அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Friday, June 19, 2009

தெளிவு பிறந்தது! வழி திறக்க வேண்டும்! பேராசிரியர் காதர்மொகிதீன்...

டெல்லிக்குச் சென்றிருந்தேன். மூன்று நாட்கள் தங்கி, எம்.பி.க்குத் தந்திருந்த வீடு மற்றும் அனைத்துப் பொருட்களையும் திரும்பவும் அரசிடம் ஒப்படைத்து விட்டு வரவே சென்றிருந்தேன்.

ஐந்தாண்டு காலமாக டெல்லி வீட்டில் எனக்குத் தரப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் சாதனங்கள்யாவும் தொகுதி மற்றும் சமுதாய பணிகளுக்கு பயன்பட்டன. சகோதரர் முஹம்மது குட்டி, சந்திரிகா நாளிதழின் டெல்லி நிருபர் சிறந்த இயக்கப் பணி புரிந்து வரும் அவர் எனக்கு உதவியாக செயல்பட்டார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளர்களில் ஒருவரான இளைஞர், துடிப்பும் - கொள்கைப் பிடிப்பும் மிகுந்த குர்ரம் அனீஸ் உமர் எனது டெல்லி இல்லத்தில் என்னுடன் இணைந்து முஸ்லிம் லீக் அலுவலகப் பணிகளை செயல்படுத்தி கவனித்து வந்தார். டெல்லி பிரதேச துணைச் செயலாளர் நூர் ஷம்ஸ், டெல்லி இல்லத்தை நிர்வகித்து வந்தார். எனது பாராளுமன்ற பணிச் செயலாளராக அருமையாகச் சேவை செய்தார்.
டெல்லியில் இருந்த ஐந்தாண்டும் ஒரு மாதமும் இவர்களின் துணையும், பணியும் எனக்குப் பெரும் உந்து சக்திகளாக இருந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த முத்துபாட்சா, ஆறுமுகம், ஒரத்த நாடு சிவா ஆகியோரின் சேவையும் - பணியும் எனக்குப் பெருந் துணைபுரிந்துள்ளன.
ஐந்தாண்டு பாராளுமன்றப் பணிக்காலத்தில் டெல்லியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இயக்க வளர்ச்சிக்கு என்னால் ஆனதைச் செய்ய முடிந்தது. அதற்காகவே இறைவனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

கேரளாவில் முஸ்லிம் லீக் எழுச்சியோடு வெற்றிப் பாதையில் செல்கிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் வெற்றிப் பயணத்தைத் துவங்கி நம்பிக்கையோடும், எழுச்சியோடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த எழுச்சி வரலாற்றை இந்தியா முழுவதிலும் உருவாக்க வேண்டும் என்னும் அவா வடபுலத்து முஸ்லிம்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இந்த ஆர்வத்துக்குச் செயல் வடிவம் கொடுத்து ஆக்கப் பணியாக மாற்றும் வகையில் நமது ஐந்தாண்டு காலப் பொழுது கழிந்திருக்கிறது.

டெல்லியில் தங்கியிருந்த இந்த மூன்று நாட்களில் டெல்லி பிரதேச முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அதன் தலைவர் மர்கூப் ஹ{சேன் தலைமையில் வந்து சந்தித்தனர்.

அவர்களுக்கு இடையில் இருந்த உள் பிரச்சி னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, முஸ்லிம் லீக் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
டெல்லி ஷாஜஹானாபாதில் உள்ள ஜாமிஆ மஸ்ஜிது எதிரில் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இருந்து முஸ்லிம் லீக் அலுவலகம் இயங்கி வருகிறது. நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி அங்கே எப்பொழுதும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும். அந்த அலுவலகத்துக்கு முஸ்லிம் லீக் இதுவரை வாடகை கொடுத்து வந்துள்ளது.


