அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!
Showing posts with label TNTJ மாணவரணி. Show all posts
Showing posts with label TNTJ மாணவரணி. Show all posts

Tuesday, February 23, 2010

41 இடங்களில் பொது தேர்வு பயிறிசி முகாம்-2 மாதத்தில் நடத்தி TNTJ மாணவர் அணி மீண்டும் ஓர் சாதனை

தமிழகத்தில் இதுவரை யாரும் செய்திராத கல்விசேவைகளை நமது TNTJ மாணவர் அணி அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் சிறப்பாக தமிழகம் முழுவதும் செய்துவருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். குறைந்த செலவில் நல்ல கல்வி பெற அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தேர்வு துவங்குவதர்க்கு முன்னதாகவே தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? என்ற பொது தேர்வு பயிற்சி முகாமை தமிழகத்தில் 20 மாவட்டத்தில் 41 இடங்களில் நடத்தி உள்ளது. (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது). கடந்த இரண்டு மாதங்களாக தேர்வுக்கு மாணவர்களை தயாராக்க TNTJ மாணவர் அணி சகோதரர்கள் மாநில முழுவதும் சுற்று பயணம் செய்து இத்தகைய சாதனையை செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.



திட்டமிட்டபடி மாணவ, மாணவிகளுக்கு, தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது? என்ற கையேடு இலவசமாக வங்கப்பட்டது. மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது? என்ற வீடியோ உரையும் தயாரித்து நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டது. (தமிழகம் முழுவதும் பொது தேர்வு பயிற்சி முகாம் நடத்தபடும் என 4/12/09 அன்று TNTJ மாணவர் அணி உணர்வில் வெளியிட்ட அறிக்கை அட்டாச்செய்யபட்டுள்ளது).



தமிழகத்தில் எத்தனையோ அமைப்புகள், கல்வி அறகட்டளைகள் உள்ளன. யாரும் நம் அளவிற்க்கு (41 இடங்களில் ) பயிற்சி முகாம்களை நடத்தவில்லை, சில அமைப்புகள், அறக்கட்டளைகள் ஓரிரு இடங்களில் நடத்தின. மிக பெறிய அமைப்பு என தங்களை சொல்லிகொள்ளும் அமைப்புகள் கூட 5 அல்லது 6 இடங்களுக்கு மேல் நடத்த இயலவில்லை. அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் நமது TNTJ மாணவர் அணி இந்தகைய சாதனைகளை செய்யதுள்ளது. (இது வரை தமிழக்த்தில் 132 இடங்களில் TNTJ மாணவர் அணி கல்வி சேவை நிகழ்சிகளை நடத்தி உள்ளது குறிபிட்டதக்கது). நிகழ்சிகளை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.

Wednesday, December 23, 2009

இராமநாதபுரம், பரங்கிபேட்டையில் பொது தேர்வு பயிற்சி முகாம்

இராமநாதபுரம்

நாள் : 25/12/09- வெள்ளி கிழமை
நேரம் : காலை 9: 30 மணி
சிறப்புரை : சகோ.கலீல்.MBA (மண்டல மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்), இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்பிற்கு : யாஸின் 9894652633
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.

பரங்கிபேட்டை (கடலூர் மாவட்டம்)

நாள் : ஞாயிற்று கிழைமை (27/12/2009) நேரம் : காலை 9: 30 மணி இடம் : பரங்கிபேட்டை ஷாதி மஹால், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர் தொடர்பிற்கு : 9790325478, 9600613630மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர் மாவட்ட மாணவர் அணி.

Wednesday, December 9, 2009

தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? TNTJ பயிற்சி முகாம்

1. திருவண்னாமலை ,
நாள் : சனி கிழைமை (12/12/2009)நேரம் : மாலை 4 :00 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், கோபால் தெரு, தர்கா சந்து, தவ்ஹீத் நகர், திருவண்னாமலைசிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர்தொடர்பிற்கு : 9486371472, 9787669010மாணவ மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவண்னாமலை மாவட்ட மாணவர் அணி.

2. கோட்டை குப்பம் (விழுப்புரம் மாவட்டம்)

நாள் : ஞாயிற்று கிழைமை (13/12/2009)நேரம் : காலை 10 :00 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், மோர்சார் தெரு, கோட்டை குப்பம், விழுப்புரம் மாவட்டம்சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர் தொடர்பிற்கு : 9600827946மாணவ மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி.

