அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, October 21, 2009

சிறுபான்மையினரான நமக்கு பல அரசியல் கட்சிகள் எதற்கு?

லால்பேட்டை , அக் 21-
சிறுபான்மையினரான நமக்கு பல அரசியல் கட்சி கள் எதற்கு? முஸ்லிம்கள் அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒன்றுபட வாரீர் என தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ. எம். அபூபக்கர் அழைப்பு விடுத்தார்.

கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது-

வரலாற்று சிறப்பிற் குரிய லால்பேட்டை நகரில் சமுதாயத்தின் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற் றிட ஏற்பாடு செய்த தாய்ச் சபையின் செயல்வீரர்க ளுக்கு தலைமையின் சார் பில் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். லால்பேட்டையில் உள்ள மன்பவுல் அன்வர் அரபிக் கல்லூரி துவங்கப்பட்டு பல ஆயிரம் உலமாக்களை இச்சமுதாயத்திற்கு வழங்கி யிருக்கின்றது.

இப்பெரு நகரில் தாய்ச் சபையின் அழைப்புப் பணிக்காக நாங்கள் வந்தி ருக்கின்றோம். முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு எதிர்வரும் அக்டோபர் 24ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கின்றது. முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கின்றோம். இக்கூட் டம் தாய்ச்சபை வரலாற் றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் பத்து லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென தலைவர் பேராசிரியர் அவர்கள் நம்மை பணித் திருக்கின்றார்கள். உறுப் பினர் சேர்ப்புப் பணியை துரிதப்படுத்திடவும், அனைவரையும் உற்சாகப் படுத்திடும் நோக்கிலும் மூன்று வழிமுறைகளை கையாள வேண்டும். முத லில் முஸ்லிம் லீகில் இருக் கக் கூடிய உறுப்பினர்கள் அனைவர்களையும் நேரில் சந்தித்து ஈடுபாடு கொள்ள செய்ய வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்து ஈகோ பார்க் காமல் செயலாற்ற வேண் டும்.

அடுத்ததாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புக் களில் இருக்கக் கூடியவர்க ளையும் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீகில் பணிக ளாற்ற அழைக்க வேண் டும். பல்வேறு அமைப்புக் களிலிருந்து கொண்டு சமூக நலப் பணிகளாற்று வதில் எந்த தவறும் இல்லை. நாம் கூறுவதெல் லாம் அர சியல் ரீதியாக தாய்ச்சபையில் ஒன்று படுங்கள், ஆதரவு தாருங் கள் சிறுபான்மை யினராக இருக்கக் கூடிய நமக்கு இரண்டு - மூன்று அரசியல் கட்சிகள் தேவை இல்லை. இதனால் எந்த நன்மையும் இல்லை. தேசிய லீக், த.மு.மு.க, ம.ம.க, தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்களிலிருப்பவர்களும் சமுதாய பணியில் இருக்கக் கூடியவர்கள். நாம் எல் லாம் ஒரு கொடியில் பூத்த மலர்கள் தான்.

அனைவர் களையும் அரசியல் ரீதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒன்றுபடுத்தும் முயற்சியை நாம் தொடர்ந்து செய்ய வேண் டும்.

தேசிய லீக் துவங்கிய இடம் லால்பேட்டை, எனவே நாங்கள் இவ்வி யக்கத்தை கலைக்க மாட் டோம் என்று சிலர் இங்கு கூறி வருவதாக நான் அறிகி றேன். நான் அவர்களுக்கு பணிவோடு தெரிவிப்பது , இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீகை கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் நிறுவிய போது, தாய்ச் சபையை இந்நாட்டில் நிலைக்க உதவியவர்கள், உழைத்த வர்கள் லால்பேட் டையை சேர்ந்தவர்களும், இங்கு பயின்ற உலமா பெருமக் களும்தான்.

இதை பாதுகாக்க நீங்கள் கடமை பெற்றிருக் கின்றீர்கள் அல்லவா! சில காரணங்களால் தேசிய லீக் எனும் இயக்கம் தோன்றி இருக்கலாம். சிராஜுல் மில்லத் அவர்களாகட்டும் பன் மொழிபுலவர் அப்துல் லத்தீப் சாஹிப் ஆகட்டும் இவரும் சமுதாய ஒற்று மையை விரும்பியே வாழ்ந் தனர்.

சிராஜுல் மில்லத் தின் மறைவிற்கு ஒரு மாதத் திற்கு முன் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொன் விழா மாநாட்டின் போது அப்துல் லத்தீப் அவர் களுக்கு சிராஜுல் மில்லத் கைப்பட கடிதம் எழுதி தாய்ச்சபைக்கு அழைத் தார். அதே போல் சிரா ஜுல் மில்லத் மறைவிற்கு பின் வேலூரில் நடை பெற்ற இந்திய தேசிய லீக் மாநில மாநாடு நுழைவு வாயிலுக்கு சிராஜுல் மில்லத் பெயர் சூட்டப்பட் டது.