அதனை இப்பொழுது கிரயம் செய்து முஸ்லிம் லீகிற்கு வாங்கும் எண்ணமும், சூழ்நிலை யும் ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி பிரதேச முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் இந்தப் புதிய முயற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து உற்சாகப் படுத்தும் உதவிகள் வர வேண்டும் என்று விரும்புகி றோம். இந்தியத் தலைநகர் டெல்லி பட்டணத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது சொந்தக் கட்டிடத்தில் அலுவலகம் வைத்திருக்கிறது என்ற புதிய சரித்திரம் தொடர வழிவகுக்கும்.

உத்தரகாண்டம் மாநில முஸ்லிம் லீகினர் மிகுந்த ஆர்வத்தோடு டெல்லி வந்தனர். அந்த மாநிலத்தில் (70) எழுபது தொகுதிகள் அடங்கிய சட்டப் பேரவை இருக்கிறது. டெல்லியிலும் எழுபது தொகுதிகள்தாம் உள்ளன.

உத்தரகாண்டம், உத்திரப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலம். இதற்கு முதலில் உத்ராச்சலம் என்று பெயரிட்டனர். பின்னர் உத்தரகாண்டம் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

இந்த மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் 24 தொகுதிகளில் முஸ்லிம்கள் 35 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வாழ்கின்றனர். பெரும்பாலும் மலைப்பிரதேசமாக உள்ள இந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் மார்க்கப்பற்று, பிடிப்பு, ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சட்டசபையில் மூன்று முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மூவரும் பகுஜன் சமாஜ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள். உத்தரகாண்ட முஸ்லிம் லீக் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறது. முஸ்லிம் லீக் 14 சட்டமன்ற தொகுதிகளில் பலமாக இருக்கிறது. தற்போது விகாஸ் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. இதில 86 ஆயிரம் வாக்குகள், அதில் 34,500 முஸ்லிம் வாக்குகள். இங்கே 65 மஸ்ஜிதுகளும், 18 மதரஸாகளும் உள்ளன. முன்பு இதில் முஸ்லிம் லீக் 120 வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. தற்போது இடைத் தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்போடு அந்த மாநில நிர்வாகிகள் வந்தனர். அவர்களின் ஆர்வத்துக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் நல்வாழ்த்துக்ளைத் தெரிவித்தேன். வடபுலத்தில் முஸ்லிம் லீகின் சார்பில் சிறிதளவு பொருளாதார உதவிகள் புரிந்தால் போதும்@ அதிசயம் ஏற்படும் அளவுக்கு முஸ்லிம் லீகினர் அரசியல் நடத்துவர் என்ற உண்மை மட்டும் தெளிவாகப் புரிந்தது.

மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஸிதாபா, மால்டா, நதியா ஆகிய மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வந்து டெல்லியில் என்னைச் சந்தித்து அவர்களின் மாநில முஸ்லிம் லீக் வளர்ச்சி குறித்து ஆலோசனையை நடத்த வந்தவர்கள் என்னிடம் தந்த அவர்களின் முகவரிகளைப் பார்த்தேன்.

எனக்கு ஒரே வியப்பு! ஆச்சரியம்!

எல்லோரும் பட்டதாரிகள் பலர் மூன்று எம்.ஏ. படித்தவர்கள் சிலர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் சிலர் கல்லூரி விரிவுரையாளர்கள் சிலர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் அரசு மதரஸா கல்வி நிறுவனங் களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள். முஸ்லிம் லீகில் அரசு ஊழியர்களும், கல்வியாளர்களும், மார்க்க அறிஞர் களும் மேற்கு வங்கத்தில் இருக்கிறார்கள். தமிழக நிலைமையை நினைத்து ஒப்பிட்டுப் பார்த்த போது, மிகுந்த வருத்தமும், வேதனையும்தான் ஏற்பட்டது.

எல்லா கட்சிகளிலும் அரசு பணிபுரிவோர் அங்கம் வகிக்கிறார்கள். முஸ்லிம் லீக் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் முஸ்லிம் லீக் ஆர்வலர்களை எல்லாத் தரப்புகளில் இருந்தும் இயக்கத்தில் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என்ற தெளிவு பிறந்தது! இனி வழிதான் திறக்க வேண்டும.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template