அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!
Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts
Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts

Tuesday, February 23, 2010

முஸ்லிம் லீக் கடலூர் நகர நிர்வாகிகள் தேர்தல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடலூர் நகர நிர்வாகிகள் தேர்தல் 22-02-2010.அன்று நடைபெற்றது இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் மௌலான தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ.கே.ஏ.ரஹ்மான் தலைமை வகித்தார் தேர்தல்


மேற்பார்வையாளர் டி.கப்பார் கான்,பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ரஷித் ஜான் ,மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அப்துல் கப்பார் மற்றும் செயலாளர் ஏ.சுக்கூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் நகர செயலாளர் எஸ்.முஹம்மது இஸ்மாயில் முன்னதாக அனைவரையும் வரவேற்றார் கடலூர் நகர தலைவர் ஜபார் ,பொருளாளர் எம்.ஷரிப் ,லால்பேட்டை ஏ.எஸ்.அஹமத் மற்றும் கடலூர் நகர செயல் வீரர்கள் மகளிரணி

சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tuesday, November 24, 2009

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு பி .முட்லூரில் நடைபெற்றது


கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு பி .முட்லூரில் நடைபெற்றது கூட்டதிற்கு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் கலந்து கொண்டு மாவட்ட பிரைமரி மற்றும் கிளைகளுக்கு யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் படிவங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.


முன்னதாக கடலூர் எம்.ஜபார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தாய்ச்சபையில் தன்னை இணைத்து கொண்டார் இக்கூட்டதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் கப்பார் தலைமை தாங்கினார் செயலாளர் ஏ.சுக்கூர் வரவேற்று பேசினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலான தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் மக்காவிலிருந்து அலைபேசி முலம் தொடர்புகொண்டு இயக்க வளர்ச்சிக்கு துஆ செய்வதாக தெரிவித்தார் மாநில பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ரஷித் ஜான் ,தலைமை நிலைய பேச்சாளர் யு.சல்மான் பாரிஸ் உள்ளிட்ட மாவட்ட பிரைமரி நிர்வாகிகள் கருதுரையற்றினர்கள் மாவட்ட மஹல்ல ஜமாத் ஒருங்கிணைப்பு செயலாளர் பி. முட்லூர் .கப்பார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.


கணக்கரப்பட்டு முன்னதாக சிதம்பரம் தாலுகா கணக்கரப்பட்டு சென்ற அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் .


கணக்கரப்பட்டு பிரைமரி தலைவர் ஷாகுல் ஹமித், செயலாளர் புஹாரி மற்றும் அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகளோடு ஆக்கிரமிப்பில் உள்ள வக்ப் சொத்துக்களை பார்வையிட்டதோடு மீட்பதற்கு உரிய நடவைக்கை எட்டுக்கப்படுமென உருதியளித்தர் கணக்கரப்பட்டு குமார். சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் முன்னிலையில் தாய்ச்சபையில் தன்னை இணைத்து கொண்டார்.

தகவல். இப்னு தளபதி

Monday, September 7, 2009

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

சென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.

சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.

சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.

இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள்.

முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.

சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.

மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.

சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.

சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக

Tuesday, August 25, 2009

அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை இழந்து தவிக்கிறேன்|||தலைவர் பேராசிரியர் இரங்கல்

மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் மறைவு குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி-

தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்த தமிழ் அறிஞர் - இலக்கியச் செல்வர் - முஸ்லிம் லீகின் மாபெரும் வழிகாட்டி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் இரண்டாவது புதல்வர் அப்துல் ஹக்கீம் அவர்கள் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்து இன்று (25-08-2009) செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது. சகோதரர் அப்துல் ஹக்கீம் இளமைக்காலம் முதல் முஸ்லிம் லீக் இயக்கத்தோடு தன்னை பின்னிப் பிணைத்து கொண்டு வாழ்ந்தவர். அடையாறு பிரைமரி முஸ்லிம் லீக் அமைப்பதில் முன்னணியில் இருந்தவர்.

காலப்போக்கில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாள ராக உயர்ந்தார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கிடைத்தது.

தலைமை நிலையச் செயலாளராக அவர் செயல் பட்ட காலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும் - எனக்கும் சட்டரீதியான பல்வேறு இடைய+றுகளும், ஏராளமான வழக்குகளும் நடைபெற்றன. அவைகளில் நாம் வெற்றியடைவதற்கு அரிய ஆலோசனைகளையும், உரிய தகவல்களையும் தந்து பெரும் ஒத்துழைப்பு அளித்தார்.

சிறந்த நிர்வாகியாகவும், தொழில் வல்லுநராகவும் வெளிநாடுகளோடு தொடர்புடைய பல தொழில் அதிபர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் பெற்ற வராகவும் விளங்கியவர். அவருடைய அறிவுரையாலும், வழிகாட்டுதலாலும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் இன்றைக்கும் நன்றி கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளிலும், தன்னை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பின்னர் தீவிரமாக இயக்கப்பணிகளில் அரசியல் கூட்டணி முடிவுகள், தேர்தல் சின்னம் தேர்வு செய்தல் போன்ற பிரச்சினை வரும்போதெல் லாம்ஆலோசனை சொல்லி வந்தார். என்னைப் பொறுத்த வரையில் பல நேரங்களில் அவருடைய ஆலோசனை பெற்று அதன்படி முடிவெடுத்தேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிட அவர் ஆலோசனை காரணமாக இருந்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

எம்.ஏ. பொது நிர்வாக பட்டம் பெற்று தேறியவர். அச்சுக்கலையில் தனிப்பட்டமும் பெற்றவர். படித்துக் கொண்டேயிருப்பதில் அவர் தந்தையை பின்பற்றி வாழ்ந்த சிறப்பு அவருக்கு உண்டு.

முஸ்லிம் சமுதாயத்திற்கும் - முஸ்லிம் லீகிற்கும் நாளேடு இல்லை என்ற குறையை நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காக ஹமெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குவ தற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர். தமது தந்தை சிராஜுல் மில்லத் அவர்களோடு இணைந்து நிறுவனத்தை பதிவு செய்து ஹமணிச்சுடர் நாளிதழை வெளியிடுவோராக இருந்து பணியாற்றியவர்.

