்டுளது.




உரை : S.சித்தீக்.M.Tech- TNTJ மாநில மாணவர் அணி செயலாளர்



Thursday, April 8, 2010

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றிய முழு ஆய்வு, பயிற்சி முகாமிற்க்கு ஏற்பாடு செய்துள்ளது.TNTJ

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றிய முழு ஆய்வு, அறிக்கையின் பரிந்துரைகள் ஆகியவற்றை சமுதாயத்திற்க்கு விளக்கும் வண்ணமாக TNTJ மாணவர் அணி பயிற்சி முகாமிற்க்கு ஏற்பாடு செய்துள்ளது.


நாள் : 11/04/10 - ஞாயிறு கிழைமை
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம் : TNTJ மாநில தலைமையகம், மண்ணடி , சென்னை -1


சிறப்புரை : S.சித்தீக்.M.Tech - TNTJ மாநில மாணவர் அணி செயளாலர்
தொடர்பிற்க்கு : 9884235802


அனுமதி இலவசம் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைகின்றது TNTJ மாணவர் அணி
.

Thursday, April 1, 2010

இந்திய முஸ்லீம்களின் நிலையும் ரங்கநாத்மிஸ்ரா அறிக்கையின் பரிந்துரைகளும்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :


1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.

1950-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் வழக்கஞராக பணியை துவக்கினார்.

1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.

1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்

1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.

25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்

இந்திய முஸ்லீம்களின் நிலை-அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

மக்கள் தொகை (பக்கம் 13)

முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %

அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.

2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25)

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்

2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்

அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைகோடு என்றால் என்ன ?

அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்

மாதவருமானம் (பக்கம் 30)

ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

பரிந்துரைகளில் சில :

1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

அந்த பரிந்துரைகளில் சில :

1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.

இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள்.

இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

தொகுப்பு

S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவர் அணி

Monday, March 29, 2010

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா ஏப்ரல் 2,3,ஆகிய தேதிகளில் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது 02.04.2010. வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது

 இலக்கியக் கழக தலைவர் முனைவர் அய்யூப் தலைமை வகிக்கிறார் ,பொதுச்செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்ப்புரையாற்றுகிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றுகிறார் ,

இந்நிகழ்ச்சியில் அறிஞர் பெருமக்கள் பலரின் நூலினை தமிழக அமைச்சர் உபையதுல்லா வெளியிட்டு உரையாற்றுகிறார் அதனை தொடர்ந்து


இலக்கிய கழக மகளிர் பிரிவு தலைவர் பேராசிரியை சா.நசிம பானு தலைமையில் மகளிர் அரங்கம் நடைபெறுகிறது

ஆன்மிக அரங்கம்

சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் ஆன்மிக அரங்கிற்கு ஹாஜி.அ.அஹமத் பசீர் தலைமை தாங்குகிறார்,ஹாஜி கா.மு.ஜக்கரியா வரவேற்ப்புரையாற்றுகிறார்,ஹாஜி.ப.யூ.அய்யூப்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்கத் துறைச் செயலாளர் அல்ஹாஜ் .தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,ஆலிம் கவிஞர் ஹுசைன் முகமத் மன்பஈ ஆகியோர் சிறப்புரையற்றுகின்றனர் ,

அதனை தொடர்ந்து கவியரங்கம்,ஆய்வரங்கம்,பட்டிமன்றம் ஆகியன நடைபெறுகின்றன

நிறைவரங்கம்

இரவு 7 மணிக்கு நடைபெறும் நிறைவரங்குக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் வ.மு.செய்யது அஹமத் தலைமை தாங்குகிறார்,இலக்கியக் கழக தலைவர் முனைவர் அய்யூப் வரவேற்ப்புரையாற்றுகிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும்,இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக உலக ஒருங்கினைப்பாலருமான முனிருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம்.கதர் மொகிதீன் தமிழ் மாமணி ,சேவைச் செம்மல் ,மற்றும் சாதனையாளர் விருதுகளை சாதனையாளர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு வழங்கி பாராட்டி சிறப்பிக்கிறார் ,

உலக தமிழ் பண்பாட்டுக்கழக தலைவர் அ.ரபியுதீன் ,பேராசிரியர் முகமத் பாரூக்,எஸ்.முகமத் அஸ்லம்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்துகின்றனர்

நிறைவுப் பேருரை

.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும்,இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக உலக ஒருங்கினைப்பாலருமான முனிருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம்.கதர் மொகிதீன் நிறைவுப் பேருரையாற்றுகிறார்,
 
