அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, August 25, 2009

அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை இழந்து தவிக்கிறேன்|||தலைவர் பேராசிரியர் இரங்கல்

மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் மறைவு குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி-

தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்த தமிழ் அறிஞர் - இலக்கியச் செல்வர் - முஸ்லிம் லீகின் மாபெரும் வழிகாட்டி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் இரண்டாவது புதல்வர் அப்துல் ஹக்கீம் அவர்கள் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்து இன்று (25-08-2009) செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது. சகோதரர் அப்துல் ஹக்கீம் இளமைக்காலம் முதல் முஸ்லிம் லீக் இயக்கத்தோடு தன்னை பின்னிப் பிணைத்து கொண்டு வாழ்ந்தவர். அடையாறு பிரைமரி முஸ்லிம் லீக் அமைப்பதில் முன்னணியில் இருந்தவர்.

காலப்போக்கில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாள ராக உயர்ந்தார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கிடைத்தது.

தலைமை நிலையச் செயலாளராக அவர் செயல் பட்ட காலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும் - எனக்கும் சட்டரீதியான பல்வேறு இடைய+றுகளும், ஏராளமான வழக்குகளும் நடைபெற்றன. அவைகளில் நாம் வெற்றியடைவதற்கு அரிய ஆலோசனைகளையும், உரிய தகவல்களையும் தந்து பெரும் ஒத்துழைப்பு அளித்தார்.

சிறந்த நிர்வாகியாகவும், தொழில் வல்லுநராகவும் வெளிநாடுகளோடு தொடர்புடைய பல தொழில் அதிபர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் பெற்ற வராகவும் விளங்கியவர். அவருடைய அறிவுரையாலும், வழிகாட்டுதலாலும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் இன்றைக்கும் நன்றி கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளிலும், தன்னை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பின்னர் தீவிரமாக இயக்கப்பணிகளில் அரசியல் கூட்டணி முடிவுகள், தேர்தல் சின்னம் தேர்வு செய்தல் போன்ற பிரச்சினை வரும்போதெல் லாம்ஆலோசனை சொல்லி வந்தார். என்னைப் பொறுத்த வரையில் பல நேரங்களில் அவருடைய ஆலோசனை பெற்று அதன்படி முடிவெடுத்தேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிட அவர் ஆலோசனை காரணமாக இருந்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

எம்.ஏ. பொது நிர்வாக பட்டம் பெற்று தேறியவர். அச்சுக்கலையில் தனிப்பட்டமும் பெற்றவர். படித்துக் கொண்டேயிருப்பதில் அவர் தந்தையை பின்பற்றி வாழ்ந்த சிறப்பு அவருக்கு உண்டு.

முஸ்லிம் சமுதாயத்திற்கும் - முஸ்லிம் லீகிற்கும் நாளேடு இல்லை என்ற குறையை நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காக ஹமெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குவ தற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர். தமது தந்தை சிராஜுல் மில்லத் அவர்களோடு இணைந்து நிறுவனத்தை பதிவு செய்து ஹமணிச்சுடர் நாளிதழை வெளியிடுவோராக இருந்து பணியாற்றியவர்.

1987-லிருந்து ஹமணிச்சுடர் நாளேட்டை சிறந்த ஒரு பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சி மேற்கொண் டார். 1996-ல் சிராஜுல் மில்லத் அவர்கள் ஹமணிச்சுடர் நாளிதழுக்கு என்னைப் பொறுப்பாளராக்கிய சமயத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டில் பிரபலமான நாளேடாக மணிச்சுடரை ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகமூட்டியவர். இறுதி வரை மணிச்சுடர் வெளியீட் டாளராக தொடர்ந்து இருந்து மிகப் பெரிய சேவையை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.

அந்த அன்புச் சகோதரரை - நல்ல ஆலோசகரை - அப்பழுக்கற்ற முஸ்லிம் லீகரை - அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை நாம் இழந்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய துணைவியார், ஒரே புதல்வி ஆகியோருக்கு அல்லாஹ் சபுரன் ஜமீல் எனும் உயர்ந்த உன்னதமான தாங்கும் சக்தியை அருள்வானாக. அவர் பிரிவால் வாடும் அவர்களின் சகோதரர்கள் அப்துல் ஹமீத் பாகவி, அப்துல் வஹாப், சகோதரிகள் அலவியா, ஃபாத்திமா முஸப்பர் மற்றும் உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் வானாக. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுவுலக மேலான பதவியை வழங்கி அருள்வானாக!

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முஸ்லிம் லீக் இயக்கத்தில் நிரப்பி தருவதற்கு தக்கவர்களை அவருடைய மறைவிற்கு இதயம் நிறைந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்!
இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது இரங்கல் செய்தியில் குறிபிப்பிட்டுள்ளார் .

தளபதி ஷபிகுர்ரஹ்மான்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரும் மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத்தின் புதல்வருமாகிய அல்ஹாஜ் அப்துல் ஹக்கீம் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்ததாக தளபதி ஷபிகுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார் .

மக்காவில் இருந்து அனுப்பியிருக்கும் இரங்கல் செய்தியில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளராக சிறப்பாக பணியாற்றி தொடர்ந்து மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளராகவும் இன்றைய அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்த அப்துல் ஹக்கீம் அவர்களின் இழப்பு தாய்ச்சபை முஸ்லிம் லீக்கினருக்கு பேரிழப்பு அன்னாரை பிரிந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஷப்ரன் ஜமிலை வழங்க பிரார்த்திப்பதாக அவர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி இரங்கல்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராகவும், அதன் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு எதிராகவும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு மிகப் பெரும் தொல்லைகள் தரப்பட்ட சமயத்தில் இந்த வழக்கு களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு அரிய ஆலோசனைகளையும் - உரிய தகவல்களையும் தந்து உறுதியாக ஒத்துழைத்தவர் அப்துல் ஹக்கீம். இந்த வழக்குகள் அனைத்திலிருந்து இறையருளால் நாம் வெற்றியடைந்தோம்.

முஸ்லிம் லீகில் கொள்கை உறுதிமிக்க அவரது இழப்பு தாய்ச்சபைக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
வெ. ஜீவகிரிதன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள் .

ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனை குழு இரங்கல்

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப் பினர்களான எம். அப்துல் ரஹ்மான் (வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர்), எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் (அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்), எச். அப்துல் பாசித் (வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர்), பேராசிரியர் குளச்சல் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

வெளியீட்டாளர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவுக்கு மணிச்சுடர் பணியாளர்கள் இரங்கல்

மணிச்சுடர் தமிழ் மாலை நாளிதழ் வெளியீட் டாளரும் மறைந்த சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலமான செய்தி அறிந்து எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் நல் அமல்களை ஏற்றுக் கொண்டு தன் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
-மணிச்சுடர் பணியாளர்கள்



No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template