அனைத்துலக இஸ்லா மியத் தமிழ் இலக்கிய மூன்றாம் மாநாடு - உலகளாவிய அளவில் அறிஞர் பெருமக்கள் குழுமி யிருந்த அரங்கு. சீரிய சிந்தனையாளர் களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
மாபெரும் மாநாட்டை நடத்தியதில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள் மேடையில் சோகம் ஆம்.
பொற்கிழி வாங்கிய சிந்தனையாளர்கள், தொகை குறைவு ஆகவே திருப்பித் தருகிறோம் என சொன்னதால்தான் அந்த சோகமும் - அதிர்ச்சியும்! எவர் சொல்லியும் சமாதானம் செய்ய முடிய வில்லை
அந்த நெருக்கடியான நேரத்தில்...
என்ன காரியம் செய் கிறீர்கள்.... காயல்வாசிகள் கொடுத்துப் பழக்கப்பட்ட வர்கள்.
அவர்களுக்கு வாங்கத் தெரியாது வர லாற்றை மாற்றி விடாதீர் கள். இந்த பிரம்மாண்டமான பந்தலைத் தாங்கி நிற்கும் தூண்களைப் பாருங்கள் அவைகள் கம்பங்களல்ல - இந்த மண்ணில் தோன்றி இஸ்லாமியத் தமிழுக்கு உரமேற்றிய மாணிக்கங் களான 130 புலவர்கள் - இந்த புலவர்களை தந்த மண்ணுக்கு களங்கம் ஏற்படுத்திவிடாதீர்கள் என ஒலிவாங்கியில் குரல் ஒலிக்கிறது
இந்த குரல் ஒலித்த நேரத்தில், ~தலைவரே! எங்கள் முடிவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்@ பொற்கிழியை தக்கவைத் துக்கொள்கிறோம் என கண்ணியமாக பதிலளித் தனர் பொற்கிழி வாங்கி யோர். பல்லாயிரக் கணக் கானோரால் நிரம்பி வழிந்த அரங்கமே தக்பீர் முழக் கத்தால் அதிர்ந்தது.
நிமிடப் பேச்சில் கோபப் பட்டவர்களையும் சந்தோ ஷத்துடன் சம்மதிக்க வைத்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?
தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஒரு பொதுக்குழு கூட்டம். கலகலப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென, ~நான் வெளி நடப்புச் செய்கிறேன் என்ற ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கி ஏன் என்கின்றனர் கூட்டத்தினர்.
~~தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முஸ்லிம் லீக் தலைவர்கள் சென்று பார்வையிட்டுள் ளனர். ஆனால், எங்கள் கூத்தாநல்லூரை அவர்கள் புறக்கணித்து விட்டனர். ஆகவேதான், இந்த வெளி நடப்பு என பதில் சொல்கிறார் வெளிநடப்பு செய்ய இருந்தவர்.
கூட்டத்தில் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவர் நிதானமாக பதில் சொன் னார், ~பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றவர்கள் முஸ்லிம் லீகின் தலைவர்கள்தான்@ கூத்தாநல்லூரிலேயே முஸ்லிம் லீகில் மிகப் பெரிய தலைவர் சாரண பாஸ் கரனார் இருக்கும்போது நாங்கள் செல்வது அவ்வளவு சரியாக இருக்குமா? என கேட்டார்.
பொதுக்குழு கூட்டம் மட்டுமல்ல. வெளிநடப்பு செய்ய இருந்த கவிஞர் திலகம் சாரண பாஸ்கர னாரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார். அந்தக் கூட்டத்தின் தலைமைப்பீடத்தை அலங் கரித்தவர் யார் தெரியுமா?
இப்படி மக்கள் மன்றம், கட்சிக் கூட்டம் என்று மட்டும் இல்லை.
தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஒரு நாள்...
