அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, September 8, 2009

முதல்வரை சந்தித்து சிறைவாசிகள் விடுதலை செய்ய முஸ்லிம் லீக் கோரிக்கை...

வரும் அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் சமூக நல்லிணக்க மாநாட்டை தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது.

இம் மாநாட்டில் முதல்வர் கலைஞர் பங் கேற்று இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த மூன்று அறிஞர் பெரு மக்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறார்.

கலைஞருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர், மாநிலச் செயலா ளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகி யோர் இன்று (6-09-09) ஞாயிறு காலை 9.45 மணிக்கு முதல்வர் கலை ஞரை அவரது கோபால புரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாட்டில் உலமாக் கள் பணியாளர் நல வாரி யம் அமைத்தற்காக நன்றி தெரிவித்தனர். அதற்கு முதல்வர் மகிழ்ச்சி தெரிவித் தார்.

தமிழ்நாட்டிலுள்ள மதரஸாக்களில் பயில் கின்ற மாணவர்கள் அனை வருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனைப் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை

அறிஞர் அண்ணா நூற் றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ் நாட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டு சிறைவாசம் அனு பவித்த மத மோதல், குண்டு வெடிப்பு, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் தண்டனை பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், 12 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை சிறைவாசியாக சிறையில் உள்ள குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 விசா ரணை சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்பு கொண்டி ருப்பதாகவும் அவர்களின் பதிலை எதிர்பார்ப்பதாக வும் முதல்வர் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் தங்க ளுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இக் கோரிக் கையை அவசியம் நிறை வேற்றித் தருமாறு முஸ்லிம் லீகினர் முதல்வரிடம் வலி யுறுத்தினர்.

சிறைவாசிகளை விடு விக்கும் வேண்டுமென திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, பாரதீய ஜனதா கட்சி தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் கோரிக் கையாக வைத்துள்ளதை யும் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கருணை உள்ளத்தோடு இதனை பரிசீலித்து இக் கோரிக்கையை நிறை வேற்றித்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.

சிராஜுல் மில்லத் பிறந்த நாள் சமூக நல்லிணக்க மாநாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பிறந்த நாள் அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. இந்த நாளை சமூக நல்லிணக்க நாளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனுசரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து அந்நாளில் சமூக நல்லி ணக்க மாநாடு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத் தப்படுகிறது.

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த சான்றோர்கள் மூவரை தேர்வு செய்து அவர்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள் ளது.

இம் மாநாட்டில் தமிழ் நாடு முதல்வர் கலைஞர் பங்கேற்று இந்த விருதை வழங்கி விழாப் பேரு ரையாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் இம் மாநாட்டில் பங்கு கொள்ள இசைவு தெரிவித்தார்.

Monday, September 7, 2009

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

சென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.

சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.

சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.

இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள்.

முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.

சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.

மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.

சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.

சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக

Thursday, September 3, 2009

Daily Live Bayan

Bayan Insha Allah India Time: Chennai From 11/09/1430 (01/09/2009) onwards there will be live Bayan (Tamil) by As Sheikh Mufthi Omar Sheriff Insha Allah (Untill Notice)... India time 10:00 - 11:00 PM. Please Click Here to go to…

Thursday, August 27, 2009

TNTJ மாணவரணி சனி கிழைமை (29/08/2009) அன்று நடத்தும் இப்தார் நிகழ்ச்சிகள், இன்ஷா அல்லாஹ்

1.பரங்கிப்பேட்டை யில் (கடலூர் மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், கோட்டர் தங்கறை தெரு, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்சிறப்புரை : Dr.S. ஜாபர் அலி.P.hdதொடர்பிற்கு : 9790325478அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர் மாவட்ட மாணவர் அணி.