1987-லிருந்து ஹமணிச்சுடர் நாளேட்டை சிறந்த ஒரு பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சி மேற்கொண் டார். 1996-ல் சிராஜுல் மில்லத் அவர்கள் ஹமணிச்சுடர் நாளிதழுக்கு என்னைப் பொறுப்பாளராக்கிய சமயத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டில் பிரபலமான நாளேடாக மணிச்சுடரை ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகமூட்டியவர். இறுதி வரை மணிச்சுடர் வெளியீட் டாளராக தொடர்ந்து இருந்து மிகப் பெரிய சேவையை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.

அந்த அன்புச் சகோதரரை - நல்ல ஆலோசகரை - அப்பழுக்கற்ற முஸ்லிம் லீகரை - அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை நாம் இழந்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய துணைவியார், ஒரே புதல்வி ஆகியோருக்கு அல்லாஹ் சபுரன் ஜமீல் எனும் உயர்ந்த உன்னதமான தாங்கும் சக்தியை அருள்வானாக. அவர் பிரிவால் வாடும் அவர்களின் சகோதரர்கள் அப்துல் ஹமீத் பாகவி, அப்துல் வஹாப், சகோதரிகள் அலவியா, ஃபாத்திமா முஸப்பர் மற்றும் உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் வானாக. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுவுலக மேலான பதவியை வழங்கி அருள்வானாக!

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முஸ்லிம் லீக் இயக்கத்தில் நிரப்பி தருவதற்கு தக்கவர்களை அவருடைய மறைவிற்கு இதயம் நிறைந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்!
இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது இரங்கல் செய்தியில் குறிபிப்பிட்டுள்ளார் .

தளபதி ஷபிகுர்ரஹ்மான்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரும் மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத்தின் புதல்வருமாகிய அல்ஹாஜ் அப்துல் ஹக்கீம் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்ததாக தளபதி ஷபிகுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார் .

மக்காவில் இருந்து அனுப்பியிருக்கும் இரங்கல் செய்தியில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளராக சிறப்பாக பணியாற்றி தொடர்ந்து மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளராகவும் இன்றைய அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்த அப்துல் ஹக்கீம் அவர்களின் இழப்பு தாய்ச்சபை முஸ்லிம் லீக்கினருக்கு பேரிழப்பு அன்னாரை பிரிந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஷப்ரன் ஜமிலை வழங்க பிரார்த்திப்பதாக அவர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி இரங்கல்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராகவும், அதன் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு எதிராகவும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு மிகப் பெரும் தொல்லைகள் தரப்பட்ட சமயத்தில் இந்த வழக்கு களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு அரிய ஆலோசனைகளையும் - உரிய தகவல்களையும் தந்து உறுதியாக ஒத்துழைத்தவர் அப்துல் ஹக்கீம். இந்த வழக்குகள் அனைத்திலிருந்து இறையருளால் நாம் வெற்றியடைந்தோம்.

முஸ்லிம் லீகில் கொள்கை உறுதிமிக்க அவரது இழப்பு தாய்ச்சபைக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
வெ. ஜீவகிரிதன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள் .

ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனை குழு இரங்கல்

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப் பினர்களான எம். அப்துல் ரஹ்மான் (வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர்), எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் (அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்), எச். அப்துல் பாசித் (வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர்), பேராசிரியர் குளச்சல் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

வெளியீட்டாளர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவுக்கு மணிச்சுடர் பணியாளர்கள் இரங்கல்

மணிச்சுடர் தமிழ் மாலை நாளிதழ் வெளியீட் டாளரும் மறைந்த சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலமான செய்தி அறிந்து எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் நல் அமல்களை ஏற்றுக் கொண்டு தன் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
-மணிச்சுடர் பணியாளர்கள்



மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளர்- சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் காலமானார்

சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வரும், மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலை 9.30 மணிக்கு கால மானார். ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக் கம் செய்யப்படுகிறது.

தாய்ச்சபையின் தனிப் பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் - நர்கீஸ் பானு தம்பதி யரின் இரண்டாவது புதல் வராக 05-12-1961-ல் பிறந்த வர் ஏ. அப்துல் ஹக்கீம். இவரது உடன் பிறந்த சகோதரர்கள் அப்துல் ஹமீது பாகவி, அப்துல் வஹாப் மற்றும் உடன் பிறந்த சகோதரி அலவியா, ஃபாத்திமா முஸப்பர் ஆகி யோர் ஆகும். இவருடைய துணைவியார் சமீமா, ஒரே மகள் இஸ்ரா.
எம்.ஏ. பொது நிர்வாகம் பட்டம் பெற்ற அப்துல் ஹக்கீம், அச்சுக்கலை நிபுணர் படிப்பையும் படித்துள்ளார். 1986-ம் ஆண்டு சிறுபான்மையினர் குரல் ஒலிக்க ஒரு நாளிதழ் தொடங்க வேண்டும் என சிராஜுல் மில்லத் முடிவெ டுத்த போது அதற்கான முழு பொறுப்பையும் ஏற்று மூத்த பத்திரிகை யாளர்களுடன் கலந்தா லோசித்து 1987-ல் ஏப்ரலில் மாதிரிப் பிரதியையும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி மணிச்சுடர் நாளிதழையும் கொண்டு வந்தார்.

1999-ம் ஆண்டு சிராஜுல் மில்லத் அவர் களின் மறைவுக்குப் பின் முஸ்லிம் லீகில் அவர் முழு நேர ஊழியம் செய்ய வேண்டும் என விரும்பி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இவரை மாநில தலைமை நிலையச் செயலாளராக நியமனம் செய்தார். பல அரசியல் மாநாடுகள், தேர்தல் பணிகள், பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்தி கட்சியின் வளர்ச் சிக்கு பெரும் துணை புரிந் தார்.

தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (மியாஸி) மற்றும் புதுக் கல்லூரியில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்துள்ளார்.
சென்னை அயன்புரத் தில் அமைந்துள்ள டிரஸ்ட் மருத்துவமனை யில் சிறுநீரக நோயாளிக ளுக்கான கவுரவ டிரஸ்டி யாக 2001-ம் ஆண்டு முதல் சேவையாற்றி வந்துள்ளார்.

2002-ம் ஆண்டு குடும்பத்துடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி யுள்ள இவர் இலங்கை, சிங்கப்ப+ர், மலேஷியா, ஸவ+தி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார்.
அமைதியான சுபாவ மும், அபாரமான ஆற்ற லும், அறிவு ஞானமும் மிக்க இவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளராக வும், அதன்பின் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக வும் பணி செய்து வந்துள் ளார்.

அவரது மறைவுக்கு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர் .

Tuesday, August 4, 2009

அரசியல் மேதைகளாலும் ஆன்மீகத் தலைவர்களாலும் போற்றப்பட்ட ஷங்கை மிகு செய்யத் ஷிஹாப் தங்ஙள் தங்கமான தங்ஙள்

-தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் களில் ஒருவரும் கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தனிப் பெரும் தலைவருமான ஷங்கைமிகு செய்யிதுனா ஷிஹாப் தங்ஙள் அவர்கள் மறைந்த செய்தியை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் எனக்கு அலைப்பேசியில் தெரிவித்தார்கள். இச்செய்தி எனக்கு கவலையை தந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தில்மறைந்த ஷிஹாப் தங்ஙள் அவர்கள் செய்த சேவை மிக மகத்தானதாகும். அரசியல் மேதையாகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்து, தக்வாவின் தென்றல் தங்கமான தங்ஙள் அவர்களின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்துக்கும் தாய்ச் சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும்
நம் நாட்டு அரசியல் தலைவர்களாலும், மார்க்க மேதை களாலும் போற்றப்பட்ட தங்ஙள் அவர்களின் தியாகமிகு சேவையால்சமுதாயம் சிறப்பான நன்மைகளைப் பெற்றது.

சமுதாயத்தை நோக்கி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் புனித ஸ்தாபனத்தை நோக்கி தேவையற்ற சர்ச்சை களையும், சோதனைகளையும் சிலர் உருவாக்கிய காலக் கட்டத்தில் அவைகளையெல்லாம் தனது அன்பான அழகு மிகு பஷாரத் எனும் இன்முகத்துடனும் துஆவுடன் எதிர் நோக்கி வெற்றியைத் தேடித்தந்த மார்க்க மேதை தங்கள் அவர்களாகும்.

நம் நாட்டு தலைவர்களாலும், உலகத் தலைவர்களா லும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பொன்விழா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி தங்ஙள் அவர்கள் ஆன்மீக ஒளியும், அரசியல் தெளிவும் மிக்க அவர்களின் உரையைக் கேட்டு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரும் நெஞ் சம் நெகிழ பாராட்டி மகிழ்ந்த நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

1993ம் ஆண்டில் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களுடன் நானும் புனித ரமளானில் உம்ராவுக்கு சென்றிருந்த போது புனித மக்காவில் கஃபத்துல்லா ஷரீபில் ஷங்கை மிகு ஷிஹாப் தங்கள் அவர்களை சந்தித்த போது. இரு தலைவர்களும் சமுதாயத் தைப் பற்றியும், நாட்டு மக்களின் நன்மையைப் பற்றியும், சமுதாய ஒற்றுமையைப் பற்றியும் ஒருவருக்கொருவர் அன்புடனும் அக மகிழ்வுடனும் பேசிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை.

காயிதே மில்லத் அவர்களின் நூற்றாண்டு விழாவை யொட்டி 1995ம் ஆண்டில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயற்குப முஜாஹிதே மில்லத் பனாத் வாலா சாஹிப் தலைமையில் நடைபெற்றபோது அக் கூட்டத்தில் பங்கேற்று தங்ஙள் அவர்கள் நிகழ்த்திய உரை இன்னும் நமது நெஞ்சை நெகிழவைக்கிறது.

2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் துறைமுகப் பகுதியில் காயிதே மில்லத் மன்ஜில் என்ற பெயரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு மகத்தான மாபெரும் கட்டிடத்தை அமைத்து கொடுத்த தமிழகத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை பெரிதும் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், தமிழக நிர்வாகிகளை முன்னோடிகளை பாராட்டி துஆச் செய்த காட்சியும் அதேக் கூட்டத்தில் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக போட்டியிட்ட தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி வாகைச் சூடுவார் என்று கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தலைவர்களுடனும் முன் னோடிகளுடனும் சென்னைக்கு வந்து மனமாற வாழ்த்தி துஆச் செய்ததை சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன். நம்முடைய பெருந் தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத் வாலா சாஹிப் மறைந்த நேரத்தில் கேரளத்தின் பாலக்காட்டில் ஷிஹாப் தங்கள் இல்லத்தில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுடன் சென்றிருந்தேன்.

அக்கூட்டத்தில் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹ்மது, கேரளப் பொதுச் செயலாளர் குஞ்சாலி குட்டி, இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி.பஷீர், முனீர் கோயா மற்றும் கேரள தலைவர்களும், தேசிய தலை வர்களும் பங்கேற்ற கூட்டத்தில் நம்முடைய தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களின் சேவையைப் பற்றி ஷிஹாப் தங்ஙள் அவர்கள் மகிழ்வுடன் சொல்லிக் காட் டிய நிகழ்ச்சி மகிழ்ச்சியான நிகழ்ச்சி.

நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் கய்ய+ம் அவர்களையும் அவர்கள் அரசையும் அங்குள்ள கடல் கொள்ளையர்கள் சூழ்ச்சிக் காரர்களைப் பற்றி அந்நாட்டு அதிபரை சிறைப் பிடிக்க திட்ட மிட்டு புரட்சி செய்த காலத்தில் மாலத்தீவு அதிபரின் நண்பரான ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு இச்செய்தியை அதிபர் கைய்ய+ம் தெரியப்படுத்தினார்.

