அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Monday, August 4, 2008

ஹச் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்


ஹச் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் இருந்து இவ்வாண்டு ஹச் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக 11 ஆயிரம் பேர் மனு அளித்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 100 பேருக்கு மட்டுமே குலுக்கல் முறையில் அனுமதி கிடைத்துள்ளது.


குலுக்கல் முறையை அடியோடு கைவிட்டு விட்டு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி கிடைத்திடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுகுறித்;து தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template