அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, October 27, 2009

லால்கான் பள்ளிவாசல் சொத்துக்களை பாதுகாக்க கோரி

சிதம்பரம்,அக்.27-
லால்கான் பள்ளிவாசல் சொத்துக்களை பாது காக்க வலியுறுத்தி சிதம் பரத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் லால்கான் பள்ளி வாசலில் ஊழல் நடந்த தாகவும்,அந்த பள்ளிவாசல் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் சிதம்பரம் ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்பு லால்கான் பள்ளிவாசல் மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க.மாநில துணை செயலாளர் ஜின்னா தலைமை தாங்கினார்.சிதம்பரம் வர்த்தக சங்கம் கட்டுமான பொருள் வணிகர் கூட்டமைப்பு தலைவர் அன்சாரி, நகரசபை உறுப்பினர் முகமது ஜியாவுதீன், இஸ் மாயில், முகமதுஅலி, அல்தாப் உசேன்,தாஜீதீன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷேக் தாவுத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சுக்கூர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மெகராஜ்தீன், முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் முகமது ஜெக் கரியா, மூப்பனார் பேரவை தலைவர் முகமது மக்கீன், ரகமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர பொருளாளர் தாஜிதீன் நன்றி கூறினார்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template