2. ஆடுதுரை அவனியாபுரத்தில் (தஞ்சை மாவட்டம் )
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், பாத்திமா நகர், ஆடுதுரை அவனியாபுரம், தஞ்சை மாவட்டம்சிறப்புரை : A.அப்துல் ரஹ்மான்.(M.Sc) .-மாவட்ட மாணவர் அணி செயலாளர்தொடர்பிற்கு : சாதிக் பாஷா- 9443564240அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ தஞ்சை (வடக்கு),மாவட்ட மாணவர் அணி.

3. இராஜகம்பீரத்தில் (சிவகங்கை மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குசிறப்புரை : A.ஷாகுல் (மாவட்ட மாணவரணி செயலாளர்)இடம் : TNTJ மர்கஸ், இராஜகம்பீரம், சிவகங்கை மாவட்டம்தொடர்பிற்கு : 9003811959அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ சிவகங்கைமாவட்ட மாணவர் அணி.

4. மந்தாரபுதூரில் (கன்னியாகுமரி மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், மந்தாரபுதூர், கன்னியாகுமரி மாவட்டம் சிறப்புரை : அப்துல் வதூத்.(B.E) - .-மாவட்ட மாணவர் அணி செயலாளர்தொடர்பிற்கு : 9944179481அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கன்னியாகுமரி மாவட்ட மாணவர் அணி.

5 ஆலங்குடியில் (புது கோட்டை மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ அலுவலகம், பெரிய பள்ளிவாசல் அருகில், ஆலங்குடி, புது கோட்டைதொடர்பிற்கு : 9043486280அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புது கோட்டை மாவட்ட மாணவர் அணி.

6. புதுமடத்தில் (இராமநாதபுரம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், வடக்கு தெரு பஸ் நிலையம் அருகில், புது மடம், இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பிற்கு : யாஸின் - 9894652633அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.

7. இருமேனியில் (இராமநாதபுரம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், பாபுல் மாலிக் வளாகம், இருமேனி, இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பிற்கு : யாஸின் - 9894652633அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.
.

Tuesday, August 25, 2009

அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை இழந்து தவிக்கிறேன்|||தலைவர் பேராசிரியர் இரங்கல்

மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் மறைவு குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி-

தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்த தமிழ் அறிஞர் - இலக்கியச் செல்வர் - முஸ்லிம் லீகின் மாபெரும் வழிகாட்டி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் இரண்டாவது புதல்வர் அப்துல் ஹக்கீம் அவர்கள் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்து இன்று (25-08-2009) செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது. சகோதரர் அப்துல் ஹக்கீம் இளமைக்காலம் முதல் முஸ்லிம் லீக் இயக்கத்தோடு தன்னை பின்னிப் பிணைத்து கொண்டு வாழ்ந்தவர். அடையாறு பிரைமரி முஸ்லிம் லீக் அமைப்பதில் முன்னணியில் இருந்தவர்.

காலப்போக்கில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாள ராக உயர்ந்தார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கிடைத்தது.

தலைமை நிலையச் செயலாளராக அவர் செயல் பட்ட காலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும் - எனக்கும் சட்டரீதியான பல்வேறு இடைய+றுகளும், ஏராளமான வழக்குகளும் நடைபெற்றன. அவைகளில் நாம் வெற்றியடைவதற்கு அரிய ஆலோசனைகளையும், உரிய தகவல்களையும் தந்து பெரும் ஒத்துழைப்பு அளித்தார்.

சிறந்த நிர்வாகியாகவும், தொழில் வல்லுநராகவும் வெளிநாடுகளோடு தொடர்புடைய பல தொழில் அதிபர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் பெற்ற வராகவும் விளங்கியவர். அவருடைய அறிவுரையாலும், வழிகாட்டுதலாலும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் இன்றைக்கும் நன்றி கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளிலும், தன்னை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பின்னர் தீவிரமாக இயக்கப்பணிகளில் அரசியல் கூட்டணி முடிவுகள், தேர்தல் சின்னம் தேர்வு செய்தல் போன்ற பிரச்சினை வரும்போதெல் லாம்ஆலோசனை சொல்லி வந்தார். என்னைப் பொறுத்த வரையில் பல நேரங்களில் அவருடைய ஆலோசனை பெற்று அதன்படி முடிவெடுத்தேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிட அவர் ஆலோசனை காரணமாக இருந்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