~~எங்கள் முழு சக்தியை யும் திரட்டி இதை எதிர்க் கிறோம் என பேசுகிறார்... ஆளும் வரிசையில் அத்தனை பேரும் வாய்விட்டு சிரிக் கின்றனர். அவர்கள் சிரிப்பதற்கு காரணம்... அன்று சட்ட மன்றத்தில் முஸ்லிம் லீகிற்கு இரண்டே உறுப் பினர்கள்தான்! முழு சக்தி என்றதும் சிரித்தனர். சட்டமன்றத்தில் பேசிய வர் என்ன பதில் சொன் னார் தெரியுமா?
சிரிக்காதீர்கள் - சிரிக்க வைக்கப்படுவீர்கள்!
இந்த ஒரு வார்த்தை யைக் கேட்டு சட்டமன்றம் நிசப்தமானது. சிரித்தவர் களின் நாடி நரம்புகள் அடங்கின. கொஞ்ச நாட்களில் சிரித்தவர்கள் சிரிக்க வைக்கப்பட்டது நடக்கத்தான் செய்தது.
சட்ட சபையை ~நிசப்த மாக்கியது யார் தெரியுமா?...
இப்படி பட்டியல் போட் டுக்கொண்டே போகலாம்.
சட்டசபையில் முழங் கியவர், பொதுக்குழுவில் தலை மைப் பீடத்தை அலங்கரித்தவர் - உலகத் தமிழ் மாநாட்டில் பொற் கிழியை தக்க வைக்கச் செய்தவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அவர்கள்தான்.
அவர் தலைமை ஏற்றால் சபை அலங்காரம் பெறும். அவர் நாவசைந்தால் தமிழ் நளினமாடும். அருள் மறை குர்ஆனுக்கு முதன் முதலில் தமிழில் விளக்கவுரை எழுதிய அல்லாமா அப்துல் ஹமீது பாகவி - ஜெய்னப் பீவி தம்பதியருக்கு 1926 அக்டோபர் 4இல் பிறந்தவர் சிராஜுல் மில்லத்.
அப்துஸ்ஸமத் தேவைகளற்றவனின் அடிமை என்ற பொருள் பொதிந்த பெயரைத்தான் தன்பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தார் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி!
சிராஜுல் மில்லத் சமுதாயம் தன் தேவை களுக்காக இவரை தலைமை பீடத்தில் அமர வைத்த போது சமுதாயத்தின் ஒளிவிளக்கு என்ற பொருள் நிறைந்த பட்டத்தை சூட்டியது.
சிந்தனைச் செம்மல் தமிழ் கொஞ்சி விளை யாடிய அந்த நாவுக்கரசரை தமிழ், கூரும் நல்லுலகம் இப்படி அழைத்த போது - கருத்துச் சுரங்கமாகவும், காலப் பெட்டகமாகவும் பவனி வந்தவர்
பொது மேடைகளில் அவர் சொற்பொழிவை துவக்குவதில்லை வார்த் தைகளை தொடங்குவார் அதில் வரலாறு வலம் வரும் கருத்துக்கள் ஊற்றெடுக் கும். அவர் சாதனைகளை சொல்லிக் காட்டும்போது ஹமன்னிக்கத்தக்க பெருமிதம் கொள்வார்.
அவர் மகிழ்வை பரிமா றும்போது ஹபுளகாங்கித மடைவார்
என்ன அற்புதமான வார்த்தைகள்!
அறிஞர் அண்ணாவுக்கு இது நூற்றாண்டு!
அவரே இவரது தமிழுக்கு ரசிகர்.
ஒரு நிகழ்ச்சியில் இவர் பேசிக் கொண்டிருந்த போது அண்ணா மேடைக்கு வந்தார் இவர் பேச்சை முடிக்கச் சொன்னார்கள் - முடித்தார்.
ஒலிவாங்கி முன் அண்ணா வந்தார் நான் இங்கே பேசவரவில்லை@ அப்துஸ் ஸமதின் பேச்சை கேட்கத்தான் வந்தேன் பேசட்டும் என்றார் - இவர் பேசி முடித்த பின்தான் அண்ணா பேசினார்.
அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்தின் திருமணம்..... தலைவர்கள் அத்தனை பேரும் பங்கேற்று சிறப்பித்தனர்
வரவேற்றுப் பேசிய அண்ணா சொன்னார் - இங்கு ஏராளமான சொல் லாளர்கள் வந்துள்ளீர்கள், எல்லோருக்கும் பேச வாய்ப்பளிக்க நேரமில்லை உங்கள் அனைவர் சார்பாகவும் என் அன்புத் தம்பி மட்டுமே வாழ்த்திப் பேசுவார் என்றார்.
வந்திருந்த அனைவரும் நாவலரா, கலைஞரா என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பட்டென அழைத்தார் - அப்துஸ் ஸமத் என்று! இவரது இதழியல் வரலாறு இருபத்தெட்டாம் வயதில் மணிவிளக்கு மாத இதழில் தொடங்கி மணிச் சுடர் வார இதழ், அறமுரசு நாளிதழ், கிரஸண்ட் ஆங்கில இதழ், மணிச்சுடர் நாளிதழ் என விரிவடைந் தது.
அவற்றில் எழுதப்பட்ட ஆக்கங்களெல்லாம் வார்த் தைகளல்ல - வைரவரிகள் - சிந்தனைக் களஞ்சியங்கள்!
இவர் அரசியலில் ராஜ தந்திரி
1959இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் துறைமுகம் வட்டத்தி லிருந்து முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்றார்.
அதே ஆண்டுதான் கண்ணியத்தின் காவலர் காயிதே மில்லத் அவர்களை அறிஞர் அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தினார். இதனால்தான் 1962இல் தி.மு.க. வுடன் முஸ்லிம் லீக் கூட்டணி ஏற்பட்டது.
1975இல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் அதை எதிர்த்த காரணத்தால் 1976இல் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தி.மு.கவினர் தொல்லை களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
1977இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் - ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், ஜனசங்கம், லோக்தளம் ஆகியகட்சிகளை இணைத்து ஜனதாவை துவக்கினார். அது வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.
மொரார்ஜிக்கும், துணை பிரதமர் சரண்சிங்கிற்கும் ஏற்பட்ட மோதலில் நாடாளுமன்றம் கலைக் கப்பட்டு 1980 ஜனவரியில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸோடு தி.மு.க. விற்கு தோழமை ஏற்படுத்த இவர் முயற்சி மேற் கொண்டார். கலைஞரின் சம்மதத்தை பெற்று அவரது தூதுவராகவே டெல்லி சென்று இந்திரா அம்மை யாரை சம்மதிக்க வைத்தார்.
இந்திரா தமிழகம் வந் தார். ஒரே மேடையில் இந்திரா- கலைஞர் - அப்துஸ் ஸமத்!
ஹநேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக! - கலைஞர் அழைக்க, இந்திரா உரையாற்ற புன்னகை பூத்த முகத்தோடு இவர் பார்த்து மகிழ்ந்தார்.
டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை நடத்திக் கொண்டிருந் தபோது, இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள்...... 1990இல் டாக்டரை சந்தித்த இவர், சங்கம் நடத்தி சமூக பிரச்சனைக்காக சாலையில் இறங்கும் நீங்கள், கட்சி நடத்தி சட்டமன்ற நாடாளு மன்றங்களில் காரியம் சாதிக்கலாமே என ஆலோ சனை வழங்கினார்.
அதுவரை அரசியலே கூடாது என்ற நிலைப் பாட்டில் இருந்த டாக்டர் ராமதாஸ், சிந்திக்க தலைப் பட்டார்@ அதன் விளைவு தான் பாட்டாளி மக்கள் கட்சி! 1991 ஜூனில் நடை பெற்ற தேர்தலில் இக்கட் சியுடன் முஸ்லிம் லீக் தோழமை கொண்டு 18 இடங்களில் போட்டி யிட்டது. அதில் திருச்செந் தூர் தொகுதியில் நான் வேட்பாளன்.