என்றும் இல்லாத அளவிற்கு இன்று முஸ்லிம் லீகின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பல்வேறு அமைப்பி னரும் தாய்ச்சபையில் இணைந்து வருகின்றனர். காஷ்மீரில் உள்ள கல்வி யாளர்களும், சமூக சேவ கர்களும், ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்களும் முழுமையாக தங்களை முஸ்லிம் லிகில் இணைத் துக் கொள்ள வற்புறுத்தி வருகின்றனர்.

இன்று தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களின் உண்மையான தோழன் முஸ்லிம் லீக் தான் என்று உணர்ந்து முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்.

அனைத்து தரப்பு சிறு பான்மையினரையும், தாழ்த்தப்பட்ட மக்களை யும் தாய்ச்சபையில் இணைத்து சமூக நல்லி ணக்க - சகோதரத்துவத் திற்கு கைகொடுக்கும் இயக்கம் முஸ்லிம் லீக் என்பதை நிலைநிறுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட தாய்ச் சபையின் உறுப்பினர் சேர்ப்புப் பணியில் முழு கவனம் செலுத்திட வேண் டும். மாநில தலைமை அறி விக்கக்கூடிய திட்டங்களை ஏதோ நாங்கள் சில பேர் கூறி வருகின்றோம் என்று இல்லாமல் தாய்ச்சபை அனைத்து மாவட்ட - நகர நிர்வாகிகளும் முழு கவனம் செலுத்தி, ஈடுபாட்டுடன் உறுப்பினர் சேர்ப்புப்பணி களை தீவிரப்படுத்த வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.

Thursday, October 15, 2009

Monday, October 12, 2009

உலகில் முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரிப்பு...

வாஷிங்டன்:உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த சமூகத்தவரின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180 கோடி வரை முஸ்லிம் சமூகத்தவரின் எண்ணிக்கை உள்ளது. லெபனான் முஸ்லிம் நாடு. இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். இதே போல சிரியா முஸ்லிம் நாடு. ஆனால் இந்தநாட்டை விட சீனாவில் முஸ் லிம்கள் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மற்றும் லிபியாவை விட, ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானிலும், எதியோப்பியாவிலும் சரிவிகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். உலகம் முழுவதும் 220 கோடி கிறிஸ்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.

அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமூதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக் கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவு வேறுபாடு ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. ஈரான், ஈராக்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

புதிய வரலாறை தொடர புறப்பட்டு வாருங்கள்! திருப்புமுனைக்கு திருச்சியில் வடிவம் கொடுப்போம்! -கே.எம்.கே


திருச்சியில் வரும் 23, 24 தேதிகளில் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடுகின்றனர். வருங்காலத்துக்கு உரிய செயல் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்த நாடுகின்றனர்.

தமிழகமெங்கும் உள்ள அறுநூறுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வருவர், புதிய சிந்தனைகள் தருவர்.

திருச்சிராப்பள்ளி, தமிழகத்தின் நடுப்பகுதியாக - மைய இடமாக இருப்பதால், அனைவரும் வரவும், அரிய பெரும் ஆலோசனைகளைத் தரவும் முடியும் என்பதற்காகவே இந்த மாநகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் திருச்சியைப் பற்றிக் கூறும் போதெல்லாம் ஹதமிழகத்தின் நெஞ்சத் தாமரை என்று வருணிப்பார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் ஆக்க விரும்பினார் என்பது வரலாற்றுச் செய்தி.
தி.மு.க. இன்றைக்கு மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் கட்சியாக வளர்ந்திருக்கிறது.
இந்த இயக்கம் தேர்தலில் முஸ்லிம் லீக் வரலாற்றில் திருச்சிக்குத் தனிச் சிறப்புகள் பலப்பல உண்டு. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் லக்னோவில் கூடி முஸ்லிம் லீக் கலைக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய போது, அதே கால கட்டத்தில் திருச்சி தேவர் மன்றத்தில் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கூடி, சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக் தொடரும் - நீடிக்கும் - நிலைக்கும் என்று தீர்மானம் போட்டு இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த பூமி இந்த திருச்சிதான்.

சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீகிற்கு எதிராக வீசிய சூறாவளியால் பாதிக்கப்படாத திருச்சி முஸ்லிம் லீக் கோட்டையாகவே இருந்தது. திருச்சி முஸ்லிம் லீக் ஊழியர் திலகங்களாக விளங்கியவர்கள் காயிதெ மில்லத் அவர்களின் அத்யந்த நண்பர்கள் ஆனார்கள். அவர் களின் அரசியல் ஆலோசகர்களாகத் திகழ்ந்தார்கள். காயிதெ மில்லத் காலத்தில் திருச்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இரண்டாவது தலைமையகமாகவே செயல்பட்டது.

