அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, August 25, 2009

மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளர்- சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் காலமானார்

சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வரும், மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலை 9.30 மணிக்கு கால மானார். ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக் கம் செய்யப்படுகிறது.

தாய்ச்சபையின் தனிப் பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் - நர்கீஸ் பானு தம்பதி யரின் இரண்டாவது புதல் வராக 05-12-1961-ல் பிறந்த வர் ஏ. அப்துல் ஹக்கீம். இவரது உடன் பிறந்த சகோதரர்கள் அப்துல் ஹமீது பாகவி, அப்துல் வஹாப் மற்றும் உடன் பிறந்த சகோதரி அலவியா, ஃபாத்திமா முஸப்பர் ஆகி யோர் ஆகும். இவருடைய துணைவியார் சமீமா, ஒரே மகள் இஸ்ரா.
எம்.ஏ. பொது நிர்வாகம் பட்டம் பெற்ற அப்துல் ஹக்கீம், அச்சுக்கலை நிபுணர் படிப்பையும் படித்துள்ளார். 1986-ம் ஆண்டு சிறுபான்மையினர் குரல் ஒலிக்க ஒரு நாளிதழ் தொடங்க வேண்டும் என சிராஜுல் மில்லத் முடிவெ டுத்த போது அதற்கான முழு பொறுப்பையும் ஏற்று மூத்த பத்திரிகை யாளர்களுடன் கலந்தா லோசித்து 1987-ல் ஏப்ரலில் மாதிரிப் பிரதியையும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி மணிச்சுடர் நாளிதழையும் கொண்டு வந்தார்.

1999-ம் ஆண்டு சிராஜுல் மில்லத் அவர் களின் மறைவுக்குப் பின் முஸ்லிம் லீகில் அவர் முழு நேர ஊழியம் செய்ய வேண்டும் என விரும்பி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இவரை மாநில தலைமை நிலையச் செயலாளராக நியமனம் செய்தார். பல அரசியல் மாநாடுகள், தேர்தல் பணிகள், பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்தி கட்சியின் வளர்ச் சிக்கு பெரும் துணை புரிந் தார்.

தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (மியாஸி) மற்றும் புதுக் கல்லூரியில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்துள்ளார்.
சென்னை அயன்புரத் தில் அமைந்துள்ள டிரஸ்ட் மருத்துவமனை யில் சிறுநீரக நோயாளிக ளுக்கான கவுரவ டிரஸ்டி யாக 2001-ம் ஆண்டு முதல் சேவையாற்றி வந்துள்ளார்.

2002-ம் ஆண்டு குடும்பத்துடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி யுள்ள இவர் இலங்கை, சிங்கப்ப+ர், மலேஷியா, ஸவ+தி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார்.
அமைதியான சுபாவ மும், அபாரமான ஆற்ற லும், அறிவு ஞானமும் மிக்க இவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளராக வும், அதன்பின் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக வும் பணி செய்து வந்துள் ளார்.

அவரது மறைவுக்கு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர் .

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template