 மாநாட்டு தீர்மானங்களை இலக்கியக் கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் முன் மொழிகிறார் துணைத் தலைவர் முஹம்மத் தாஹா நன்றியுரையாற்றுகிறார்

Wednesday, March 24, 2010

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை சிற‌ப்பு நிக‌ழ்ச்சி : பேராசிரிய‌ர் கே.எம்.கே. ப‌ங்கேற்பு

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை சிற‌ப்பு நிக‌ழ்ச்சி : பேராசிரிய‌ர்


கே.எம்.கே. ப‌ங்கேற்பு



துபாய் : துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் சார்பில் தாய்ச்ச‌பையின்

62 ஆம் ஆண்டு துவ‌க்க‌ விழா ம‌ற்றும் பிறைமேடை மாத‌மிருமுறை இத‌ழ் வெளியீட்டு

விழா 25.03.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை ஈடிஏ அஸ்கான் தொழுகைக்கூட‌த்தில் (

அஸ்கான் ஹ‌வுஸ் ‍ மூன்றாவ‌து த‌ள‌ம் ) ந‌டைபெற‌ இருக்கிறது.



இந்நிக‌ழ்ச்சியில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ த‌மிழ்மாநில‌ இந்திய‌ யூனிய‌ன்

முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் முனீருல் மில்ல‌த் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர்

மொகிதீன் ( முன்னாள் எம்.பி. ) அவ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்புச்

சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.



இந்நிக‌ழ்வில் அனைத்து ஜ‌மாஅத்தார்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌

கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.



மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு : 050 51 96433 / 050 4753052 / 050 67 65 812

Friday, March 19, 2010

வேலைவாய்ப்பு செய்தி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பான சகோதர சகோதரிகளுக்கு,கீழ் இணைத்துள்ள வேலை வாய்ப்புகளுக்கு நேரடி இன்டர்வியூ நடைபெறுகிறது. மேலும் சென்னையிலும் 18 மற்றும் 20 மார்ச் 2010 தேதிகளில் நடைபெறுகிறது. எனவே இந்த துறையில் உள்ள நம் சகோதரர்களுக்கு இச் செய்தியை அறிவித்து இந்தியாவிலேயே நல்ல வேலைவாய்ப்பை அமைத்துள்ள கொள்ள அல்லாஹ்விடம் உதவி தேடுவோம். இது நேரடி இன்டர்வியூ மட்டும் தான் இது சம்மந்தமான வேறு எந்த விபரங்கள் வேண்டுமாலும் இன்டர்வியூவில் கலந்து கொண்டு விளக்கம் கேட்கவும்.
.
My Career: TCS-BYB Walk-in Drive - Across India -20,21-March-2010
.

பேராசிரியர். Dr. அப்துல்லாஹ் (Dr .PERIYAR DASAN) அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு விழா

Monday, March 8, 2010

நீடூரில் மிஸ்பாஹி உல‌மா பேர‌வையின் 17 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட‌ம்

நீடூர் : நீடூர் நெய்வாச‌ல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியில் மிஸ்பாஹி உலமா பேர‌வையின் பொதுக்குழுக் கூட்ட‌ம் இன்ஷா அல்லாஹ் வருகிற‌ 16.03.2010 செவ்வாய்க்கிழ‌மை காலை 9.30 ம‌ணிக்கு ந‌டைபெற‌ இருக்கிற‌து.


இக்கூட்ட‌த்தில் மிஸ்பாஹி உலமாக்க‌ள் அனைவ‌ரும் ப‌ங்கு பெற‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். மேல‌திக‌ தொட‌ர்புக்கு 94423 19264

Sunday, February 28, 2010

இலங்கையில் முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு வரவேற்பு

இன்று காலை முதல் இரவு வரை இலங்கை நாட்டின் வெலிகமை நகரில், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா சார்பில் மீலாத் பெருவிழா நடைபெறுகிறது.



இலங்கை - இந்திய மார்க்க அறிஞர்களும், சமுதாய அறிவாளர்களும் பங்கேற்று உரையாற்றவுள்ள இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணிச் செயலாளர் மௌலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவதோடு, குத்புல் ஃபரீத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமீ (ரலி) அவர்களின் அறபு - தமிழ் அகராதி நூலை பேராசிரயர் கே.எம்.கே, வெளியிடுகிறார்.