அன்றைய நம் நாட்டு பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஷிஹாப் தங்ஙள் அவர்கள் தொடர்பு கொண்டு நட வடிக்கை எடுத்து காப்பாற்றி கொடுத்த சிறப்பு ஷிஹாப் தங்ஙள் அவர்களைச் சார்ந்ததாகும்.

உலகத் தலைவர்களாலும், அரசியல் மேதைகளாலும், ஆன்மீக தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்களின் கப்ரை கருணையுள்ள ரஹ்மான் பிரகாசமாக்கிவைப்பானாக.

அன்னாரின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் முஸ்லிம் லீக்கினர்களுக்கும் ஹஸப்ரே ஜமீலை| அல்லாஹ் வழங்குவானாக.

Thursday, July 30, 2009

அறிவுச் செல்வங்களே! அன்பின் சிகரங்களே! வருக!


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-


துருக்கி சுல்தான்களின் இஸ்லாமிய ஆட்சிகளின் கடும் வீழ்ச்சியால் உலகெங்கும் ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டது.


நம் இந்திய நாட்டிலும் முகலாய மன்னர்களின் ஆட்சியின் வீழ்ச்சியினா லும் இஸ்லாமிய கலாச் சாரத்தை பேணுவதிலும், பின்பற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மிகப்பெரும் சோதனையும், வேதனையும் ஏற்பட்டது.
இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் இஸ்லாமியர் களின் கல்வி, கலாச்சாரம், தனித்தன்மை இவைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஆங்கிலேயர்கனினால் நடந்து கொண்டிருந்தது


முஸ்லிம் சமுதாயத்தினரிடையே ஒருவகையான அச்சமும், வேதனையும் நிலவிய காலக் கட்டத்தில் தான். அல்லாஹ{த்த ஆலா வின் மீது அச்சம் கொண்ட தியாகச் சீலர்கள் உருவானார்கள்.


இருளே போ! போ! என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பதை விட இருள் சூழ்ந்திருந்த இடத் தில் ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய் விம். அந்த நல்ல நோக்கில் - தியாக நோக்கில் சத்திய சீலர்களான சங்கைமிகு உலமாக்களால் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக் கப்பட்டது. வலிமை மிகுந்த பிரிட்டிஷ் அரசை கடுமையாக எதிர்த்து 1857-ம் ஆண்டில் ஷாமிலி மைதானத்தில் தியாகச் சீலர் மவ்லானா இம்தாதுல்லா தலைமை யில் நடைபெற்ற கடுமையான போராட் டத்தில் கலந்து கொண்டு தியாகமிகு சேவையாற்றிய, தேவ்பந்த், தாருல் உலூம் கல்லூரியின் நிறுவனர் காஸிம் நானோத் தவி அவர்களின் பெயரும் மற்றும் மார்க்க மேதைகளின் பெயர்களும் இடம் பெற்றிருந் தது.


இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சிறைப் பிடித்து சித்திரவதை செய்து தண்டிக்க வேண்டு மென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிதும் கங்கணம் கட்டிக் கொண்டு, தேடுதல் வேட்டையாடிய காலக் கட்டத்தில்தான்.
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்த மார்க்க மேதை - தியாகச்சீலர் மவ் லானா காஸிம் நானோத் தவி தலைமையில் மக்காவின் மிகப் பெரும் இந்திய நாட்டு உலமாக்கள் ஒன்று திரண்டு ஒருமித்த கருத்துடன் வெள்ளையர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும். வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா உருவாக வேண்டும். இஸ்லாமிய கலாச்சா ரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், இஸ்லா மியர்களின் உரிமைகளில் - அவர்களின் மார்க்க சட்டத்தை பேணிப் பின்பற்றுவதில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்ற நோக்கில்தான் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டன.


ஊர்களில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், சமுதாயப் பிரமுகர்களும், உலமாக்களும் ஒன்று சேர்ந்து மதரஸாக்களை உருவாக்கினார்கள். நாடெங்கும் நடை பெற்று வரும் மதரஸாக்களிலி ருந்து வருடந்தோறும் மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்றவர்கள், பட்டயங் கள் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகிறார் கள். அதுபோல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்களும், காரி பட்டம் பெற்றவர்களும் வருகை தருகிறார்கள்.
இதேபோல் பெண்கள் மதரஸாக்களிலிருந்தும் ஆலிமா பட்டம், முபல்லிகா பட்டம் பெற்ற பெண் மகனும் வருகை தந்து நாட் டுக்கும், சமுதாயத்துக்கும் சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். அடியார்கள் மீது அன்பு ஆதரவு அண்டை வீட்டாரிடமும் அன்பான உறவு முறை - உறவினர்களிடம் நேசமுடனும், பாசமுடனும் நடந்து கொள்ளும் அன்பான முறை இத்தகைய மனிதநேயத்தை பேணிப்பின்பற்றி போதித்து வரும் அன் பார்ந்த வாழ்க்கை முறையை மதரஸாக்களிலி ருந்து கற்றுத் தேறி பட்டங்கள், பட்டயங்கள் பெற்று வரும் அனைவர்களையும் அன்புடனும், மகிழ்வுடனும் வருக என வாழ்த்துகிறோம்.


இந்திய நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், உ.பி. மாநிலத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா வுக்கு சென்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் உலமாக்கள் நம் நாட்டுக்கு செய்த சேவை விடுதலைப் போராட்டத் தில் உலமாக்கள் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது. இன்றும் அவர்களின் சேவையை நினைக்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது என்று இந்திய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் சொன்ன செய்தி சரித்திர செய்தியாகும். புகழ்பெற்ற லக்னோ நத்வத்துல் உலூம் மதரஸா வின் பட்டமளிப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டு உலமாக்கள் செய்த சேவை இந்திய விடுத லைப்போரில் உல மாக்கள் ஆற்றிய பங்கு மிக மகத்தானது என்று அவர் நிகழ்த்திய உரை மறக்க முடியாததாகும். தென்னகத்தின் தாய் மதரஸாவான வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரை யாறிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் பேசுகையில் மனித சமுதாயத்தை புனித சமுதாயமாக ஆக்கி வருவது மதரஸாக்கள் என்று குறிப்பிட்ட செய்தி நமக்கு இன்றும் நினைவில் நிற்கிறது.