கால் நூற்றாண்டு காலம் இவரது நிழலில் பவனி வர எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
இவருக்கு என் போன்றோர் செல்லப்பிள்ளைகள்.
எங்களை பேச விட்டு ஆசை பார்ப்பார்!
அவரோடு நாங்கள் ஒன்றாக பயணிப்பதில் ஆர்வம் கொள்வார்.
1975இல் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுதான் இளைஞர் முஸ்லிம் லீகிற்கு சட்டப்படி யான அங்கீகாரம் கிடைத்து, செங்கம் ஜப்பார் மாநில பொதுச் செயலாள ராகவும், நான் மாநில பொருளாள ராகவும் தேர்வு செய்யப் பட்டோம். இளைஞர் முஸ்லிம் லீகை பலரும் எதிர்த்த நேரத்தில் அடுத்த தலை முறை தயாராகட்டும் என உற்சாகப் படுத்தியவர்.
1994இல் நான் சிறையி லிருக்கும்போது அவர் கைப்பட எழுதிய இருபக்க கடிதம் நான் இன்றைக்கும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷம். அதிலுள்ள வரிகள் பலித்துவிட்டது. அவர் கேட்ட பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான்... அவர் வளர்த்து பாது காத்த வரலாற்றுப் பேரியக்கத்தில் கொள்கை பரப்புச் செயலாளனாக பணி செய்யும் பேற்றினை பெற்றுள்ளேன்.
அவர் ஆசை ஆசையாக எழுதிய மணிச்சுடர் நாளி தழில் நான் அமர்ந்து, எழுதும் பாக்கியத்தை பெற்றுள்ளேன்.
அவர் நல்ல தொண்டர் களை மட்டும் உருவாக்க வில்லை. அந்த தொண் டர்களை வழிநடத்த நல்ல தலைவரையும் தந்துவிட்டுச் சென்றுள்ளார். அந்தத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை முனீருல் மில்லத் தலைமையில் நாங்கள் சமுதாயப் பணி தொடரும்போது ஒவ்வோர் அடியிலும் சிராஜுல் மில்லத் வழிகாட்டுதல் இருந்து கொண்டேயிருக் கிறது.
ஆம்! அவர் அணையா விளக்கு! சமுதாயத்தின் மணிச்சுடர்!
My Blog List
-
-
ஜாகிர் உசேன் - தர்ஜுனா பேகம் திருமணம்16 years ago
-
-
லால்பேட்டை முஹிபுல்லா வஃபாத்16 years ago
Categories
- Dr .PERIYAR DASAN
- Dr K V S ஹபீப் முஹம்மத்
- Dr. அப்துல்லாஹ்
- IIT
- TNTJ புதிய கிளை உதயம்
- TNTJ நடத்திய தமிழக முதல்வர் வீடு முற்றுகை
- TNTJ மாணவரணி
- TNTJ மாணவர் அணி
- அடிக்கல் நாட்டு விழா
- அணையா விளக்கு
- அபூபக்கர்
- அப்துல் ஸமது
- அய்மான்
- அய்மான் சங்கம்
- அரசியல்
- ஆயங்குடி
- ஆர்ப்பாட்டம்
- இந்தியன் நேசனல் லீக்
- இப்தார் நிகழ்ச்சிகள்
- இரத்த தான முகாம்
- இலங்கையில்
- இலண்டனில்
- இலண்டன் மாநாட்டில் தமுமுக
- இஸ்லாமிய
- இஸ்லாம் கூறும் மனித உரிமை நிகழ்ச்சியின் புகப்படங்கள்
- உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்
- உலக அமைதிக்கு வழி ஓரிறை கொள்கை ஒன்றே
- உலகில் முஸ்லிம்களின்
- ஏ. அப்துல் ஹக்கீம் காலமானார்
- ஐ.ஏ.எஸ். தேர்வு:ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி
- ஐக்கிய ஜமா அத்
- ஒரு இலட்சம் பரிசு
- கடலூர் தேர்தல்
- கண்ணியமிகு காயிதெ மில்லத்
- கல்வி
- கல்வி அமைச்சருக்கு ஜவாஹிருல்லா கடிதம்
- காதலர் தினம்
- காயிதெ மில்லத் குறித்து ஆவணப்படம்
- காவல் துறையில் வேலை வாய்ப்பு
- குர்பானி
- கே.எம்.கே.அரிக்கை