Thursday, November 12, 2009

ஐஐடியில் முஸ்லீம்கள் – மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் :

மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.


இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.10,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.


இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,


இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது. IIT-JEE 2010 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் கீழே இடம் பெற்றுள்ளது).


இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.


ஐஐடி-யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம் : ஐஐடி-யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி-யில் சேருவது மிக மிக கடினம்,


சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும். அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி-யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது, சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர்.


இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை . மாணவ மாணவியர்களே! இதை மாற்ற நாமும் ஐஐடி-யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது மாணவரணி, உங்களுக்கு வழிகாட்ட ஐஐடி-யில் படித்த சகோதரர்களும் நமது மாணவரணியில் உள்ளனர். உயர் கல்வி கற்க முஸ்லீம்களை ஊக்குவிக்க தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றோம். ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது TNTJ மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம்.


நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள். தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.


1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.

2. K. ஹஸன் B.E - 9940611315

IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :(ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்)டிசம்பர் – 19 (19/12/09) இன்ஷா அல்லாஹ்
தேர்வு நடைபெறும் தேதி ஏப்ரல் – 11 (11/04/10)இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி மே – 26 (26/05/10) இன்ஷா அல்லாஹ்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairmen, JEE, IIT Madras,
Chennai - 600036
Phone : 044-22578220
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள்விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி - மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)044-2250 4500 (காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)விண்ணப்பத்தின் விலை :Rs.1,000,(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)வயது வரம்புஅக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :a) +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள்,b) +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.c) 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்குறைந்தபட்ச மதிப்பெண்+2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

Thursday, August 27, 2009

TNTJ மாணவரணி சனி கிழைமை (29/08/2009) அன்று நடத்தும் இப்தார் நிகழ்ச்சிகள், இன்ஷா அல்லாஹ்

1.பரங்கிப்பேட்டை யில் (கடலூர் மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், கோட்டர் தங்கறை தெரு, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்சிறப்புரை : Dr.S. ஜாபர் அலி.P.hdதொடர்பிற்கு : 9790325478அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர் மாவட்ட மாணவர் அணி.

2. ஆடுதுரை அவனியாபுரத்தில் (தஞ்சை மாவட்டம் )
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், பாத்திமா நகர், ஆடுதுரை அவனியாபுரம், தஞ்சை மாவட்டம்சிறப்புரை : A.அப்துல் ரஹ்மான்.(M.Sc) .-மாவட்ட மாணவர் அணி செயலாளர்தொடர்பிற்கு : சாதிக் பாஷா- 9443564240அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ தஞ்சை (வடக்கு),மாவட்ட மாணவர் அணி.

3. இராஜகம்பீரத்தில் (சிவகங்கை மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குசிறப்புரை : A.ஷாகுல் (மாவட்ட மாணவரணி செயலாளர்)இடம் : TNTJ மர்கஸ், இராஜகம்பீரம், சிவகங்கை மாவட்டம்தொடர்பிற்கு : 9003811959அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ சிவகங்கைமாவட்ட மாணவர் அணி.

4. மந்தாரபுதூரில் (கன்னியாகுமரி மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், மந்தாரபுதூர், கன்னியாகுமரி மாவட்டம் சிறப்புரை : அப்துல் வதூத்.(B.E) - .-மாவட்ட மாணவர் அணி செயலாளர்தொடர்பிற்கு : 9944179481அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கன்னியாகுமரி மாவட்ட மாணவர் அணி.

5 ஆலங்குடியில் (புது கோட்டை மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ அலுவலகம், பெரிய பள்ளிவாசல் அருகில், ஆலங்குடி, புது கோட்டைதொடர்பிற்கு : 9043486280அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புது கோட்டை மாவட்ட மாணவர் அணி.

6. புதுமடத்தில் (இராமநாதபுரம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், வடக்கு தெரு பஸ் நிலையம் அருகில், புது மடம், இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பிற்கு : யாஸின் - 9894652633அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.

7. இருமேனியில் (இராமநாதபுரம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், பாபுல் மாலிக் வளாகம், இருமேனி, இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பிற்கு : யாஸின் - 9894652633அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.
.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template