சிறப்புமிகு லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் சங்கை மிகு உலமாக்கள், கண்ணியமிகு - சத்தியமிகு நபிமார்களின் வாரிசுகளாக திகழ் கிறார்கள். புனித நபிமார்கள் செய்தப் பணியை சங்கைமிகு உலமாக்கள் செய்து வருகிறார்கள் என்று உலமாக்களின் சேவையை பாராட்டி பேசியுள்ளார்கள்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் லிபியா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தலைவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசுகையில் உண்மைகளை - நன்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் என் இந்திய நாட்டு உலமாக்கள் மிகச் சிறந்தவர்கள் என்று தலைவர் பேசிய செய்தி உலக செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்தது. மணிச்சுடரி லும் வந்தது.


மவ்லவி ஆலிம் பட்டம் பெற்ற வெண்புறாச் சேனைகளே மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற சமாதான புறாக்களே வருக, ஹாபிழ் பட்டம் பெற்ற அன்பின் சின்னங்களே வருக, ஆலிமா பட்டம் பெற்ற சமுதாயச் செல்வங்களே வருக.
முபல்லிகா பட்டம் பெற்ற சமுதாயக் கண் ணொளிகளே வருக வருக என உங்களை வாழ்த்தி வரவேற்று உங்கள் சேவை சிறக்க துஆ செய்கிறோம

Friday, June 19, 2009

தெளிவு பிறந்தது! வழி திறக்க வேண்டும்! பேராசிரியர் காதர்மொகிதீன்...

டெல்லிக்குச் சென்றிருந்தேன். மூன்று நாட்கள் தங்கி, எம்.பி.க்குத் தந்திருந்த வீடு மற்றும் அனைத்துப் பொருட்களையும் திரும்பவும் அரசிடம் ஒப்படைத்து விட்டு வரவே சென்றிருந்தேன்.

ஐந்தாண்டு காலமாக டெல்லி வீட்டில் எனக்குத் தரப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் சாதனங்கள்யாவும் தொகுதி மற்றும் சமுதாய பணிகளுக்கு பயன்பட்டன. சகோதரர் முஹம்மது குட்டி, சந்திரிகா நாளிதழின் டெல்லி நிருபர் சிறந்த இயக்கப் பணி புரிந்து வரும் அவர் எனக்கு உதவியாக செயல்பட்டார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளர்களில் ஒருவரான இளைஞர், துடிப்பும் - கொள்கைப் பிடிப்பும் மிகுந்த குர்ரம் அனீஸ் உமர் எனது டெல்லி இல்லத்தில் என்னுடன் இணைந்து முஸ்லிம் லீக் அலுவலகப் பணிகளை செயல்படுத்தி கவனித்து வந்தார். டெல்லி பிரதேச துணைச் செயலாளர் நூர் ஷம்ஸ், டெல்லி இல்லத்தை நிர்வகித்து வந்தார். எனது பாராளுமன்ற பணிச் செயலாளராக அருமையாகச் சேவை செய்தார்.
டெல்லியில் இருந்த ஐந்தாண்டும் ஒரு மாதமும் இவர்களின் துணையும், பணியும் எனக்குப் பெரும் உந்து சக்திகளாக இருந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த முத்துபாட்சா, ஆறுமுகம், ஒரத்த நாடு சிவா ஆகியோரின் சேவையும் - பணியும் எனக்குப் பெருந் துணைபுரிந்துள்ளன.
ஐந்தாண்டு பாராளுமன்றப் பணிக்காலத்தில் டெல்லியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இயக்க வளர்ச்சிக்கு என்னால் ஆனதைச் செய்ய முடிந்தது. அதற்காகவே இறைவனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

கேரளாவில் முஸ்லிம் லீக் எழுச்சியோடு வெற்றிப் பாதையில் செல்கிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் வெற்றிப் பயணத்தைத் துவங்கி நம்பிக்கையோடும், எழுச்சியோடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த எழுச்சி வரலாற்றை இந்தியா முழுவதிலும் உருவாக்க வேண்டும் என்னும் அவா வடபுலத்து முஸ்லிம்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இந்த ஆர்வத்துக்குச் செயல் வடிவம் கொடுத்து ஆக்கப் பணியாக மாற்றும் வகையில் நமது ஐந்தாண்டு காலப் பொழுது கழிந்திருக்கிறது.

டெல்லியில் தங்கியிருந்த இந்த மூன்று நாட்களில் டெல்லி பிரதேச முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அதன் தலைவர் மர்கூப் ஹ{சேன் தலைமையில் வந்து சந்தித்தனர்.

அவர்களுக்கு இடையில் இருந்த உள் பிரச்சி னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, முஸ்லிம் லீக் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
டெல்லி ஷாஜஹானாபாதில் உள்ள ஜாமிஆ மஸ்ஜிது எதிரில் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இருந்து முஸ்லிம் லீக் அலுவலகம் இயங்கி வருகிறது. நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி அங்கே எப்பொழுதும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும். அந்த அலுவலகத்துக்கு முஸ்லிம் லீக் இதுவரை வாடகை கொடுத்து வந்துள்ளது.


அதனை இப்பொழுது கிரயம் செய்து முஸ்லிம் லீகிற்கு வாங்கும் எண்ணமும், சூழ்நிலை யும் ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி பிரதேச முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் இந்தப் புதிய முயற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து உற்சாகப் படுத்தும் உதவிகள் வர வேண்டும் என்று விரும்புகி றோம். இந்தியத் தலைநகர் டெல்லி பட்டணத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது சொந்தக் கட்டிடத்தில் அலுவலகம் வைத்திருக்கிறது என்ற புதிய சரித்திரம் தொடர வழிவகுக்கும்.

உத்தரகாண்டம் மாநில முஸ்லிம் லீகினர் மிகுந்த ஆர்வத்தோடு டெல்லி வந்தனர். அந்த மாநிலத்தில் (70) எழுபது தொகுதிகள் அடங்கிய சட்டப் பேரவை இருக்கிறது. டெல்லியிலும் எழுபது தொகுதிகள்தாம் உள்ளன.