- சமுதாயப் பார்வையில் ஒரு சட்ட மசோதா
- சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா
- சென்னையில்
- டிசம்பர் 6
- தமிழக அரசுக்கு நன்றி
- தமிழக மாநில மாநாடு
- தமிழ் இலக்கியக்
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
- தலைவருக்கு
- திருக்குர் ஆன் மாநாடு
- துணை முதல்வர் மு க ஸ்டாலினுக்கு முஸ்லிம் லீக் வாழ்த்து
- துபாய் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் இந்தியர்
- துபாய்.முஸ்லிம் லீக் தலைவர்
- தேர்தல் 2009
- தொலைபேசியில் குர்ஆன்
- நபிகளாரின் வரலாறு
- நீடூர் மிஸ்பாஹி
- படிக்காமல் வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய அவலம்
- பனாத்வாலா நினைவு நாள்
- பிப்ரவரி 14
- புதிய பள்ளிவாசல்
- புனித ஹஜ் பயணம்
- பெருநாள்
- பொருளாதார அடிமைகளின் விடுதலை...
- மணிச்சுடர்
- மணிச்சுடர் செய்திகள்
- மமக
- மனிதநேய மக்கள் கட்சி
- மாநாடு
- மீலாது விழா
- முதல்வரை சந்தித்து சிறைவாசிகள் விடுதலை செய்ய
- முதியோர்கள் தினம்
- முஸ்லிம் மருத்துவ மாணவர்கள்
- முஸ்லிம் லீக்
- முஸ்லிம் லீக் கோரிக்கை
- முஸ்லிம்கள்
- முஸ்லீம் லீக்
- யு எ இ
- ரங்கநாத் மிஸ்ரா
- ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்
- லால்கான் பள்ளிவாசல்
- லால்பேட்டை
- வரவேற்பு
- வழியனுப்பும் நிகழ்ச்சி
- விடுதலைப்போரில்
- வேண்டுகோள்
- வேலூர் நாடாளுமன்ற தொகுதி
- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
- ஜனத்தொகை அதிகரிப்பு...
- ஜாக் தலைவர்கள்
- ஹஜ்
- ஹாஜிகள்
Recent Comments
.
Sunday, October 4, 2009
Friday, October 2, 2009
புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகில் உள்ள பில்லூரில் ஏ.எம்.எச்.நகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.
விழாவுக்கு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ.கே.ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் பில்லூர் ரஹிமா மஸ்ஜித் தலைவருமான ஏ.எம். ஹனீஃபா ஹாஜியார் வரவேற்றார் அவ்வமையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்கஅணி செயலாளர் மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார் .
மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் செயலாளர் எம்.ஏ.சர்தார் நன்றி கூறினர்.
விழாவில் மாவட்ட மார்க்க அணி துணைசெயலாளர் மௌலான நூருல் அமின் மற்றும் பக்கிர் முகமத் ,சபீர் ,முகமத் யுஸுப் ,மிரான்,ஷெரிப்,லால்பேட்டை சல்மான் பாரிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்

விழாவுக்கு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ.கே.ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் பில்லூர் ரஹிமா மஸ்ஜித் தலைவருமான ஏ.எம். ஹனீஃபா ஹாஜியார் வரவேற்றார் அவ்வமையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்கஅணி செயலாளர் மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார் .
மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் செயலாளர் எம்.ஏ.சர்தார் நன்றி கூறினர்.
விழாவில் மாவட்ட மார்க்க அணி துணைசெயலாளர் மௌலான நூருல் அமின் மற்றும் பக்கிர் முகமத் ,சபீர் ,முகமத் யுஸுப் ,மிரான்,ஷெரிப்,லால்பேட்டை சல்மான் பாரிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்

Labels:
அடிக்கல் நாட்டு விழா,
புதிய பள்ளிவாசல்
Saturday, September 26, 2009
சேத்தியாதோப்பில் TNTJ புதிய கிளை உதயம்...!
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 23.09.09 புதன்கிழைமை மாலை 5 மணி அளவில் சேத்தியாதோப்பு சுற்றுலா மாளிகையில் மாவட்ட செயலாளர் D.முத்துராஜா தலைமையில் புதிய கிளை துவங்கப்பட்டது.
இதில் கிளை நிர்வாகிகளாக தலைவர் D.A.முஹமது ரபி,செயலாளர் M.அப்துல் சலாம் ,பொருளாளர் M.முஹமது ரபிக் ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மாவட்ட பொருளாளர் J.S.ஹாஜி அலி, மாவட்ட மாணவரணி A.ரைஸ்சுதீன், கலந்துகொண்டனர்,இதில் துபாய்-யிலுருந்து தாயகம் திரும்பிய பாஜில் ஹுசைன் (முன்னாள் மாவட்ட பேச்சாளர்) அவர்கள் நிர்வாகத்தை வழிநடத்தும் முறைகளை எடுத்துரைத்து சிறப்புரைஆற்றினார்,
Labels:
TNTJ புதிய கிளை உதயம்
Tuesday, September 8, 2009
முதல்வரை சந்தித்து சிறைவாசிகள் விடுதலை செய்ய முஸ்லிம் லீக் கோரிக்கை...
வரும் அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் சமூக நல்லிணக்க மாநாட்டை தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது.
இம் மாநாட்டில் முதல்வர் கலைஞர் பங் கேற்று இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த மூன்று அறிஞர் பெரு மக்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறார்.
கலைஞருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர், மாநிலச் செயலா ளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகி யோர் இன்று (6-09-09) ஞாயிறு காலை 9.45 மணிக்கு முதல்வர் கலை ஞரை அவரது கோபால புரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
தமிழ்நாட்டில் உலமாக் கள் பணியாளர் நல வாரி யம் அமைத்தற்காக நன்றி தெரிவித்தனர். அதற்கு முதல்வர் மகிழ்ச்சி தெரிவித் தார்.
தமிழ்நாட்டிலுள்ள மதரஸாக்களில் பயில் கின்ற மாணவர்கள் அனை வருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனைப் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை
அறிஞர் அண்ணா நூற் றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ் நாட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டு சிறைவாசம் அனு பவித்த மத மோதல், குண்டு வெடிப்பு, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் தண்டனை பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், 12 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை சிறைவாசியாக சிறையில் உள்ள குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 விசா ரணை சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்பு கொண்டி ருப்பதாகவும் அவர்களின் பதிலை எதிர்பார்ப்பதாக வும் முதல்வர் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் தங்க ளுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இக் கோரிக் கையை அவசியம் நிறை வேற்றித் தருமாறு முஸ்லிம் லீகினர் முதல்வரிடம் வலி யுறுத்தினர்.
சிறைவாசிகளை விடு விக்கும் வேண்டுமென திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, பாரதீய ஜனதா கட்சி தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் கோரிக் கையாக வைத்துள்ளதை யும் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கருணை உள்ளத்தோடு இதனை பரிசீலித்து இக் கோரிக்கையை நிறை வேற்றித்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.