எம்.ஏ. பொது நிர்வாக பட்டம் பெற்று தேறியவர். அச்சுக்கலையில் தனிப்பட்டமும் பெற்றவர். படித்துக் கொண்டேயிருப்பதில் அவர் தந்தையை பின்பற்றி வாழ்ந்த சிறப்பு அவருக்கு உண்டு.

முஸ்லிம் சமுதாயத்திற்கும் - முஸ்லிம் லீகிற்கும் நாளேடு இல்லை என்ற குறையை நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காக ஹமெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குவ தற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர். தமது தந்தை சிராஜுல் மில்லத் அவர்களோடு இணைந்து நிறுவனத்தை பதிவு செய்து ஹமணிச்சுடர் நாளிதழை வெளியிடுவோராக இருந்து பணியாற்றியவர்.

1987-லிருந்து ஹமணிச்சுடர் நாளேட்டை சிறந்த ஒரு பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சி மேற்கொண் டார். 1996-ல் சிராஜுல் மில்லத் அவர்கள் ஹமணிச்சுடர் நாளிதழுக்கு என்னைப் பொறுப்பாளராக்கிய சமயத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டில் பிரபலமான நாளேடாக மணிச்சுடரை ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகமூட்டியவர். இறுதி வரை மணிச்சுடர் வெளியீட் டாளராக தொடர்ந்து இருந்து மிகப் பெரிய சேவையை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.

அந்த அன்புச் சகோதரரை - நல்ல ஆலோசகரை - அப்பழுக்கற்ற முஸ்லிம் லீகரை - அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை நாம் இழந்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய துணைவியார், ஒரே புதல்வி ஆகியோருக்கு அல்லாஹ் சபுரன் ஜமீல் எனும் உயர்ந்த உன்னதமான தாங்கும் சக்தியை அருள்வானாக. அவர் பிரிவால் வாடும் அவர்களின் சகோதரர்கள் அப்துல் ஹமீத் பாகவி, அப்துல் வஹாப், சகோதரிகள் அலவியா, ஃபாத்திமா முஸப்பர் மற்றும் உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் வானாக. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுவுலக மேலான பதவியை வழங்கி அருள்வானாக!

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முஸ்லிம் லீக் இயக்கத்தில் நிரப்பி தருவதற்கு தக்கவர்களை அவருடைய மறைவிற்கு இதயம் நிறைந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்!
இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது இரங்கல் செய்தியில் குறிபிப்பிட்டுள்ளார் .

தளபதி ஷபிகுர்ரஹ்மான்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரும் மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத்தின் புதல்வருமாகிய அல்ஹாஜ் அப்துல் ஹக்கீம் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்ததாக தளபதி ஷபிகுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார் .

மக்காவில் இருந்து அனுப்பியிருக்கும் இரங்கல் செய்தியில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளராக சிறப்பாக பணியாற்றி தொடர்ந்து மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளராகவும் இன்றைய அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்த அப்துல் ஹக்கீம் அவர்களின் இழப்பு தாய்ச்சபை முஸ்லிம் லீக்கினருக்கு பேரிழப்பு அன்னாரை பிரிந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஷப்ரன் ஜமிலை வழங்க பிரார்த்திப்பதாக அவர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி இரங்கல்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராகவும், அதன் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு எதிராகவும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு மிகப் பெரும் தொல்லைகள் தரப்பட்ட சமயத்தில் இந்த வழக்கு களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு அரிய ஆலோசனைகளையும் - உரிய தகவல்களையும் தந்து உறுதியாக ஒத்துழைத்தவர் அப்துல் ஹக்கீம். இந்த வழக்குகள் அனைத்திலிருந்து இறையருளால் நாம் வெற்றியடைந்தோம்.