உத்தரகாண்டம், உத்திரப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலம். இதற்கு முதலில் உத்ராச்சலம் என்று பெயரிட்டனர். பின்னர் உத்தரகாண்டம் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

இந்த மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் 24 தொகுதிகளில் முஸ்லிம்கள் 35 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வாழ்கின்றனர். பெரும்பாலும் மலைப்பிரதேசமாக உள்ள இந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் மார்க்கப்பற்று, பிடிப்பு, ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சட்டசபையில் மூன்று முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மூவரும் பகுஜன் சமாஜ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள். உத்தரகாண்ட முஸ்லிம் லீக் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறது. முஸ்லிம் லீக் 14 சட்டமன்ற தொகுதிகளில் பலமாக இருக்கிறது. தற்போது விகாஸ் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. இதில 86 ஆயிரம் வாக்குகள், அதில் 34,500 முஸ்லிம் வாக்குகள். இங்கே 65 மஸ்ஜிதுகளும், 18 மதரஸாகளும் உள்ளன. முன்பு இதில் முஸ்லிம் லீக் 120 வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. தற்போது இடைத் தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்போடு அந்த மாநில நிர்வாகிகள் வந்தனர். அவர்களின் ஆர்வத்துக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் நல்வாழ்த்துக்ளைத் தெரிவித்தேன். வடபுலத்தில் முஸ்லிம் லீகின் சார்பில் சிறிதளவு பொருளாதார உதவிகள் புரிந்தால் போதும்@ அதிசயம் ஏற்படும் அளவுக்கு முஸ்லிம் லீகினர் அரசியல் நடத்துவர் என்ற உண்மை மட்டும் தெளிவாகப் புரிந்தது.

மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஸிதாபா, மால்டா, நதியா ஆகிய மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வந்து டெல்லியில் என்னைச் சந்தித்து அவர்களின் மாநில முஸ்லிம் லீக் வளர்ச்சி குறித்து ஆலோசனையை நடத்த வந்தவர்கள் என்னிடம் தந்த அவர்களின் முகவரிகளைப் பார்த்தேன்.

எனக்கு ஒரே வியப்பு! ஆச்சரியம்!

எல்லோரும் பட்டதாரிகள் பலர் மூன்று எம்.ஏ. படித்தவர்கள் சிலர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் சிலர் கல்லூரி விரிவுரையாளர்கள் சிலர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் அரசு மதரஸா கல்வி நிறுவனங் களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள். முஸ்லிம் லீகில் அரசு ஊழியர்களும், கல்வியாளர்களும், மார்க்க அறிஞர் களும் மேற்கு வங்கத்தில் இருக்கிறார்கள். தமிழக நிலைமையை நினைத்து ஒப்பிட்டுப் பார்த்த போது, மிகுந்த வருத்தமும், வேதனையும்தான் ஏற்பட்டது.

எல்லா கட்சிகளிலும் அரசு பணிபுரிவோர் அங்கம் வகிக்கிறார்கள். முஸ்லிம் லீக் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் முஸ்லிம் லீக் ஆர்வலர்களை எல்லாத் தரப்புகளில் இருந்தும் இயக்கத்தில் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என்ற தெளிவு பிறந்தது! இனி வழிதான் திறக்க வேண்டும.

Sunday, June 7, 2009

துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ர‌ஹ்மானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு

துபாய் ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் முனைய‌ம் 3ல் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ பொறுப்பேற்ற‌ பின்ன‌ர் முத‌ன் முறையாக‌ துபாய் வ‌ருகைபுரிந்த‌ எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வையின் சார்பில் வெள்ளிக்கிழ‌மை ந‌ள்ளிர‌வு மிக‌ச் சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சியில் அமீர‌க‌ காயிதே மில்லத் பேர‌வை துணைத்த‌லைவ‌ர் நூஹு சாஹிப், பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ.லியாக்க‌த் அலி, இணைச்செய‌லாள‌ர்க‌ள் ஹ‌மீதுர் ர‌ஹ்மான், ஹ‌மீது யாசின், பொருளாள‌ர் எம். அப்துல் க‌த்தீம், ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ஆம்பூர் ரியாஸ் அஹ்ம‌த், ஈமான் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், முத்துப்பேட்டை அமீர‌க‌ப் பேர‌வை, திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின‌ர், தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் குழுவின‌ர்,ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத், துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம், யுஏஇ த‌மிழ்ச் ச‌ங்க‌ம், புர‌வ‌ல‌ர்க‌ள், உல‌மாப் பெரும‌க்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

த‌ன்னுடைய‌ வெற்றிக்காக‌ பிரார்த்தித்த‌ அனைத்து ந‌ல்லுங்க‌ளுக்கும் த‌ன‌து ந‌ன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான்.


Wednesday, June 3, 2009

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி. அப்துல் ரகுமான் பேட்டி


வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் நாடாளுமன்ற உறுப்பினராக தான் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.


அதன் விபரம் வருமாறு:
நிச்சயம் எம்.பி.க்களின் இமேஜை மாற்று வொம். அதற்காக இப்போதே களத்தில் இறங்கிவிட்டோம். தெரு முனையிலே மைக் பிடித்து வாக்காளர்களுக்கு நன்றி சொல்லாமல், தேர்தலின் போது எப்படி வீடு, வீடாகச் சென்று வாக்கு கேட்டேனோ அதேபோல் வீடு வீடாக அனைவரையும் சந்தித்து நன்றி சொல்லி வருகிறேன்.


இந்த தொகுதியைச் சுற்றி வந்ததில் இருந்து குடிநீர் பிரச்சினைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது என்பது தெரிகிறது. முதலில் அந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுப்பேன். என் முழுநேரப் பணியே வேலூர் தொகுதியையும், அங்குள்ள மக்களையும் சுற்றி வருவதுதான். இந்தத் தொகுதி மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் என்னை ஆதரித்த பெருந்தன்மையுடைய வர்கள். அவர்கள் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றிக் கடனாக நானும் யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவருக்கும் பணியாற்றப் போகிறேன்.