வித்வான் ஏ.கே. ஜமாலி, பாஷாபாய், நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப், அப+பக்கர் ஆகியோர் ஒன்றுபட்டு ஹமறுமலர்ச்சி வார இதழ் துவக்கினர். ஆசிரியர் ஏ.எம். ய+சுப் அவர்களின் எழுத்தும், பாஷா சாஹிபின் கொள்கை விளக்கமும் தாங்கிய மறுமலர்ச்சி தமிழகத்தில் முஸ்லிம் லீகை எழுச்சி கொள்ளச் செய்தது - கேரளாவில் கிளர்ந்து எழ வழிகாட்டியது.

1958 ஜனவரி 11, 12 தேதிகளில் திருச்சியில் நடத்தப் பட்ட முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடுதான் - நூலாசிரியர் ரஜாகான் எழுதியுள்ளபடி அந்த மாநாட்டில் திரண்ட இருபது ஆயிரம் முஸ்லிம் லீகர்கள் எழுப்பிய தக்பீர் முழக்கம் தான் காயிதெ மில்லத் அவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டியது. முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தந்தது.

இதே திருச்சி காட்டூரில் 1962-ல் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில்தான் முஸ்லிம் லீகின் வளர்ச்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் வகை காணப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் அவர்களால் மஜ்லிசே முஸாவரத் அமைப்பு உருவாக்கப் பட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் முஸ்லிம் லீகுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை திருச்சி காட்டூர் முஸ்லிம் லீக் கூட்டம் வலியுறுத்தியே வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாமெல்லாம் பெருமிதம் கொள்ளும் வகையில் முஸ்லிம் லீக் வரலாறு என்று ஒரு முழுமையான நூலை இந்தியாவில் யாரும் எழுதவில்லை. கேரளாவில்கூட ஒரு வரலாற்று நூலை யாரும் யாத்துத் தரவில்லை. மறுமலர்ச்சி ஏட்டின் துணை ஆசிரியர் பொறுப்பு வகித்த எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் தாம் இந்த சரித்திர சாதனையைச் செய்து முடித்திருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்பு திருச்சிக்கு உரியதுதான்.

கடந்த அறுபது ஆண்டுகளாகப் பலப்பல வரலாற்று நிகழ்வுகளுக்கு உரிய தலமான திருச்சியில்தான் அக்டோபர் 23 வெள்ளிக்கிமை மாலை மாநில நிர்வாகிகள் கூட்டமும் அக்டோபர் 24 சனிக்கிழமை காலை மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெறுகிறது.

திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், முன்னணித் தொண்டர்களும் கூட்ட ஏற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொண்டு அனைவரையும் வரவேற்க ஆர்வமிகுதியுடன் காத்திருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்றைக்கு தேச மக்களால் வரவேற்கப்படும் இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை மேலும் வலிமை யுள்ளதாகவும், புதிய பொலிவுமிக்கதாகவும், சமுதாயத் தின் கனவுகளை நனவாக்கித் தரும் அரசியல் நிறுவன மாகவும் வளப்படுத்த இந்தப் பொதுக்குழு பயன்பட வேண்டும்.

புதிய வரலாற்றைத் தொடர புறப்பட்டு வாருங்கள் திருச்சிக்கு!தீர்க்கமான முடிவு எடுப்போம்! திருப்புமுனைக்கு வடிவம் கொடுப்போம்!

Friday, October 9, 2009

முதியோர்கள் தினம் - இஸ்லாமிய பார்வையில்

முதியோர்கள் தினம் - இஸ்லாமிய பார்வையில்

மொளலவி ஷம்சுத்தீன் காசிமி உரை

Wednesday, October 7, 2009

இந்தியன் நேசனல் லீக் சென்னையில் ஆர்ப்பாட்டம்...!

இந்தியன் நேசனல் லீக் வருகின்ற அக்டோபர் மாதம் 14 ம் தேதி சென்னை, மெமோரியல் ஹால் முன்பாக ஒரு மாபெரும் அர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் கடந்த செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை என்று 10 கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுவித்தது வெறும் கண்துடைப்பு நாடகமே. அவர்கள் 10 பேரும் தண்டனை காலம் முடிந்து சிறது நாட்களில் தானாக விடுதலை ஆக இருந்தவர்கள்தான்.

உண்மையில் சிறையில் வாடி வதங்கும் 56 கோவை குண்டு வெடிப்பு சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் இந்த 10 பேரை மட்டும் கண்துடைப்பாக விடுதலை செய்தது நமது முதல் அமைச்சர் நமது சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம் ஆகும்.

இதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template