காயல்பட்டினம் மவ்லவி எச்.ஏ. அஹமது அப்துல் காதிர் ஆலிம், சென்னை மவ்லவி ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, திருச்சி மவ்லவி இப்ராஹீம் ரப்பானி, மவ்லவி ஹுசைன் முஹம்மது மன்பஈ ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
.

Friday, February 26, 2010

நபிகளாரின் வரலாறு - சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு!

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால்...



அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம்மனைவரின் மீதும் உண்டாவதாக!


சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மற்றுமோர் சிறந்த முயற்ச்சி!

உலகப் பெருந் தலைவர் அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றினை இனிய, எளிய தமிழில், ஆதாரங்களின் அடிப்படையில், ஆய்வு நடையில் எழுதப்படும் சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு! 450 பக்கங்களில் கணிணி அச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 31.10.2010.


முகவரி:
RAHMATH PATHIPPAGAM
RAHMATH BUILDING
No.6, IInd Main Road,
C.I.T. Colony, Mylapore,
Chennai 600 004.
Tamil Nadu, India.
Phone Number : + 91 44 24997373


தொடர்புக்கு: M.A.முஸ்தபா, கைபேசி: +91-95000 37000.


T.K.T.ஷேக் அப்துல்லாஹ்.

ராசல் கைமா

ஐக்கிய அரபு அமீரகம்.

Mobile: +971-55-3848955.

Wednesday, February 24, 2010

அய்மான் சங்கம் நடத்தும் மீலாது விழா!

அன்புடையீர்!

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்ம...

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை மாலை(26.02.2010) அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில் சிறப்புரையாளர்களாக


மொளலவி அபூதாஹிர் தேவ்பந்த் அவர்களும்,

மொளலவி ஷம்சுல் ஹூதா ரஷாதி (வத்தலகுண்டு) அவர்களும்,
சிறப்புரையாற்ற உள்ளனர்.அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமானாரின் வாழ்வியல் வரலாறை கேட்டு பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்:ருசி ரெஸ்டாரண்ட் பென்குயின்ட் ஹால்

ஹம்தான் ரோடு,அல்-மன்சூரி பிளாஸா பில்டிங் முதல் தளம்.

அனைவருக்கும் இரவு உணவு ஏற்ப்படு செய்யப்பட்டுள்ளது.

பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க்க வசதி செயப்பட்டுள்ளதாக அய்மான் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது .

Tuesday, February 23, 2010

பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள்...! டாக்டர் K V S ஹபீப் முஹம்மத் உரை

பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள்...!
 டாக்டர் K V S ஹபீப் முஹம்மத்
வீடியோ உரை

41 இடங்களில் பொது தேர்வு பயிறிசி முகாம்-2 மாதத்தில் நடத்தி TNTJ மாணவர் அணி மீண்டும் ஓர் சாதனை

தமிழகத்தில் இதுவரை யாரும் செய்திராத கல்விசேவைகளை நமது TNTJ மாணவர் அணி அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் சிறப்பாக தமிழகம் முழுவதும் செய்துவருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். குறைந்த செலவில் நல்ல கல்வி பெற அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தேர்வு துவங்குவதர்க்கு முன்னதாகவே தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? என்ற பொது தேர்வு பயிற்சி முகாமை தமிழகத்தில் 20 மாவட்டத்தில் 41 இடங்களில் நடத்தி உள்ளது. (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது). கடந்த இரண்டு மாதங்களாக தேர்வுக்கு மாணவர்களை தயாராக்க TNTJ மாணவர் அணி சகோதரர்கள் மாநில முழுவதும் சுற்று பயணம் செய்து இத்தகைய சாதனையை செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.



திட்டமிட்டபடி மாணவ, மாணவிகளுக்கு, தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது? என்ற கையேடு இலவசமாக வங்கப்பட்டது. மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது? என்ற வீடியோ உரையும் தயாரித்து நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டது. (தமிழகம் முழுவதும் பொது தேர்வு பயிற்சி முகாம் நடத்தபடும் என 4/12/09 அன்று TNTJ மாணவர் அணி உணர்வில் வெளியிட்ட அறிக்கை அட்டாச்செய்யபட்டுள்ளது).