மேலும், பொது மக்களுக்கான சேவையை நான் இளம் வயதில் இருந்தே செய்து வந்திருக்கிறேன். எம்.பி. பதவி என்பது எனக்கு மெருகூட்டுவதாக இருப்பதோடு, நிறைய பொறுப்புகளை யும் வைத்திருக்கிறது. நிச்சயம் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பார்க்க முடியாதவர்கள் எம்.பி.க்கள் என்ற இமேஜை உடைத்துக் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Thursday, April 30, 2009

கருணாநிதியின் மறு உருவம்தான் திருமாவளவன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் பேச்சு


சிதம்பரம், ஏப். 29-

காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ஆயங்குடி தபால் நிலையம் எதிரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில தலைவர் காதர் மைதீன் கலந்து கொண்டு பேசியதாவது:- முஸ்லிம் மக்களின் உடன் பிறவா சகோதரர் திருமாவளவன். மறைந்த ஜி.கே. மூப்பனாருடன் இணைந்திருந்த காலத்தில் இருந்தே அவரை நன்றாக எனக்கு தெரியும். அவர் தனது சமுதாய மக்கள் நலத்திற்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் பாடுபடக்கூடியவர் என்பதை நன்கு அறிவேன்.

திருமாவளவன் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் ஜனநாயகத்தில் அங்கம் வகிக்கின்ற கூட்டணியில் சேர்ந்து உள்ளார். அதனால் தான் அவரை சிதம்பரத்தில் கருணாநிதி நிறுத்தி உள்ளார். அவர் தனது கட்சிக்கு நட்சத்திர சின்னத்தை வாதாடி பெற்றுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னம் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொடர்புடைய சின்னம். ஆகவே எங்களுடைய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜமாத்துகள் உள்ளது. சிதம்பரம் தொகுதியில் சுமார் 11/2லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இந்த ஓட்டுகள் அனைத்தும் திருமாவளவனுக்கே உரியது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

சிறுபான்மை மக்களுக்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் பாடுபடக்கூடியவர் கருணாநிதி. இலங்கை தமிழர் பிரச்சினையில் மற்றவர்களை போல் இல்லாமல் முழு அக்கறையுடன் செயல்பட்டவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரது மறு உருவம் தான் திருமாவளவன். சிறுபான்மை மக்களுக்காக பாடுபட்டு வரும் அவரை சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தேர்தலுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அ.தி.மு.க. சேரும். இவ்வாறு காதர் மைதீன் பேசினார்.

Monday, April 20, 2009

கடலூர்,சிதம்பரம் தொகுதிகளில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் சூறாவளி பிரச்சாரம் ..!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான கடலூர் தொகுதி கே.எஸ்,அழகிரி,சிதம்பரம் தொகுதி தொல்.திருமாவளவன் ஆகியோரை ஆதரித்து சிதம்பரம்,மற்றும் கடலூர் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்,பி.தீவிர பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.

28.04.2009 செவ்வாய்க் கிழமை காலை ஆயங்குடியில் பிரச்சாரத்தை துவக்கும் அவர் காட்டுமன்னார்குடி,லால்பேட்டை,சிதம்பரம்,பரங்கிப்பேட்டை,புவனகிரி,கடலூர்,விருதாச்சலம்,மங்கலம்பேட்டை,நெல்லிக்குப்பம்,பண்ருட்டி,உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரத்தில் உரையாற்றுகிறார்.

இந்த பிரச்சாரப் பயணத்தில் கடலூர் மாவட்ட முஸ்லிம் லீகினர்களோடு தோழமைக் கட்சித் தொண்டர்களும் பங்கேற்கின்றனர்.

Monday, April 13, 2009

ஏப்ரல் 15 வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்குகிறார்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துர் ரஹ்மான் 15.4.09 புதன் கிழமை காலை 9 மணிக்கு தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் சென்று காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார்.

தொடர்ந்து ராயப்பேட்டையில் சிராஜுல் மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். காலை 10மணிக்கு வேலூர் புறப்பட்டு சென்று தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்.

அன்று மாலை 5 மணிக்கு வேலூரில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., அவர்கள் தலைமையில் நடை பெறும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சிகளில் முஸ்லிம் லீக் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்.

Friday, February 27, 2009

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனே நிறைவேற்றி தாருங்கள் முதல்வர் கலைஞருக்கு பேராசிரியர்வேண்டுகோள்


சிறுபான்மை கல்வி நிறு வனங்களில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனடி யாக செய்து தரும்படியும், பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு அரசு ஊதியத்தை வழங்கி உதவும்படியும் முதல் வர் கலைஞரிடம் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்வோம். என்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தெரிவித்தார் .

சென்னை புதுக் கல்லூரியில் வரலாற்று ஆய்வு மன்றம் துவக்க விழா இன்று (வெள்ளி) நடை பெற்றது.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவரு மான பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் எம்.பி., சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு வர லாற்று ஆய்வு மன்றத்தை துவக்கிவைத்து உரையாற்றி னார்.

அப்போது அவர் குறிப் பிட்டதாவது:
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு அளித்த கல்லூரி யின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், துறை மாணவர்கள் அனை வருக்கும் முதற் கண் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ள மாணவர்களையும் வாழ்த்த கடமைப் பட்டுள்ளேன்.

இங்கு வரவேற்புரை யாற்றுகையில் கல்லூரியின் தேவைகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக கல்லூரி ஆசிரி யர் நியமன பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்கள்.

இன்று மாலை முதல்வர் கலைஞர் அவர்களை முஸ் லிம் லீக் சார்பில் சந்திக்க உள்ளோம். அப்போது இந்த பிரச்சினை குறித்து அவரிடம் எடுத்துக் கூறி விரைவில் நல்ல முடிவு கான வலியுறுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர்களாக நிய மிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ற சரியான ஊதியங்களை பெறுவதற்கு சான்றிதழ்கள் அவசியமாக இருக்கின்றன.