சிராஜுல் மில்லத் பிறந்த நாள் சமூக நல்லிணக்க மாநாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பிறந்த நாள் அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. இந்த நாளை சமூக நல்லிணக்க நாளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனுசரிக்கிறது.
இதனைத் தொடர்ந்து அந்நாளில் சமூக நல்லி ணக்க மாநாடு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத் தப்படுகிறது.
சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த சான்றோர்கள் மூவரை தேர்வு செய்து அவர்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள் ளது.
இம் மாநாட்டில் தமிழ் நாடு முதல்வர் கலைஞர் பங்கேற்று இந்த விருதை வழங்கி விழாப் பேரு ரையாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் இம் மாநாட்டில் பங்கு கொள்ள இசைவு தெரிவித்தார்.
இம் மாநாட்டில் முதல்வர் கலைஞர் பங் கேற்று இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த மூன்று அறிஞர் பெரு மக்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறார்.
கலைஞருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர், மாநிலச் செயலா ளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகி யோர் இன்று (6-09-09) ஞாயிறு காலை 9.45 மணிக்கு முதல்வர் கலை ஞரை அவரது கோபால புரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
தமிழ்நாட்டில் உலமாக் கள் பணியாளர் நல வாரி யம் அமைத்தற்காக நன்றி தெரிவித்தனர். அதற்கு முதல்வர் மகிழ்ச்சி தெரிவித் தார்.
தமிழ்நாட்டிலுள்ள மதரஸாக்களில் பயில் கின்ற மாணவர்கள் அனை வருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனைப் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை
அறிஞர் அண்ணா நூற் றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ் நாட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டு சிறைவாசம் அனு பவித்த மத மோதல், குண்டு வெடிப்பு, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் தண்டனை பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், 12 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை சிறைவாசியாக சிறையில் உள்ள குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 விசா ரணை சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்பு கொண்டி ருப்பதாகவும் அவர்களின் பதிலை எதிர்பார்ப்பதாக வும் முதல்வர் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் தங்க ளுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இக் கோரிக் கையை அவசியம் நிறை வேற்றித் தருமாறு முஸ்லிம் லீகினர் முதல்வரிடம் வலி யுறுத்தினர்.
சிறைவாசிகளை விடு விக்கும் வேண்டுமென திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, பாரதீய ஜனதா கட்சி தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் கோரிக் கையாக வைத்துள்ளதை யும் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கருணை உள்ளத்தோடு இதனை பரிசீலித்து இக் கோரிக்கையை நிறை வேற்றித்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.
சிராஜுல் மில்லத் பிறந்த நாள் சமூக நல்லிணக்க மாநாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பிறந்த நாள் அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. இந்த நாளை சமூக நல்லிணக்க நாளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனுசரிக்கிறது.
இதனைத் தொடர்ந்து அந்நாளில் சமூக நல்லி ணக்க மாநாடு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத் தப்படுகிறது.
சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த சான்றோர்கள் மூவரை தேர்வு செய்து அவர்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள் ளது.
இம் மாநாட்டில் தமிழ் நாடு முதல்வர் கலைஞர் பங்கேற்று இந்த விருதை வழங்கி விழாப் பேரு ரையாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் இம் மாநாட்டில் பங்கு கொள்ள இசைவு தெரிவித்தார்.
Monday, September 7, 2009
ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே
சென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.
சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.
சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.
இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள்.
முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.
சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.
மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.
ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.
ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக
சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.
சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.
இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள்.
முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.
சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.
மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.
ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.
ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக
Labels:
முஸ்லிம் லீக்
Friday, September 4, 2009
Thursday, September 3, 2009
Daily Live Bayan
Bayan Insha Allah India Time: Chennai From 11/09/1430 (01/09/2009) onwards there will be live Bayan (Tamil) by As Sheikh Mufthi Omar Sheriff Insha Allah (Untill Notice)... India time 10:00 - 11:00 PM. Please Click Here to go to…

Subscribe to:
Posts (Atom)