தமிழகத்தில் எத்தனையோ அமைப்புகள், கல்வி அறகட்டளைகள் உள்ளன. யாரும் நம் அளவிற்க்கு (41 இடங்களில் ) பயிற்சி முகாம்களை நடத்தவில்லை, சில அமைப்புகள், அறக்கட்டளைகள் ஓரிரு இடங்களில் நடத்தின. மிக பெறிய அமைப்பு என தங்களை சொல்லிகொள்ளும் அமைப்புகள் கூட 5 அல்லது 6 இடங்களுக்கு மேல் நடத்த இயலவில்லை. அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் நமது TNTJ மாணவர் அணி இந்தகைய சாதனைகளை செய்யதுள்ளது. (இது வரை தமிழக்த்தில் 132 இடங்களில் TNTJ மாணவர் அணி கல்வி சேவை நிகழ்சிகளை நடத்தி உள்ளது குறிபிட்டதக்கது). நிகழ்சிகளை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.

முஸ்லிம் லீக் கடலூர் நகர நிர்வாகிகள் தேர்தல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடலூர் நகர நிர்வாகிகள் தேர்தல் 22-02-2010.அன்று நடைபெற்றது இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் மௌலான தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ.கே.ஏ.ரஹ்மான் தலைமை வகித்தார் தேர்தல்


மேற்பார்வையாளர் டி.கப்பார் கான்,பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ரஷித் ஜான் ,மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அப்துல் கப்பார் மற்றும் செயலாளர் ஏ.சுக்கூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் நகர செயலாளர் எஸ்.முஹம்மது இஸ்மாயில் முன்னதாக அனைவரையும் வரவேற்றார் கடலூர் நகர தலைவர் ஜபார் ,பொருளாளர் எம்.ஷரிப் ,லால்பேட்டை ஏ.எஸ்.அஹமத் மற்றும் கடலூர் நகர செயல் வீரர்கள் மகளிரணி

சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tuesday, February 16, 2010

மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளிகூடங்கள் – மாயையும், தீர்வும்

பெரும்பாலான பெற்றோர்கள் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியிடம் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.
.

Tuesday, February 9, 2010

பிப்ரவரி 14 -கற்பு கொள்ளையர் (காதலர்) தினம்- TNTJ மாணவர் அணி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம்

பிப்ரவரி 14 - கற்பு கொள்ளையர் தினத்தில் நடக்கும் அனாச்சாரங்களையும், சமூக சீர்கேடுகளையும் கலைய TNTJ மாணவர் அணி சார்பாக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யபட உள்ளது (இன்ஷா அல்லாஹ்). பிரவரி 14 காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக வருட வருடம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த சமூக சீர்கேட்டை மீடியாக்கள் நியாப்படுத்தியும், அரசு மவுனமாக வேடிக்கைபார்த்து கொண்டும் இருக்கின்றது, இந்த சமூக சீர்கேட்டில் இருந்து இளைஞர்களையும், இளம் பெண்களையும் மீட்டு எடுக்க நமது TNTJ மாணவர் அணி காதல் என்ற போர்வையில் நடக்கும் சமூக சீர்கேட்டின் விளைவுகளை இளைஞர்களுக்கும் , இளம் பெண்களுக்கும் அறிவுருத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது உள்ளது இன்ஷா அல்லாஹ்.

Monday, February 8, 2010

விடுதலைப்போரில் முஸ்லிம்கள்!!

தினமணி நாளிதழின் தலைமை செய்தியாளர் வி.என்.சாமி எழுதி மதுரை பாவலர் பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஹவிடுதலைப் போரில் முஸ்லிம்கள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பிரஸ் கிளப் அரங்கில் 7.2.2010 ஞாயிறு மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

1112 பக்கங்களில் குஞ்சாலி மரைக்காயர் தொடங்கி நேதாஜிக்கு தொண்டு செய்த அமீர் ஹம்சாவரை விடு தலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு விளக்கமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

திருமண பதிவு சட்டத்தில் விதி விலக்கு ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு தீர்மானம்

விருத்தாசலம் :
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக் கவேண்டும் என ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கூட்டம் நவாப் பள்ளிவாசலில் நடந்தது.

நகர தலைவர் அப்துல்மஜீது தலைமை தாங்கினார். நாகூர்கனிஇ அபுபக்கர்இ பாஷா முன் னிலை வகித்தனர். கூட் டம் குறித்து செயலாளர் சபியுல்லாஹ் பேசினார். சுக்கூர்இ முஸ்தபாஇ யாசீன்இ அலங்கார்இ அப் துல் மஜீத்இ ஜவஹர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்த ஆண்டு மிலாதுநபி விழாவை ஆலடிரோடு நவாப் பள்ளிவாசலில் நடத்தி அனைவருக்கும் ஊர் விருந்து அளிப்பதுஇ அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்கதொகை வழங்குவது தமிழக அரசு அறிவித் துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Sunday, January 31, 2010

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template