பல்கலைக் கழகங்கள் குறிப்பாக சென்னைப் பல் கலைக் கழகம் இந்த விஷயத்தில் இடையூறு அளிக்கும் வகையில் செயல் பட்டு வருவது நமது கவ னத்திற்கு வந்துள்ளன.

அவை விரைவில் சரி செய்யப்பட முதல்வரிட மும் அரசிடமும் வலியுறுத் துவோம்.

ஏற்கெனவே, இது போன்ற பிரச்சினை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூ ரிக்கு ஏற்பட்டது. அதனை கல்லூரி சார்பில் நாம் எதிர் கொண்டு வெற்றி பெற் றோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நேற்று முன்தினம் பாரா ளுமன்றத்திலே சிறுபான் மையினர் கல்வி திருத்த மசோதா ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. நான் காண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட இருந்த இந்த மசோதாவில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றையெல் லாம் நாம் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் தொ டர்ந்து வலியுறுத்தி வந் தோம். இப்போழுது மத்திய அரசு அந்த தவறுகளை குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மசோ தாவை தாக்கல் செய்துள் ளது.

சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய நிலை இத் துனை காலமும் இருந்து வந்தது.

மாநில அரசுகள் அவ் வளவு எளிதாக என்.ஓ.சி., கொடுப்பது கிடையாது. இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு இப் போழுது தாக்கல் செய்யப் பட்டுள்ள புதிய மசோதா வில் சிறுபான்மையினர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே கல்வி நிலையங்களை துவங்கி நடத்திட வலிவகை செய் யப் பட்டுள்ளது என்பதை யும் இந்த நேரத்தில் குறிப் பிட விரும்புகின்றனர்.

இப்பொழுதுள்ள நமது தமிழக அரசானாலும், மத் திய அரசானாலும் இரண்டு அரசுகளுமே சிறு பான்மையினர் நலனை அக் கரை கொண்டு அவர்க ளின் உணர்வுகளை மதித்து நடக்கின்றன.

இத்தகைய நல்லாட் சியில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் ஆசி ரியர் நியமனங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசும் பொழுது குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் புதுக் கல்லூரி முதல்வர் டாக்டர் அல்தாப் தலைமை தாங் கினார், பேராசிரியர் ஜப ருல்லா கான் வரவேற்புரை யாற்றினார். துணை முதல் வர் நயீமுர் ரஹ்மான், பேராசிரியர் முஹம்மது மன்சூர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் நிஜா முத்தீன், டாக்டர் சே.மு.மு. முஹம்ம தலி, பேராசிரியர் நத்தர் ஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் அபூபக்கர், மாநில செய லாளர் கமுதி பஷீர், தென் சென்னை மாவட்ட தலை வர் இஸ்மத் பாட்சா, செயலாளர் பாவை முஸ் தபா, ஒருங்கினைப்பாளர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், ஆலம் கான், கவிஞர் ஷேக் மதார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Wednesday, February 11, 2009

முஸ்லிம் லீகின் அவாவும் - துஆவும் இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்-

கடலூர், பிப்.11-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஆசையும் - பிரார்த்தனையும் இலங்கை யில் அமைதி திரும்ப வேண்டும். கலைஞர் பூரண நலம் பெறவேண்டும் என்பதுதான் என தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க துறை செயலாளர் மவ்லானா தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் உரையாற்றினார்.

கடலூரில் இலங்கை தமிழர்களுக்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது-இலங்கையில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதையும், போரின் மரபையும், வரம்பையும் மீறி சின்னஞ் சிறு குழந்தைகள் கொல்லப்படுவதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவரும், மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது சாஹிப் அவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச் செயலாள ரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி,யும் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அரசியல்ரீதியாகத்தான் தீர்க்க முடியும். தீர்வுகாண முடியும் என்று தெளிவாக சொல்லி தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவை வழங்கி வரும் என்று சொல்லியுள்ளனர்.

நம் நாட்டிலுள்ள சில தலைவர்கள் தேர்தலுக்காக இலங்கைப் பிரச்சினையை அரசியலாக்கி வருகிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும், மேம்பாடுகளுக்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். உடல் நலம் குன்றிய நிலையிலும், மருத்துவமனையிலும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பெருந்தலைவர் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அஹமது சாஹிப், அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., ஆகியோர் முதல்வர் கலைஞரை மருத்துவ மனையில் சந்தித்து அவர் பூரண நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தி வந்தார்கள்.உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையிலும் முதல்வர் ஆற்றி வரும் சேவையை எங்கள் தலைவர்கள் நெஞ்சுருக பாராட்டினார்கள். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படு வதை நிறுத்த வேண்டும். உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற்று நலமுடன் வாழ்ந்து நமக்கும், நாட்டுக்கும் பணி செய்திட பிரார்த்திக்கின்றோம்.

இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் உரை யாற்றினார்.கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பொதுக் கூட்டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் ஹாஜியார், மாவட்ட துணைத் தலை வர்களான லால்பேட்டை கே.ஏ. முஹம்மது, மங்களம்பேட்டை அப்துர் ரஹ்மான், கடலூர் கமாலுத்தீன், மாவட்டச்செயலாளர் ஏ. சுக்கூர், துணைச் செயலாளர்கள் லால்பேட்டை கே.ஏ. அமானுல்லா, விருத்தாசலம் லியாகத் அலி, அப்துல் மஜீத், நெல்லிக்குப்பம் ராஜா ரஹிமுல்லா, மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீத்கான், மாவட்ட இளைஞர் அணை அமைப்பாளர் முஸ்தபா, கடலூர் நகரத் தலைவர் அக்பர் அலி, செய லாளர் இஸ்மாயில், பொருளாளர் ஷரீப், மாவட்ட பொருளாளர் மங்களம்பேட்டை ஹபீபுர் ரஹ்மான், லால்பேட்டை நகரச் செயலாளர் முஹம் மது ஆசிப், இளைஞர் அணிச் செயலாளர் சல்மான் மற்றும் மாவட்டம் முழுவதிலுமிருந்தும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Monday, September 22, 2008

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746. கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார். இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார். இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template