முஸ்லிம் லீகில் கொள்கை உறுதிமிக்க அவரது இழப்பு தாய்ச்சபைக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
வெ. ஜீவகிரிதன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள் .

ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனை குழு இரங்கல்

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப் பினர்களான எம். அப்துல் ரஹ்மான் (வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர்), எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் (அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்), எச். அப்துல் பாசித் (வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர்), பேராசிரியர் குளச்சல் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

வெளியீட்டாளர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவுக்கு மணிச்சுடர் பணியாளர்கள் இரங்கல்

மணிச்சுடர் தமிழ் மாலை நாளிதழ் வெளியீட் டாளரும் மறைந்த சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலமான செய்தி அறிந்து எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் நல் அமல்களை ஏற்றுக் கொண்டு தன் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
-மணிச்சுடர் பணியாளர்கள்



மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளர்- சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் காலமானார்

சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வரும், மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலை 9.30 மணிக்கு கால மானார். ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக் கம் செய்யப்படுகிறது.

தாய்ச்சபையின் தனிப் பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் - நர்கீஸ் பானு தம்பதி யரின் இரண்டாவது புதல் வராக 05-12-1961-ல் பிறந்த வர் ஏ. அப்துல் ஹக்கீம். இவரது உடன் பிறந்த சகோதரர்கள் அப்துல் ஹமீது பாகவி, அப்துல் வஹாப் மற்றும் உடன் பிறந்த சகோதரி அலவியா, ஃபாத்திமா முஸப்பர் ஆகி யோர் ஆகும். இவருடைய துணைவியார் சமீமா, ஒரே மகள் இஸ்ரா.
எம்.ஏ. பொது நிர்வாகம் பட்டம் பெற்ற அப்துல் ஹக்கீம், அச்சுக்கலை நிபுணர் படிப்பையும் படித்துள்ளார். 1986-ம் ஆண்டு சிறுபான்மையினர் குரல் ஒலிக்க ஒரு நாளிதழ் தொடங்க வேண்டும் என சிராஜுல் மில்லத் முடிவெ டுத்த போது அதற்கான முழு பொறுப்பையும் ஏற்று மூத்த பத்திரிகை யாளர்களுடன் கலந்தா லோசித்து 1987-ல் ஏப்ரலில் மாதிரிப் பிரதியையும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி மணிச்சுடர் நாளிதழையும் கொண்டு வந்தார்.

1999-ம் ஆண்டு சிராஜுல் மில்லத் அவர் களின் மறைவுக்குப் பின் முஸ்லிம் லீகில் அவர் முழு நேர ஊழியம் செய்ய வேண்டும் என விரும்பி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இவரை மாநில தலைமை நிலையச் செயலாளராக நியமனம் செய்தார். பல அரசியல் மாநாடுகள், தேர்தல் பணிகள், பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்தி கட்சியின் வளர்ச் சிக்கு பெரும் துணை புரிந் தார்.

தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (மியாஸி) மற்றும் புதுக் கல்லூரியில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்துள்ளார்.
சென்னை அயன்புரத் தில் அமைந்துள்ள டிரஸ்ட் மருத்துவமனை யில் சிறுநீரக நோயாளிக ளுக்கான கவுரவ டிரஸ்டி யாக 2001-ம் ஆண்டு முதல் சேவையாற்றி வந்துள்ளார்.

2002-ம் ஆண்டு குடும்பத்துடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி யுள்ள இவர் இலங்கை, சிங்கப்ப+ர், மலேஷியா, ஸவ+தி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார்.
அமைதியான சுபாவ மும், அபாரமான ஆற்ற லும், அறிவு ஞானமும் மிக்க இவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளராக வும், அதன்பின் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக வும் பணி செய்து வந்துள் ளார்.

அவரது மறைவுக்கு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர் .
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template